தமிழினப்படுகொலையில் சிங்கள அரசோடு நகமும் சதையுமாக இலங்கையின் முஸ்லிம் அமைப்புகளும் தலைமைகளும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத, வெளிப்படையான உண்மை. இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் தொடர்பான எல்லா உரையாடல்களிலும் எப்படி வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது பேசப்படுகிறதோ, அதே போல கிழக்கில் இருந்து முஸ்லிம் ஊர்காவல் படையால் வெளியேற்றப்பட்ட தமிழர்களின் வரலாறும், மொழியுரிமையில் இருந்து ஈஸ்டர் தாக்குதல் வரையிலான அனைத்து விடயங்களிலும் முஸ்லிம் தலைமைகளின் தமிழர் விரோத போக்கும் பேசப்பட வேண்டும். இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை சிங்களத்தின் பயங்கரவாதத்தால் அதிக உரிமைகள், உயிர்கள், உடமைகளை இழந்தது ஈழத்தமிழர்கள் தான். ஆனால் இன்றோ ஈழத்தமிழர்கள் மீதே பழியை திருப்பி போட சிலர் ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பா சமீபத்தில் இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம், தேசியத் தலைவருடனான சந்திப்பு பற்றி பேசிய ஒரு பேச்சு, தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, ஆனால் அந்த பதிவுகளுக்கு கீழே பதிவிட்...
1915 சிங்கள முஸ்லிம் கலவரம் - சிங்கள உழைக்கும் வர்க்கம் பக்கம் நின்ற ராமநாதன்! வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள்.
1915 நடந்த முஸ்லிம் சிங்கள கலவரத்தின் பின்னர், அமுல்ப்படுத்தப்பட்ட martial lawஇன் அடிப்படையில் இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்களிடம் இருந்து கலவரத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பீடு என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அன்று 50, 60 சதங்கள் கணக்கில் உழைத்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர்களிடமிருந்தெல்லாம் 6000, 7000 தண்டனை கட்டணமாக கோரப்பட்டது. அந்த தொகையை கட்ட முடியாதவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் உடமைகள் பறிக்கப்பட்டது. கண்டியில் நடந்த கலவரத்துக்கு எப்படி இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் பொறுப்பாவார்கள்? குறிப்பிட்ட கலவரத்தை தொடக்கி வைத்த வெளிநாட்டு முஸ்லிம் வார்த்தகர்களின் அரசியலையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கண்டியில் உள்ள இலங்கையை சேர்ந்த சோனகர்களும், அவர்களின் பள்ளிவாசல் நிர்வாகமும் குறிப்பிட்ட பௌத்த பெரஹேராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஒட்டுமொத்த சோனகர்களும் எதிர்ப்பு தெரிவித்தது போல் தான் சித்தரிக்கப்பட்டது. அன்று பொன்னம்பலம் ராமநாதன் Martial lawக்கு எதிராக வாதாடினார் என்று சொல்லும் போது, இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் மீ...