Skip to main content

அன்று புரியவில்லை...

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த இரண்டு அனுபவங்களை பகிர ஆசைப்படுகிறேன்..

முதல் அனுபவம் புலிகள் தொடர்பானது. 👇

எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு, பாதை திறந்த சில மாத காலங்களிலேயே நாங்க குடும்பத்தோட யாழ்ப்பாணத்துக்கு வெளிகிட்டோம்...

அப்போதெல்லாம் இயக்கம் சோதனை சாவடியில் pass எடுப்பது, வாகன வரி கட்டுவது என்று நிறைய paper work இருக்கும் , எங்கட அப்பம்மா அதற்கு ஒத்துழைக்க மறுத்து, போராட்டத்தில் எங்கள் குடும்பம் இழந்தவற்றை பற்றி பேசி, அங்கு நின்ற அண்ணன்மாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார்.

வழக்கமாக சிங்கள ராணுவ சோதனை சாவடிகளில் அமைதியாக இருக்கும் அப்பம்மா, இங்கே புலிகளுக்கு முன் இப்படி தைரியமாக 'அதிகாரிகளுடன்' பேசுவது, ஒரு சிறுவனாய் எனக்கு வியப்பாக இருந்தது..

அப்பம்மாவின் பேச்சில் ஒரு வித கோபம் வெளிப்பட்டது. ஆனாலும் அந்த அண்ணன்மார் சிரித்த முகத்துடன்,
பக்குவமாக அவர்களின் சட்ட திட்டங்கள், படிவங்கள் நிரப்புவதன் காரணங்கள், அதன் கட்டணங்கள், வரி எங்கு செல்கிறது என்றெல்லாம் விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள்..

ஆனாலும் அப்பம்மா கேட்பதாக இல்லை, குரலை உயர்த்தி பேசிக்கொண்டே இருந்தார்.
எல்லாத்தையும் பொறுமையா காது கொடுத்து கேட்டுக்கொண்டிருந்த புலி அதிகாரிகள்,
மெல்ல,
"நீங்கள் இப்படி சுதந்திரமாக பேசுவதற்காக தான் அம்மா நாங்கள் போராடுகிறோம்...அதற்காக தான் இதெல்லாம்" என்றார்,

அதுக்கு பிறகு என்ன பேசுறது?

அப்பம்மாவின் கோபம் சற்று தணிந்தது, நிதானமாக படிவங்களை நிரப்பி கொடுத்துவிட்டு வந்துவிட்டார்..

போர் சூழலில் கடுமையாக போரிட்ட வீரர்கள் அமைதியாக மக்களை எதிர்கொள்ளும் அந்த பக்குவம் எனக்கு புதிதாக இருந்தது. 'அதிகாரி' என்ற சொல் மீதிருந்த அச்சம் சற்று விலகியது. அப்போது எனக்கு அந்த ஒழுக்கத்தின் முக்கியத்துவம் புரியவில்லை.

பிறகு ஒரு நாள், யாழில் எங்கள் நிலத்தை அபகரித்து வைத்திருந்த ஒரு ஒட்டு குழுவின்(புலிகளுடன் மோதிய தமிழ் ஒட்டுக்குழு இயக்கத்தில் ஒன்று) கொழும்பு அலுவலகத்திற்கு அப்பம்மா, மற்றும் ஒரு மூத்த சட்டத்தரணியுடன் சென்றிருந்தேன். எனக்கு அப்ப 13-14 வயதிருக்கும்..

குடும்பத்தில் இருந்த கடன் தொல்லைகள், மருத்துவ சிலவுகளை சமாளிக்க அந்த நிலத்தை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, வேறு வழி இல்லை.. அதனால் அதை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது..

இந்த சந்திப்பில் அந்த ஒட்டுக்குழுவின் தலைவர் எங்கள் சடத்தரணியை சந்திக்க முன் வந்தார், எங்கள் சட்டத்தரணி ஒரு முதியவர், அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த ஒட்டு குழுவின் தலைவர் கேட்பதாக இல்லை, அவருக்கு அருகில் இன்னொரு மேசையில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தவனை அந்த தலைவர் ஒரு பார்வை பார்த்தார், உடனடியாக அவன் எழுந்து அவன் அமர்ந்திருந்த கதிரையை தூக்கி எங்கள் சட்டத்தரணி மீது ஓங்கி, வெளியே போ என்று மிரட்டினான். உடனடியாக அந்த ஒட்டு குழு தலைவர், அவனை அமைதியாக இருக்கும்படி நிதானமாக சொன்னார். அவன் அமைதியாகிவிட்டான்... அச்சத்துடன் அப்பம்மாவும், சட்டத்தரணியும் வெளியே வந்தார்கள், பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு நிலம் கிடைத்துவிட்டது, ஆனாலும் அந்த அனுபவம் இன்னும் நினைவில் இருக்கு..

போர் சூழலில் இருந்த ஒரு அதிகாரியின் பக்குவத்துக்கும், ஒழுக்கத்துக்கும்,

போரற்ற சூழலில், அரசாங்கம் கொடுக்கும் பணத்தில், சிங்கள ராணுவத்தின் பாதுகாப்பில் வாழும் இந்த ஒட்டு குழுவின் தலைவனுக்கு இருந்த அகந்தைக்கும், திமிருக்கும்

இடையே இருந்த அந்த வித்தியாசத்தை நினைத்தால் இன்றும் வியப்பாக இருக்கு.

எல்லாம் வளர்ப்பை பொறுத்தது, எதுவும் இங்கே தற்செயல் அல்ல..

அன்று புரியவில்லை,

சிரித்த முகத்தில் நான் பார்ததுது வீரம் என்றும்,
கதிரையை தூக்கி ஓங்கிய முகத்தில் நான் பார்த்தது கோழைத்தனம் என்றும் 
எனக்கு அன்று புரியவில்லை.

இன்று புரிகிறது....



நன்றி
தமிழுடன்
Mr. பழுவேட்டரையர் 

Comments

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி...