Skip to main content

மதிவதனி

'மதிவதனி'

மதி என்றால் அறிவு அல்லது நிலவு என்று பொருள், வதனி என்றால் வதனம், முகம் என்று பொருள்.

'வதனமே சந்திர பிம்பமோ?' என்ற பாடல் வரிகளை ஒரு பெயரில் அடக்க வேண்டும் என்றால் மதிவதனி என்று சொல்லலாம், ஆனாலும் 'அறிவு முகம்' என்ற விளக்கம் தான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன், ஏன் என்றால் மதிவதனிக்கும் கல்விக்கும் ஒரு நெருக்கம் உண்டு.

கண்ணகியும், மணிமேகலையும் காத்தருளும் நாகர்களின் உறைவிடமாம் மணிபல்லவத்தில், மிஞ்சிய ஏழு தீவுகளில் ஒன்று இன்றைய நாகதீவாக, அந்த நாகதீவுக்கு கிழக்கே குறிகாட்டி நிற்கும் புங்குடுதீவில் ஒரு ஆசிரியருக்கு பிறந்தவள் தான் மதிவதனி.

அந்த ஆசிரியர் மகள், இடம்பெயர்ந்த உறவுகளுக்கு யாழில் சிங்கள அரசால் கல்வி மறுக்கப்பட்ட போது, தன் மூன்று தோழிகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாள்.

அகிம்சைக்கு பலி கொடுத்த உயிர்கள் போதும் என்ற முடிவில் இருந்த ஒரு தலைவன், இந்த நாலு பெண்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருந்த செய்தி அறிந்து, அவன் தம்பிகளை அனுப்பி, அவர்களை காப்பாற்றினான்.

அந்த நாலு பெண்களில் ஒருத்தி பிற்காலத்தில் அவன் துணைவியாகுவாள் என்று அந்த தலைவன் அப்போது எண்ணியிருக்க மாட்டான்.

தாய்த்தமிழகத்து நாகப்பட்டினத்து கோடியக்கரையில் இருந்து நாகநாடாம் யாழ்ப்பாணத்திற்கு கால காலமாக வெளிக்கிட்ட படைமாந்தரும், பூங்குழலி போன்ற நம் கல்கியின் கதைமாந்தரும், ஈழத்தில் கண்ட முதல் முகம், வல்வெட்டித்துறைமுகம் தான்.

அந்த வல்வெட்டித்துறையில் பிறந்த பிரபாகரன் தான் தமிழினம் போற்றும் தமிழ்தேசியத் தலைவன்.

சூரர்கள் போற்றும் ஈழத்து கரிகாலன் அவன், 
மக்கள் வழிபடும் சூரியத் தேவன் அவன்.

அவன் கதிரில் பொலிவு பெற்ற மதியாகவும் பிற்காலத்தில் பெயருக்கு ஏற்ற வாழ்வை பெற்றவள் தான் எங்கள் அரசி, தலைவி மதிவதனி.

காதலை ஏற்ற இரு இதயங்களும்,

சாதியை மறுத்தது, தமிழீழத்தின் புகழ்பெற்ற சாதி மறுப்பு திருமுணம் அது. தேசியத் தலைவரின் தாய் மற்றும் தந்தையால் புறக்கணிக்கப்பட்ட அந்த திருமணம், தாய்த் தமிழகத்தின் அரவணைப்பில் நடந்தது.

இருவரது காதலின் ஆதாரமான பிள்ளை செல்வங்களுக்கு இனத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகளின் பெயரை சூட்டி அழகு பார்த்தார்கள்.

காவியங்கள் பாடாத அழகியல் தேசியத் தலைவர் தலைவியின் வாழ்வியல். 
-Mr. பழுவேட்டரையர்
16/9/2018

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற