Skip to main content

Posts

Showing posts with the label #அறிவோம்ஈழம்

தலைவரை உருவாக்கிய களம்

தேசியத் தலைவருக்கும் தமிழகத்துக்கும் இடையில் இருந்த உறவு ஆழமானது. சிறு வயதில் இருந்தே அவர் செதுக்கிய, அவரை செதுக்கிய அந்த கலாச்சார தொடர்பு பற்றிய ஒரு சின்ன பதிவு. கடலுக்கும் அன்றைய(5/6/1956) பழைய சிலோனின் பாராளுமன்றத்திற்கும் இடையில் இருந்த ஒரு திறந்த வெளியில் boots கால்களால் தன் மகனும் மக்களும் ஏறி மிதிக்கப்படுவதை பார்த்தபடி ஒரு தந்தை உணர்வற்று அகிம்சையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தார். தந்தை செல்வாவின் மனதில் எந்த ஒரு அகிம்சை போராளியும் திருப்பி அடித்து விட கூடாது என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது. அகிம்சைக்கு சுயமரியாதையை விட பொறுமையே முக்கியம். அடிமையிலும் பொறுமையான அடிமை அகிம்சை.  தமிழர்களின் ஓலமும் சிங்களத்தின் சிரிப்பு சத்தமும் காலி முகத்திடலை ஆக்கிரமித்தது.. கோரிக்கை காகிதங்கள் காற்றில் பறந்தன.  ரெத்தம் கொட்ட ஒரு போராளியை தோளில் சுமந்தபடி, வவுனியா M.P C.சுந்தரலிங்கம் சிங்கள only சட்டம் நிறைவேற்றப்பட இருந்த அவைக்குள் நுழைந்தார். போராளியின் தலையில் இருந்து கொட்டும் ரெத்ததை பார்த்து கைகொட்டி சிரித்தது சிங்களம். அந்த கூட்...

மதிவதனி

'மதிவதனி' மதி என்றால் அறிவு அல்லது நிலவு என்று பொருள், வதனி என்றால் வதனம், முகம் என்று பொருள். 'வதனமே சந்திர பிம்பமோ?' என்ற பாடல் வரிகளை ஒரு பெயரில் அடக்க வேண்டும் என்றால் மதிவதனி என்று சொல்லலாம், ஆனாலும் 'அறிவு முகம்' என்ற விளக்கம் தான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன், ஏன் என்றால் மதிவதனிக்கும் கல்விக்கும் ஒரு நெருக்கம் உண்டு. கண்ணகியும், மணிமேகலையும் காத்தருளும் நாகர்களின் உறைவிடமாம் மணிபல்லவத்தில், மிஞ்சிய ஏழு தீவுகளில் ஒன்று இன்றைய நாகதீவாக, அந்த நாகதீவுக்கு கிழக்கே குறிகாட்டி நிற்கும் புங்குடுதீவில் ஒரு ஆசிரியருக்கு பிறந்தவள் தான் மதிவதனி. அந்த ஆசிரியர் மகள், இடம்பெயர்ந்த உறவுகளுக்கு யாழில் சிங்கள அரசால் கல்வி மறுக்கப்பட்ட போது, தன் மூன்று தோழிகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாள். அகிம்சைக்கு பலி கொடுத்த உயிர்கள் போதும் என்ற முடிவில் இருந்த ஒரு தலைவன், இந்த நாலு பெண்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருந்த செய்தி அறிந்து, அவன் தம்பிகளை அனுப்பி, அவர்களை காப்பாற்றினான். அந்த நாலு பெண்களில் ஒருத்தி பிற்காலத்தில் அவன் துணைவியாகுவாள் என்று அந்த தலை...

அகிம்சையின் உச்சம் திலீபன்

இந்தியா ஆயுதங்களை ஒப்படைக்க சொல்லி கேட்டுக்கொண்டது. புலிகள் அதற்கு இணங்கினார்கள். ஆயுதங்களுடன் தமிழ் இனத்தின் பாதுகாப்பையும் இந்தியாவின் கையில் தேசியத் தலைவர் ஒப்படைத்தார். தன்னை சுற்றி எல்லா திசைகளிலும் பகை சூழ்ந்திருந்த இக்கட்டான அந்த நிலையிலும், இந்தியாவின் வாக்குறுதியை நம்பி, பல மூத்த தளபதிகளின் விருப்பத்துக்கு மாறாக, ஆயுதங்களை இந்தியாவிடம் தலைவர் ஒப்படைத்தார். ராணுவ சீருடையில் இருந்த தலைவர், சிவில் உடைக்கு திரும்பினார். அமைதி வழியில்,இன விடுதலையை நோக்கி பயணித்தார். போர் கருவிகளை கிழே போட்டுவிட்டு, சனநாயக கருவியான அகிம்சையை புலிகள் கையில் எடுத்தார்கள். இந்தியா புலிகளை நம்ப வைத்து ஏமாற்றியது. இந்தியா புலிகளை நிராயுதபாணிகளாக்கிவிட்டு, வேட்டையாட தொடங்கியது. அன்று கோழைத்தனத்தின் முழு வடிவமாக திகழ்ந்தது இந்திய அமைதி காக்கும் படை. தன்னை சுற்றி சூழ்ச்சிகள் அரங்கேறுவதை அவதானித்த தலைவர், சற்றும் தளராது, அகிம்சை வழியில் தொடர்ந்து பயணித்தார். புலிகளின் அரசியல் போராளியாக இருந்த பேரான்மா திலீபன், அகிம்சையின் கரும்புலியாக மாறினான். அகிம்சை எனும் மலையின் உச்சத்தை தொடும் பயணத்தை ஆரம்பித்தான் திலீப...

