Skip to main content

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான்.

அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை?

இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான்.

அந்த உணவின் மீது, 

ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது, 

ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான்.

மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி பயங்கரவாதம் தலை விரித்தாடும் நாட்டில், மாட்டிறைச்சி எங்கள் இனத்தின் உணவு, அது மாட்டு மூத்திரம் குடிக்கும் உங்கள் கேடுகெட்ட ஆரிய கலாச்சாரத்தை விடவும் மேன்மையானது என்று முழங்கும்  தலைமையாக திகழ்வது அண்ணன் சீமான் மட்டும் தானே?.. முருகன் வேல் வைத்திருப்பது மரக்கறியை வெட்டவா? இறைச்சியை வெட்ட தானே? என்று கேட்கும் திராணி இன்று தமிழ்நாட்டில் வேறெந்த தலைவருக்கு இருக்கு?

இங்கே ஆமை கறி அரசியலை உங்களுக்கு முன் கட்டமைத்து, அண்ணன் சீமானை சிறுமைப்படுத்தும் கூட்டம், மாட்டிறைச்சி பற்றிய அவர் பேச்சை உங்களிடம் காட்டாது.

இது போல தான் பல கதைகள் பூதாகரமாக்கப்பட்டு உங்களுக்கு காண்பிக்கப்படும் போது, ஏதோ ஒரு முக்கியமான அரசியல் மறைக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்திருங்கள்.
இன்று ஏதோ ஒரு ஹோட்டல் கதையை தூக்கி கொண்டு வந்திருக்கு திராவிடம். சீமான் ஏன் நெடுமாறன் ஐயா, மணியரசன் ஐயா போல எளிமையாக இல்லை என்று திமுகவினர் கேள்வி ஒன்றை எழுப்புகிறார்கள்.

திமுகவினரின் அகராதியில் "எளிமை", 'அதிகாரமற்ற நிலை'
என்று பொருட்படும். நெடுமாறன் ஐயா, மணியரசன் ஐயா போல சீமானும் அதிகாரத்தை அண்டாமல் விலகி இருந்தால், திமுகவினர் சீமானையும் ஒரு எளிமையான மனிதராக தான் பார்த்திருப்பார்கள்.

Pauperism isnt humility.

இன்று
▪️நாம் தமிழர் வளர்ந்து விட்டது, இனி அதை அதிகாரம் கொண்டு எளிதில் ஒடுக்கிவிட முடியாது.

▪️நாம் தமிழரை கூட்டணி வலைக்குள்ளும் சிக்க வைக்க முடியாது,

▪️நாம் தமிழரை அங்கீகரித்து, சனநாயகரீதியாக அவர்களுடன் விவாதிப்பதும் ஆபத்து,

என்று எதையும் செய்ய முடியாது திணறி கொண்டிருக்கிறது திராவிடம். இந்த நிலையில் திராவிடத்தின் கையில் இருக்கும் ஒரே கருவி அவதூறு மட்டும் தான். அதனால் தான் அதை மட்டும் அதிகமாக கொட்டி தீர்க்கிறார்கள்.

சீமானும் அவரது தமிழ்த்தேசிய படையும் அதிகாரத்தை நெருங்க நெருங்க, அவர் மீதான அவதூறுகளும் அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.

அதனால் அண்ணன் சீமானுக்கு எதிரான அவதூறுகள் இனிமேல் நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கிறேன்.

-Mr. பழுவேட்டரையர்
9/4/21





Comments

  1. சிறப்பு 😍

    ReplyDelete
  2. உண்மைதான் பழு... இன்னும் புத்திசாலித்தனமாக இந்த திராவிட கூட்டத்தை கையாள வேண்டும்... அடிக்கிற அடியில் ஒருவனும் எதிராக நிற்க்க கூடாது...

    ReplyDelete
  3. தெளிவான விளக்கம் நண்பா...

    ReplyDelete
  4. வாதத்தில் தோற்றவன் ,அவதூறை கையில் எடுக்கிறான்

    ReplyDelete
  5. 👍👍👍👍👍❤️❤️

    ReplyDelete
  6. உண்மையில் அண்ணன் சீமானை காக்க வேண்டியது நமது கடமை

    ReplyDelete
  7. Correct 🤔nam tamilar katchi karan mayira kooda pudunga mudiyathu intha dmk vala

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற