Skip to main content

இந்தியாவின் துரோகம்..

அண்ணன் திலீபன் இந்தியாவிடம் முன்வைத்த 5 கோரிக்கைகளில், தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வந்த

• ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
என்பதும் ஒன்று.

புலிகள் இந்தியாவிடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு அகிம்சை வழிக்கு திரும்பிய பின்பு, சிங்கள ராணுவ ஊர்காவல் படைகள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் ஊடாக புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை சிங்களமும் இந்தியாவும் இங்கும் அங்குமாக அரங்கேற்றி கொண்டிருந்தது.

இந்தியாவின் வாக்குறுதியை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்து  நிராயுதபாணிகளாக நின்ற புலிகளை இந்த ஊர்காவல் படைகளும், ஒட்டுக்குழுக்களும் வேட்டையாட தொடங்கியது.

இதையெல்லாம் எதிர்த்து தான் திலீபன் அகிம்சை வழியில் போராடினார். 'இந்திய அமைதி காக்கும் படை' புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பெற்றுக்கொண்டதை போல், மற்ற குழுக்களிடம் இருந்தும் ஆயுதங்களை பறித்திருக்க வேண்டும் தானே?

அது தானே முறையான ஒரு "அமைதி காக்கும்" நடவடிக்கையாக இருந்திருக்கும்? அதை தானே திலீபனும் புலிகளும் விரும்பினார்கள்? அப்ப அதை செய்ய ராஜீவ் தயங்கியது ஏன்? இங்கே இந்தியாவின் உண்மையான நோக்கம் அமைதி காப்பதா?  இல்லை, புலிகளை அழிப்பதா?

புலிகளுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்த ராஜீவ் படை, அந்த ஆயுதங்களை தங்களின் ஒட்டுக்குழுக்களுக்கு வழங்கி புலிகளை வேட்டையாட சொல்லி உத்தரவிட்டது.

இந்தியா துரோகம் செய்தது, புலிகளை முதுகில் குத்தியது. ஆனால் அதற்கும் புலிகளின் உடனடி மறுபதில் அகிம்சை வழி போராட்டமாக தான் இருந்தது. அங்கேயும் இந்தியாவை புலிகள் எதிர்க்க விரும்பவில்லை, ஆனால் இந்தியா திலீபனின் அகிம்சையை தோற்கடித்தது.

"திலீபன் என்ன பெரிய காந்தியா"? என்று சொல்லி அவரது போராட்டத்தை கொச்சைப்படுத்தியது ராஜீவின் வானரம் டிக்சிட்.

தமிழர் தேசத்தில் புலிகளுக்கு இருந்த monopoly on violence, (வன்முறையின் முற்றுரிமை)யை உடைக்கவே இந்தியா புலிகளை நம்ப வைத்து கழுத்தறுக்க துணிந்தது.

புலிகளின் தலைமையின் கீழ் ஈழ விடுதலைக்கான ஒட்டு மொத்த ராணுவமும் அணிவகுத்து நின்றால், சிங்கள State இயங்க தேவையான monopoly on violence தொடர்ந்து சவால்களை சந்தித்து கொண்டே இருக்கும் என்று அஞ்சி, ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்கும் நோக்குடன் புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத்தை ஒட்டுக்குழுக்கள் ஊடாக இந்தியம் அரங்கேற்றியது.

திலீபன் இந்தியத்திடம் இல்லாத மனிதம், இருப்பதாக நம்பி பசியுடன் போராடினான். இந்தியா அவன் உயிரை பறித்து, தனது மனிதமற்றத்தன்மையை மீண்டும் நிரூபித்தது.

இந்திய அமைதி காக்கும் படையின் உண்மையான நோக்கம் அமைதி காப்பதாக இருந்திருந்தால், திலீபன் மரணத்தை தழுவியிருக்க மாட்டார். 
-Mr. பழுவேட்டரையர்

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...