இந்தியாவின் துரோகம்..

அண்ணன் திலீபன் இந்தியாவிடம் முன்வைத்த 5 கோரிக்கைகளில், தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வந்த • ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். என்பதும் ஒன்று. புலிகள் இந்தியாவிடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு அகிம்சை வழிக்கு திரும்பிய பின்பு, சிங்கள ராணுவ ஊர்காவல் படைகள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் ஊடாக புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை சிங்களமும் இந்தியாவும் இங்கும் அங்குமாக அரங்கேற்றி கொண்டிருந்தது. இந்தியாவின் வாக்குறுதியை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்து  நிராயுதபாணிகளாக நின்ற புலிகளை இந்த ஊர்காவல் படைகளும், ஒட்டுக்குழுக்களும் வேட்டையாட தொடங்கியது. இதையெல்லாம் எதிர்த்து தான் திலீபன் அகிம்சை வழியில் போராடினார். 'இந்திய அமைதி காக்கும் படை' புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பெற்றுக்கொண்டதை போல், மற்ற குழுக்களிடம் இருந்தும் ஆயுதங்களை பறித்திருக்க வேண்டும் தானே? அது தானே முறையான ஒரு "அமைதி காக்கும்" நடவடிக்கையாக இருந்திருக்கும்? அதை தானே திலீபனும் புலிகளும் விரும்பினார்கள்? அப்ப அதை செய்ய ராஜீவ் தயங்கியது ஏன்? இங்கே இந்தியாவின் உண்மைய...

தொடர்ந்து ஒலிக்கும் திலீபனின் குரல்

தியாக தீபம் அண்ணன் திலீபன் 5 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த 5 கோரிக்கைகளில், PTA எனும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான அரசியல் கைதிகளின் விடுதலையும் ஒன்று. இன்று வரை இந்த கோரிக்கை தமிழர் தேசத்தில் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது. பயங்கரவாத தடை சட்டம்(PTA) என்பது ஆயுத போராட்டத்தை முடக்குகிறோம் என்ற பெயரில், போராட்டத்தின் அரசியல் வெளியை முடக்க பயன்படுத்தப்பட்ட ஒரு ஒடுக்குமுறை கருவி. இந்த தடை சட்டத்தின் கீழ் ஒரு சாதாரண போராட்ட முழக்கம் அடங்கிய சுவரொட்டி ஒட்டுவது கூட ஒரு குற்றமாக கருதப்படலாம், அதன் அடிப்படையில் ஒருவரை 20 வருடங்கள் சிறையில் அடைக்கலாம், எந்த காரணமும் சொல்லாமல் ஒரு தனி நபரை கைது செய்யலாம், தடுத்து வைக்கலாம், அவரது உடமைகளை பறிக்கலாம்.. இப்படி ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளை எல்லாம் பறிக்கும் சட்டமாகவே இந்த பயங்கரவாத தடை சட்டம் இருக்கிறது. வெறுமனே தனி மனித இயக்கத்தை மட்டுமே இந்த சட்டம் முடக்கவில்லை. தமிழர்களின் நிலங்களை அபகரிக்கவும் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கு. 80களில் PTA, PSO ஊடாக நாலு வகையான zonesகளாக; ▪️Prohibited  zones  ▪️Surveillan...

திலீபன் எனும் பெண்ணியவாதி

தேசியத் தலைவர் மதுரையில் இருந்த காலகட்டத்தில் தான் பெண் போராளிகளை இயக்கத்துக்குள் இணைக்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் தோன்றியது. பெண் விடுதலை, பெண்ணிய கருத்தியலை இயக்கத்திலும், சமூகத்திலும் விதைப்பதன் ஊடாக தான் பெண்களுக்கான சம அற வெளியை உருவாக்க முடியும் என்று தேசியத் தலைவர் ஆழமாக நம்பினார்.  தலைவரின் அந்த கனவு மெய்ப்பட காரணமாக இருந்த முதன்மையான தளபதி அண்ணன் திலீபன் தான்.  அண்ணன் திலீபன் உருவாக்கிய 'சுதந்திர பறவைகள்' என்ற பெண்ணிய இயக்கம், தமிழீழத்தின் பழமை வாதங்களை எதிர்த்து களமாடியது.  வெளிப்படையாகவே தமிழ் சமூகத்தின் சில போக்குகளை "காட்டுமிராண்டி"த்தனம் என்றே புலிகள் விமர்சித்தார்கள். சீதனத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள்,  பெண்களின் சொத்துரிமை பற்றியான பிரச்சாரங்கள். அதை வென்றெடுக்க உருவாக்கப்பட்ட தமிழீழ சட்டங்கள் பற்றியான விழிப்புணர்வு.. Gender rolesக்கு எதிரான பிரச்சாரங்கள், 'ஆணாதிக்கத்தில்' இருந்தான விடுதலை பற்றிய பிரச்சாரங்கள், பெண்களை பண்டமாக மாற்றும் Commoditization of wo...

சிங்கள பேரினவாதத்தின் கருவியான முஸ்லிம் தலைமைகள்

ஈழத்தில் தமிழ்- முஸ்லிம் உறவு பற்றி பேசும் போது , முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்து சிங்கள பேரினவாதத்தின் கருவியாக செயல்பட்டு வந்ததை பற்றியும் பேச தான் வேண்டும் . தமிழர்களுக்கு எதிரான தனது அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கையின் முஸ்லிம் தலைமைகளின் முழு ஆதரவுடன் தான் சிங்களம் அரங்கேற்றி வந்திருக்கு. தமிழகத்தில் ஐயா காயிதே மில்லத் தமிழ் மொழி உரிமைக்காக போராடிய போது, இலங்கையில், 'சிங்கள மட்டும் மொழி சட்டத்தை' மக்கள் ஏற்க வேண்டும் என்று சொல்லி, இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்தார், Sir ராசீக் பாரீத் எனும் முஸ்லிம் தலைவர். தனி சிங்கள சட்டத்துக்கு ஆதரவாக களமாடிய முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர். சிங்கள மொழிக்கும், அதன் திணிப்புக்கும் ஆதரவாக மட்டும் அல்ல, தனி சிங்கள கொடிக்கு ஆதரவாகவும் முஸ்லிம் தலைமைகள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். 16 January 1948 அன்று, இலங்கையின் தேசிய கொடியாக, சிங்கள இனத்தின் தனி சிங்கள சிங்க கொடியை பாராளுமன்றத்தில் முன்னிறுத்தி முதலில் motionஅ table பண்ணது மட்டக்களப்பை சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அகமது சின்னலெப்பே தான்.  ...

கலவரங்கள்

இலங்கையில் நடப்பது அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல. அது எப்போதுமே அடக்குமுறைக்கு எதிரான, வாழ்க்கைக்கான போராட்டாமகவே இருக்கிறது. இலங்கையில் உள்ள சிங்கள பேரினவாதம் தனது அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க போரை தொடுக்கவில்லை,  சிங்களம் கால காலமாக போரிட்டு வருவது, இன அழிப்பு என்ற ஒற்றை நோக்குடன் மட்டும் தான். இலங்கையின் அனைத்து விதமான அதிகாரமும் சிங்கள தேசத்தின் கையில் தான் உள்ளது, சிங்கள தேசத்திற்கு எதிராக நின்று தமிழினத்தை காத்த புலிகளும் இன்றில்லை. இருப்பினும் தொடர்ந்து இலங்கையில் கலவரங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. போருக்கு முன்னும் கலவரங்கள், போருக்கு பின்னும் கலவரங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றது. 83ஆம் ஆண்டு நடந்த கலவரம் ஒரு உச்சம் அவ்வளவு தான், மற்றப்படி கலவரங்கள் இலங்கையில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. பிற நாடுகளை போல் இலங்கையின் பெரும்பான்மை, சிறுப்பான்மை, மற்றும் பூர்வ குடிகளுக்கு இடையிலான உறவு, ஒற்றையாட்சி, அல்லது பகிர்ப்பட்ட ஒற்றை அடையாளத்தை நோக்கியான பயணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை. இலங்கையில் நடப்பது ஒற்றையாட்சி தான். ஒரு குறிப்பிட்ட மதம்,...

SinhaLe

SinhaLe is the ideology that unites Sri Lanka. (More & final rant on the දම්‌මදීප+සිංගදීප  doctrine) Sri Lanka is not "united" by a constitution or a citizenry based identity. Instead, it is under the compulsion to stay or appear united/"unitary" because that is how the modern Mahavamsa-Dharmapala hybrid SinhaLe/Sinhala nationalist ideology envisages the Sinhala nation.  The Sri Lankan State is built upon a theocratic principle. The main agenda of the state is to protect Buddhism. Both the ideas of Dharmadeepa and the SinghaDeepa that drives the Sinhala nationalist ideologues are now institutionalised and have a political face in modern Sri Lanka.  The institutionalisation process started with the Eksath Bikku Peramuna and found a permanent spot in the political chambers after the Buddha Saasana Ministry was established.  The Sinhala nation sees "unitary" as a synonym to the idea of a Singhadeepa and the slogans of unity and slogans that are in favour ...

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...