Skip to main content

தலைவரை உருவாக்கிய களம்

தேசியத் தலைவருக்கும் தமிழகத்துக்கும் இடையில் இருந்த உறவு ஆழமானது. சிறு வயதில் இருந்தே அவர் செதுக்கிய, அவரை செதுக்கிய அந்த கலாச்சார தொடர்பு பற்றிய ஒரு சின்ன பதிவு.

கடலுக்கும் அன்றைய(5/6/1956) பழைய சிலோனின் பாராளுமன்றத்திற்கும் இடையில் இருந்த ஒரு திறந்த வெளியில் boots கால்களால் தன் மகனும் மக்களும் ஏறி மிதிக்கப்படுவதை பார்த்தபடி ஒரு தந்தை உணர்வற்று அகிம்சையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தார்.

தந்தை செல்வாவின் மனதில் எந்த ஒரு அகிம்சை போராளியும் திருப்பி அடித்து விட கூடாது என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது. அகிம்சைக்கு சுயமரியாதையை விட பொறுமையே முக்கியம். அடிமையிலும் பொறுமையான அடிமை அகிம்சை. 
தமிழர்களின் ஓலமும் சிங்களத்தின் சிரிப்பு சத்தமும் காலி முகத்திடலை ஆக்கிரமித்தது.. கோரிக்கை காகிதங்கள் காற்றில் பறந்தன. 
ரெத்தம் கொட்ட ஒரு போராளியை தோளில் சுமந்தபடி, வவுனியா M.P C.சுந்தரலிங்கம் சிங்கள only சட்டம் நிறைவேற்றப்பட இருந்த அவைக்குள் நுழைந்தார். போராளியின் தலையில் இருந்து கொட்டும் ரெத்ததை பார்த்து கைகொட்டி சிரித்தது சிங்களம்.

அந்த கூட்டத்தின் அதிகார சிரிப்பை பார்த்து சுந்தரலிங்கம், "ஒரு காலம் வரும், அன்று தமிழ் புலியை கண்டு சிங்கள சிங்கம் வாலை சுருட்டி கொண்டு ஓடும்" என்றார். சிங்கள ஆதிக்கம் சிரித்தப்படி அகிம்சையின் அலங்கோலத்தை பார்த்து ரசித்தது.

கொழும்பில் இருந்து தொலை தூரத்தில் ஒரு கடற்கரை ஓரத்தில் இருந்த வல்வெட்டித்துறையில் 2 வயது நிரம்பிய ஒரு அரச அதிகாரியின் மகன் பிரபாகரனுக்கு அந்த சத்தம் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

வல்வெட்டித்துறை; கோடியக்கரையில் இருந்து வெளிக்கிடும் கடலோடிகள் காணும் முதல் தமிழ் வாசல். 
கப்பல்கள்,வீரர்கள்,வணிகர்கள்,
மீனவர்கள், என்று எல்லோரும் வந்திறங்கி, பண்பாடிய 250 ஏக்கர் பட்டினம் அது. சிங்கள தேசத்தை விட தமிழகத்தையே அதிகம் பார்த்து வளர்ந்த நெய்தல் மண் அது.

பார்ப்பனிய ஊடகங்களும், சிங்கள ஊடகங்களும் இந்த ஊரை ஒரு சமூக விரோதிகளின், கடத்தல்காரர்களின் கூடாரமாக சித்தரித்து அதன் காரணமாகவே பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார் என்று கட்டவிழ்த்துவிட்ட கட்டுகதைகள் ஏராளம்...

கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் வல்லவர்கள் வல்வெட்டித்துறையினர்.அமெரிக்கா வரை பயணம் செய்த அன்னபூரணியே இதற்கு நல்ல சான்று. 

ஆனால் இதெல்லாம் ஒரு சிறப்பா?

எல்லாளனுக்கு பின் சிங்களவர்கள் மனதில் ஆழ பதிந்த தமிழன், 
ஈழத்து கரிகாலன், 
தமிழினத்தின் முதல் தேசிய ராணுவத்தை கட்டிய தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண் என்பதை விட வேறு சிறப்பு அந்த ஊருக்கு வேண்டுமா? 

தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை ஒரு காந்தியவாதி, சிறு வயதில் இருந்தே அகிம்சைக்கும் இவருக்கும் நல்ல உறவிருந்தது. அப்பரின் அரசியலை கேட்டு வளர்ந்த இவர் காந்தியை விட பகத் சிங், கொடி காத்த குமரன், நேதாஜியின் கதைகளையே அதிகம் விரும்பி கேட்டு வளர்ந்தார். 


அவர் வளர்ந்த சூழல் ஒரு போராட்ட களம். ஈழத்தை அவர் அமைதியான ஒரு தேசமாக கண்டதில்லை. எங்கு திரும்பினாலும் தமிழர்களின் ஓல சத்தமும், போராட்ட முழக்கமும் தான் அவருக்கு கேட்டது.. 

மொழியுரிமை போராட்டங்களை, சிங்கள இனவெறியர்களின் கலவரங்களை, எண்ணற்ற தமிழர்களின் துயரங்களை கண்டு வளர்ந்தார். அந்த சூழல் தான் அவரை வளர்த்தது.

அந்த காலகட்டத்தில் இளைஞர் கூட்டம் குருதியால் திலகமிட்டு வரவேற்ற தமிழ் சனநாயக தலைவர்கள் எல்லாம் மேடைகள் எங்கும் அலங்கார தமிழில் வீர வசனங்கள் பேசினார்கள். இளைஞர்கள் மத்தியில் போர் குணத்தை ஊட்டி வளர்த்தார்கள்.

இளைஞர்கள் மத்தியில் போராட்ட குணத்தை வளர்த்த இந்த தலைவர்கள், சிங்கள தலைவர்களிடம் அந்த குணத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தனர். எந்த தீர்வுமின்றி தொடர் ஏமாற்றங்களை மட்டுமே சிங்களம் இந்த தலைவர்களுக்கு பரிசளித்தது.

இந்த தொடர் ஏமாற்றங்களை பொறுக்க முடியாது, இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறி தமிழர் சுயாட்சி கழகத்தை உருவாக்கினார் வி.நவரத்தினம்.

அவருடன் இணைந்து தமிழர் சுயாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் தான் பொ.வேணுகோபால் மாஸ்டர். சிவகுரு வித்தியாசாலையில் நடந்த மாஸ்டரின் அரசியல் வகுப்புகள் தான் பிரபாகரன் என்ற மாணவனை போராளியாக மாற்றியது..

அகிம்சை இனி சரிப்பட்டு வராது, ஆயுதம் ஏந்தி போராடுவது தான் இனி ஒரே வழி என்ற முடிவை பிரபாகரன் என்ற மாணவன் எடுத்தது அந்த காலகட்டத்தில் தான்.

16 வயதில் நாட்டுக்காக வீட்டை விட்டு வெளியேறினார் பிரபாகரன்..

The rest is history.
Mr. பழுவேட்டரையர்
(6th October 2018)

Comments

  1. வாழ்த்துக்கள் சகோதரா.....மிக அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

Chola's 'Look and Act east' policy

The Look and Act east policy of the Cholas  Most of today’s political conflicts are a rerun of the past events in history. Geography and history are the main determinants of the future. These days not a single day passes by without a human or political story comparing China and India. The geopolitical rivalry between these two nations to exert power across the Indian Ocean and the South China Sea has always been a sensational topic for the media. It is this geopolitics that now defines politics of our region and a lot of these geopolitical hotspots are now deciding the political fate of countries around India. Strait of Malacca is one such geopolitical hotspot that has been of interest for both India and China.  Both India and China have a history with Strait of Malacca. Interestingly, India’s history with it goes back to our very own Cholas.  The Strait of Malacca is one of the most important shipping lanes in the world. This is an important spot between the Pacific and ...

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி...