Skip to main content

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான்.

அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை?

இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான்.

அந்த உணவின் மீது, 

ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது, 

ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான்.

மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி பயங்கரவாதம் தலை விரித்தாடும் நாட்டில், மாட்டிறைச்சி எங்கள் இனத்தின் உணவு, அது மாட்டு மூத்திரம் குடிக்கும் உங்கள் கேடுகெட்ட ஆரிய கலாச்சாரத்தை விடவும் மேன்மையானது என்று முழங்கும்  தலைமையாக திகழ்வது அண்ணன் சீமான் மட்டும் தானே?.. முருகன் வேல் வைத்திருப்பது மரக்கறியை வெட்டவா? இறைச்சியை வெட்ட தானே? என்று கேட்கும் திராணி இன்று தமிழ்நாட்டில் வேறெந்த தலைவருக்கு இருக்கு?

இங்கே ஆமை கறி அரசியலை உங்களுக்கு முன் கட்டமைத்து, அண்ணன் சீமானை சிறுமைப்படுத்தும் கூட்டம், மாட்டிறைச்சி பற்றிய அவர் பேச்சை உங்களிடம் காட்டாது.

இது போல தான் பல கதைகள் பூதாகரமாக்கப்பட்டு உங்களுக்கு காண்பிக்கப்படும் போது, ஏதோ ஒரு முக்கியமான அரசியல் மறைக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்திருங்கள்.
இன்று ஏதோ ஒரு ஹோட்டல் கதையை தூக்கி கொண்டு வந்திருக்கு திராவிடம். சீமான் ஏன் நெடுமாறன் ஐயா, மணியரசன் ஐயா போல எளிமையாக இல்லை என்று திமுகவினர் கேள்வி ஒன்றை எழுப்புகிறார்கள்.

திமுகவினரின் அகராதியில் "எளிமை", 'அதிகாரமற்ற நிலை'
என்று பொருட்படும். நெடுமாறன் ஐயா, மணியரசன் ஐயா போல சீமானும் அதிகாரத்தை அண்டாமல் விலகி இருந்தால், திமுகவினர் சீமானையும் ஒரு எளிமையான மனிதராக தான் பார்த்திருப்பார்கள்.

Pauperism isnt humility.

இன்று
▪️நாம் தமிழர் வளர்ந்து விட்டது, இனி அதை அதிகாரம் கொண்டு எளிதில் ஒடுக்கிவிட முடியாது.

▪️நாம் தமிழரை கூட்டணி வலைக்குள்ளும் சிக்க வைக்க முடியாது,

▪️நாம் தமிழரை அங்கீகரித்து, சனநாயகரீதியாக அவர்களுடன் விவாதிப்பதும் ஆபத்து,

என்று எதையும் செய்ய முடியாது திணறி கொண்டிருக்கிறது திராவிடம். இந்த நிலையில் திராவிடத்தின் கையில் இருக்கும் ஒரே கருவி அவதூறு மட்டும் தான். அதனால் தான் அதை மட்டும் அதிகமாக கொட்டி தீர்க்கிறார்கள்.

சீமானும் அவரது தமிழ்த்தேசிய படையும் அதிகாரத்தை நெருங்க நெருங்க, அவர் மீதான அவதூறுகளும் அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.

அதனால் அண்ணன் சீமானுக்கு எதிரான அவதூறுகள் இனிமேல் நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கிறேன்.

-Mr. பழுவேட்டரையர்
9/4/21





Comments

  1. சிறப்பு 😍

    ReplyDelete
  2. உண்மைதான் பழு... இன்னும் புத்திசாலித்தனமாக இந்த திராவிட கூட்டத்தை கையாள வேண்டும்... அடிக்கிற அடியில் ஒருவனும் எதிராக நிற்க்க கூடாது...

    ReplyDelete
  3. தெளிவான விளக்கம் நண்பா...

    ReplyDelete
  4. வாதத்தில் தோற்றவன் ,அவதூறை கையில் எடுக்கிறான்

    ReplyDelete
  5. 👍👍👍👍👍❤️❤️

    ReplyDelete
  6. உண்மையில் அண்ணன் சீமானை காக்க வேண்டியது நமது கடமை

    ReplyDelete
  7. Correct 🤔nam tamilar katchi karan mayira kooda pudunga mudiyathu intha dmk vala

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...