Skip to main content

Posts

அடைக்கலந் தோட்டம் கந்தசாமி கோவிலின் சாதிய கொலை

இந்த மாதம் 13 திகதியன்று, யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து 23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கடத்தல் & கொலையை சுற்றி நிறைய கதைகளும், கட்டு கதைகளும் சமூக வலைத்தளங்களில் பின்னப்படுவதை காண கூடியதாக இருக்கிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களில் உண்மையோடு சேர்ந்து உண்மையான குற்றவாளிகளும் கதையோடு கதையா தொலைந்து போகிறார்கள். அதனால் நடந்த சம்பவத்தை பற்றியும், அதில் சாதியவாதத்தின் பங்கு எந்தளவில் உள்ளது என்பதை பற்றியும் இந்த பதிவு ஊடாக நாம் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். இந்த பிரச்சனை பொன்னாலையில் இருந்து தொடங்கவில்லை.  2021/2022ஆம் ஆண்டு கால பகுதியில், அடைக்கலந் தோட்டம் கோவிலில் தான் இந்த பிரச்சனை தொடங்கியது.  13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பவித்திரன் என்ற இளைஞன் வட்டுக்கோட்டையில் உள்ள அடைக்கலந் தோட்டம் கந்தசாமி கோவிலுக்கு அருகில் வாழ்ந்து வந்திருக்கிறார்.  கோவிலை சுற்றி வாழும் மக்கள் மத்தியில் வேளாளர்கள் மட்டும் முக்குவர் சமூகத்தை சேர்ந்த மக்களும் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள்
Recent posts

Shoba Shakthi & Tamil Solidarity Group's 'Group Sex Ideology'

I just dont know where to start, but this story needs to be told. In the last few years I've gained insights into internal problems within numerous Dravidian groups in Tamil Nadu and abroad through interactions on Clubhouse with the current and ex-members of such groups, and in this blog, I aim to shed light on such groups and activists linked to cases of sexual exploitation.  Firstly I would like to discuss about Shoba Shakti. A few months ago, a fellow comrade shared an old article on Shoba Shakthi from a website called Keetru. This article was written by a Human Rights activist called Thamizhachi who was based in France. The article is all about the sexual harrasment Thamizhachi faced through Shoba Sakthi.  Shobha Shakti is an activist/author who operates from France. He is an Sri Lankan Tamil who has made a name by being very critical about the Tamil struggle in Eelam. He calls himself a Dalit/Dravidian activist or Periyarist and is closely connected to

"NewsMinute ஷபீர நிம்மதியா வாழ விட மாட்டோம்"-திமுக R.S. பாரதியின் மகன் மிரட்டல்

வெள்ளத்தை,.. நீரின்றி உணவின்றி  பாலின்றி உறக்கமின்றி தவித்து கொண்டிருக்கும் மக்களின் அவல நிலையை, மூடி மறைக்க கடுமையாக போராடி வருகிறது திமுகவின் IT wing. வட சென்னை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்க,  வெள்ளத்தால் பாதிக்கப்படாத ஒரு இடத்தில் இருந்த புணூல் அணிந்த ஐயரின் மீது வெளிச்சத்தை பாய்ச்சி, "எல்லாம் ஷேமமாக இருக்கு"ன்னு சொல்ல வெச்சு, அதுவே மக்களின் கருத்து என்று விளம்பரப்படுத்தி கொண்டிருக்கிறது திராவிட ஊடகங்கள். இந்த கூட்டத்துக்கு மத்தியில், ஊடக அறத்தை கடைப்பிடித்து செயல்பட்டு வரும் ஊடகவியலாளர்களில் ஒருவரான NewsMinute ஊடகத்தை சேர்ந்த ஷபீர் அஹமத் தான் , கவனிப்பாரற்று கிடந்த வட சென்னை மக்களின் அவலத்தை ஊடகத்தில் முதல் முறையாக வெளிச்சம் போட்டு காட்டினார். அவரின் இந்த செயல், திமுகவினர் பக்கம் பக்கமாக எழுதி வந்த "சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது" கட்டுகதைகளை எல்லாம் பொய் என்று அம்பலப்படுத்தியது. இதனால் கடுப்பான திமுக IT wing.. "மக்களுக்கு இந்த நேரத்தில் பால் எல்லாம் அவசியமா? முழங்கால் வரை தானே தண்ணி நிற்குது, உங்களுக்கு எதுக்கு ப

புலிகளின் ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பு

விடுதலை புலிகள் இயக்கம், ஈழ விடுதலை போராட்டம் என்று வரும் போது, பெரும்பாலானோருக்கு போறும், சண்டைகளும், மண்டியிடாத தமிழினத்தின் வீரம் செரிந்த வரலாறும் தான் முதலில் நினைவுக்கு வரும். அது போல, அதே அளவுக்கு இயக்கத்தின் அரசியலும் இங்கே அதிக அளவில் பேசப்பட வேண்டும். விடுதலை புலிகள் இயக்கம் வெறுமனே தமிழினத்துக்கான ஒரு தேசிய இராணுவத்தை மட்டும் கட்டவில்லை, அவர்கள் ஒரு தேசத்தையும், அந்த தேசத்துக்கான சுதந்திர நாட்டையும் கட்டியெழுப்பியவர்கள். உங்களுக்கு அவர்களை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. சாதி மதம் பிரதேசமென பிளவுப்பட்டிருந்த ஒரு இனத்துக்குள் இப்படிப்பட்ட ஒரு புரட்சியை உருவாக்கிய விடுதலை புலிகள் இயக்கம், உலகெங்கும் தமிழினத்தின் இன மற்றும் சமூக விடுதலைக்கான அடிப்படைகளை மிகவும் ஆழமாக வேரூன்ற நிறுத்தி விட்டு தான் சென்றிருக்கிறார்கள். அந்த அடிப்படைகளில் ஒன்று ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பு. ஈழ அரசியல் வரலாற்றில் ஆரிய பார்ப்பனியத்தை வெளிப்படையாகவும் நேரடியாகவும் எதிர்த்த ஒரே இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம் மட்டும் தான்.  தேசியத் தலைவர் தனத

ரஞ்சித்தின் 'காலா'

காலா படத்தின் முதல் காட்சியிலேயே ரஜினி clean bowled ஆகுறாரு. காலா முதல் sceneலயே score பண்ணுறாரு. ரஜினி என்ற பிம்பத்தை, brand powerஐ ரஞ்சித் அந்த காட்சியில் உடைக்கவில்லை, அதை ஒரு மக்கள் கூட்டத்திடம் பகிர்ந்தளிக்கிறார் அதன் பின் வரும் காலாவின் 'mass' எல்லாமே அந்த மக்கள் கூட்டத்தின் ஊடாகவே வெளிப்படுகிறது. முதல் காட்சியில் heroism உடைக்கப்படவில்லை, பகிரப்படுகிறது. இதுவரை காலமும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் காட்சியமைப்புகள் வழி அறிமுகமான ரஜினி, காலாவில் சமத்துவ தன்மையை அடைகிறார். ஒவ்வொரு காட்சியிலும் ராமன் தன் பேத்தியிடம் ஆதிக்கத்தை போதிக்கிறான். காலாவின் கால தொட்டு கும்பிட சொல்கிறான். ஆதிக்க கட்டமைப்பை ராமனும் பின்பற்றுகிறான் என்பதை உணர்த்தவே அந்த காட்சி.அந்த பொண்ணு, காலாவை கொன்று விடாதீர்கள் என்று சொல்கிறாள்! ஆதிக்கத்தின் திமிர்/பிச்சை, பெருந்தன்மையல்ல காலா சிறுவர்களுடன் நடந்துகொள்ளும் முறை ராமனுக்கு நேர் எதிர். காலாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருப்பது அன்பின் அடிப்படையில் உருவான உறவு. ஆதிக்கம் அங்கு உறவாடவில்லை. ராமனின் சூழல், வெள்ளையா, சுத்

Tamil Nadu's dignified welcome for Pakistan's Cricket Team

Cheer, Music, Banter, Booing, and the pleasant sounds from the wicket and the bat are the  sounds you expect from a cricket stadium. However in this world cup the North Indian cricket stadiums have started to sound more like political rallies with religious chants, bullying, hate language, and slurs, dominating the noise from the audiences. While audiences in the Ahmedabad stadium welcomed Pakistan with open hostility, the treatment was very different down south. In yesterday's match between Pakistan and Afghanistan Tamil Nadu cricket fans were seen giving both the teams a warm welcome.  In the last few weeks alone we saw viral footage from the stadiums in the North of India which shows hooligans surrounding a Bangladesh cricket supporter and taunting him after Bangladesh lost a match against India. In another shocking incident we saw a Pakistan supporter being warned not to cheer for Pakistan by an Indian police man. Overall the North Indian stadiums have b

பெண்களும் புலிகளும் ❤️💛

விடுதலை புலிகள் இயக்கத்தின் காட்டுப்பாட்டின் கீழ் இருந்த தமிழீழ மண்ணில் பெண்களுக்கு இருந்த சுதந்திரம் பற்றி நிறைய செய்திகள் நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்க வாய்ப்புண்டு. பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக விடுதலை புலிகள் இயக்கம் மக்களை பெண் விடுதலை சார்ந்து அரசியல்ப்படுத்தும் நடவடிக்கையையும் தீவிரமாக முன்னெடுத்து வந்தார்கள்.  அந்த அரசியல்படுத்தலின் ஒரு சான்றாக, ஒரு இளம் பெண்ணின் மீது 91ஆம் ஆண்டு ஈழத்தில் ஒரு இளைஞனால் நடத்தப்பட்ட ஒரு வன்முறை செயலை புலிகள் எப்படி தண்டித்தார்கள். அந்த வன்முறையின் வேர் வரை சென்று அந்த ஆணாதிக்க திமிரை பற்றிய அவர்களது நிலைப்பாடை எப்படி முன்வைத்தார்கள் என்பதை கீழே நான் பதிவிட்டுருக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தின் அன்றைய ஒரு ஊடக செய்தியின் வழியாக நீங்கள் நேரடியாகவே படித்து தெரிந்து கொள்ளலாம்.. பெண்கள் மீதான வன்முறை புலிகளின் நிலைப்பாடு -தை 1991 இளைஞன் ஒருவன் நடுவீதியில் வைத்து ஒரு இளம் பெண்ணை அடித்த குற்றச்செயல் தொடர்பாக இங்கே எமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகின்றோம். 21-11-1991 அன்று மக்கள் நடமாட்டம் மிகுந்த காலை வேளை, கொக்குவில் ப