Skip to main content

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.  

ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு. 
தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம்.

அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇
இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார். 

அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video 

https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19 



எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு.

சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு, portion size, பலருக்கு set ஆகாது. அண்ணன் வைகோ புலிகளை சந்தித்த போது, தலைவரிடம் எங்க போனாலும் தேநீர் கொடுக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார், அதற்கு தலைவர் வேடிக்கையாக Tea is a our military drink என்றார்.

அண்ணன் வைகோவும், தலைவரும் உரையாடும் காட்சியின் காணொளி இணைப்பு 👇copy & paste the following link on your browser for video 

https://twitter.com/mrpaluvets/status/982599648723386369?s=19

அது போல் போராளிகள் மக்களை சந்திக்க செல்லும் போது, அவர்கள் தேநீர் கொடுத்தால், அதை மறுக்காமல் குடிக்க வேண்டும் என்று தலைவர் வலியுறுத்துவாராம், அதன் பின்னணியில் ஒரு சாதி எதிர்ப்பு காரணமும் இருக்கு..  இப்படி நிறைய செய்திகள் இருக்கு.

தேசியத் தலைவர் தன்னை இறக்கி மற்றவர்களை உயர்த்தி பேசும் பண்புடையவர். மிகவும் எளிமையானவர், தன் தளபதிகளை எப்போதும் உயர்த்தி பேசுவார், தோழர்களை விட்டுக்கொடுத்து பேச மாட்டார்.. அவர் கோபத்திலும் ஒரு நிதானம் இருக்கும். பேச்சில் அன்பிருக்கும், அச்சுறுத்தலை கூட சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் பக்குவம் அவரிடம் இருந்தது. வாழ்வியலின் அழகியலை புறக்கணித்து, போர் களத்தில் மிருகங்களாய் உலாவிய கூட்டம் அல்ல மாவீரர்கள். வாழ்வியலின் அழகியலை காக்க, போராட நிர்ப்பந்திக்கப்பட்ட கூட்டம் எங்கள் மாவீரர்கள்.

சமையல் கலை மட்டும் அல்ல, போர் களத்தில் கவிதை எழுதியிருக்கிறார்கள், நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள், மரங்கள், காடுகள் வளர்த்திருக்கிறார்கள், மாட்டு வண்டி சவாரி நடத்தியிருக்கிறார்கள்,..

உங்களுக்கு தான் ஈழம் போர்க்களம், எங்களுக்கு அது தான் வீடு! எங்கள் வீட்டுக்குள், நாட்டுக்குள் போரை கொண்டு வந்தது சிங்களம்! அவனுக்கு அது போர் களம், எங்களுக்கு அது நாடு! அது தான் வீடு.

அண்ணன் வைகோவோ, திருமாவோ, சீமானோ, எங்கள் உறவினர் யார் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவர்களுக்கு விருந்தளிப்பது எங்கள் பண்பாடு. போர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட வெளியில் நடக்கும் கூத்து அல்ல! .

24 மணித்தியாலமும் நாங்கள் பங்கர்களுக்குள் வாழவில்லை. 

சீமான் பேசும் விதம் உங்களுக்கு மிகைப்படுத்தலாக தெரியலாம், ஆனால் அவர் சொன்ன செய்தி எங்களுக்கு வியப்பாக இல்லை.

நன்றி,
தமிழுடன்
Mr. பழுவேட்டரையர் 


Comments

  1. வாழ்க தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க நம் தமிழினம்

    ReplyDelete
  2. அருமை தோழா.
    அருமையாக சொன்னீர்கள் ஆனால் இங்கு ஆட்டு மந்தைகள் அதிகம்.
    மத வெறியும் சாதி வெறியும் துரோகமும் ஊறி கிடக்கு.
    அதை மாற்றுவது எளிதல்ல.

    ReplyDelete
  3. நல்ல விளக்கம் கொடுத்ததற்கு நன்றி,,, ஈழத்து வாழ்கை முறை பற்றி இன்னும் நிறைய செய்திகளை எதிர்ப்பார்க்கிறேன்,,,,இங்கே(தமிழ் நாட்டில்) நிறைய திராவிடப் பன்றிகள் பொய்யையும் புரட்டையுமே சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள்,,

    ReplyDelete
  4. I got some valuable points through this blog. Thank you sharing this blog.
      transits blog

    ReplyDelete
  5. மரக்கறி என்றால் வெஜிடேரியன் தானே. திருமா சொல்வதில் மட்டும் தான் இறைச்சி பற்றி குறிப்பு உள்ளது. மற்ற எந்த இடத்திலும் இறைச்சி பற்றி குறிப்பு இல்லையே!!!
    அனைத்திலும் விருந்தோம்பல் புலப்படுகிறது. என்னென்ன உணவுகள் என்பது பற்றி குறிப்புகள் இல்லையே!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற