Skip to main content

கலவரங்கள்

இலங்கையில் நடப்பது அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல. அது எப்போதுமே அடக்குமுறைக்கு எதிரான, வாழ்க்கைக்கான போராட்டாமகவே இருக்கிறது. இலங்கையில் உள்ள சிங்கள பேரினவாதம் தனது அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க போரை தொடுக்கவில்லை, 

சிங்களம் கால காலமாக போரிட்டு வருவது, இன அழிப்பு என்ற ஒற்றை நோக்குடன் மட்டும் தான். இலங்கையின் அனைத்து விதமான அதிகாரமும் சிங்கள தேசத்தின் கையில் தான் உள்ளது, சிங்கள தேசத்திற்கு எதிராக நின்று தமிழினத்தை காத்த புலிகளும் இன்றில்லை.

இருப்பினும் தொடர்ந்து இலங்கையில் கலவரங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. போருக்கு முன்னும் கலவரங்கள், போருக்கு பின்னும் கலவரங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றது. 83ஆம் ஆண்டு நடந்த கலவரம் ஒரு உச்சம் அவ்வளவு தான்,

மற்றப்படி கலவரங்கள் இலங்கையில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. பிற நாடுகளை போல் இலங்கையின் பெரும்பான்மை, சிறுப்பான்மை, மற்றும் பூர்வ குடிகளுக்கு இடையிலான உறவு, ஒற்றையாட்சி, அல்லது பகிர்ப்பட்ட ஒற்றை அடையாளத்தை நோக்கியான பயணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை.

இலங்கையில் நடப்பது ஒற்றையாட்சி தான். ஒரு குறிப்பிட்ட மதம்,இனம்,சாதியை தாண்டி யாரும் இலங்கை, அதாவது சிங்கள தேசத்தின் அதிகார மையத்தில் அமர முடியாது. இந்த அசாதாரண அநீதியை சாதாரண இயல்பென்று ஏற்கும் கூட்டம் தான் ஸ்ரீ லங்கன்ஸ் என்ற அடையாள அரசியலுக்குள் உள்வாங்கப்படுகிறார்கள்.

இங்கே அப்படி உள்வாங்கப்படும் தமிழ், மற்றும் முஸ்லிம் so called Sri Lankansக்கு கூட அந்த ஸ்ரீ லங்கன் என்ற அடையாளம் இதுவரை பாதுகாப்பை உறுதி செய்ததில்லை. சிங்களவனை விட அதிக ஸ்ரீ லங்கன் பற்றுடன் அலையும் முஸ்லிம் சமூகத்தை விட்டு வைத்ததா சிங்கள தேசம்?
அதனால் இலங்கையின் கலவர வரலாறு என்றுமே அரசியல் காரணங்களுக்காக மட்டுமோ, அல்லது ஏதோ ஒரு சம்பவத்திற்கான எதிர்வினையாக மட்டுமே  அரங்கேறுவதில்லை. சிங்கள தேசத்தின் அடிப்படை குணாதிசயத்தை வெளிப்படுத்தும் சடங்குகளில் ஒன்று தான் இந்த கலவரங்கள்.

கலவரங்கள் சிங்கள தேசத்திற்கு ஒரு பண்டிகை மாதிரி, அது அவர்களின் கலாச்சாரமாக மாறி நிற்கிறது. அதில் பங்குபெறும் கூட்டம் தண்டிக்கப்படுவதில்லை. அது போர், சமாதானம், என்று காலம் பார்த்து தள்ளிப்போவதில்லை. எந்த தடையும் இன்றி அது அரங்கேறிக்கொண்டே தான் இருக்கும். 

இலங்கையில் நடக்கும் வன்முறைகளில் "எதிர்வினை" ஒரு காரணமாக, நியாயப்படுத்தலாக இருப்பது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் தான். சிங்கள தேசத்தை பொறுத்தவரை வன்முறை தான் அதன் வினை, குணாதிசயமே.

-Mr. பழுவேட்டரையர்
(23/07/2019)

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற