Skip to main content

அன்று புரியவில்லை...

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த இரண்டு அனுபவங்களை பகிர ஆசைப்படுகிறேன்..

முதல் அனுபவம் புலிகள் தொடர்பானது. 👇

எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு, பாதை திறந்த சில மாத காலங்களிலேயே நாங்க குடும்பத்தோட யாழ்ப்பாணத்துக்கு வெளிகிட்டோம்...

அப்போதெல்லாம் இயக்கம் சோதனை சாவடியில் pass எடுப்பது, வாகன வரி கட்டுவது என்று நிறைய paper work இருக்கும் , எங்கட அப்பம்மா அதற்கு ஒத்துழைக்க மறுத்து, போராட்டத்தில் எங்கள் குடும்பம் இழந்தவற்றை பற்றி பேசி, அங்கு நின்ற அண்ணன்மாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார்.

வழக்கமாக சிங்கள ராணுவ சோதனை சாவடிகளில் அமைதியாக இருக்கும் அப்பம்மா, இங்கே புலிகளுக்கு முன் இப்படி தைரியமாக 'அதிகாரிகளுடன்' பேசுவது, ஒரு சிறுவனாய் எனக்கு வியப்பாக இருந்தது..

அப்பம்மாவின் பேச்சில் ஒரு வித கோபம் வெளிப்பட்டது. ஆனாலும் அந்த அண்ணன்மார் சிரித்த முகத்துடன்,
பக்குவமாக அவர்களின் சட்ட திட்டங்கள், படிவங்கள் நிரப்புவதன் காரணங்கள், அதன் கட்டணங்கள், வரி எங்கு செல்கிறது என்றெல்லாம் விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள்..

ஆனாலும் அப்பம்மா கேட்பதாக இல்லை, குரலை உயர்த்தி பேசிக்கொண்டே இருந்தார்.
எல்லாத்தையும் பொறுமையா காது கொடுத்து கேட்டுக்கொண்டிருந்த புலி அதிகாரிகள்,
மெல்ல,
"நீங்கள் இப்படி சுதந்திரமாக பேசுவதற்காக தான் அம்மா நாங்கள் போராடுகிறோம்...அதற்காக தான் இதெல்லாம்" என்றார்,

அதுக்கு பிறகு என்ன பேசுறது?

அப்பம்மாவின் கோபம் சற்று தணிந்தது, நிதானமாக படிவங்களை நிரப்பி கொடுத்துவிட்டு வந்துவிட்டார்..

போர் சூழலில் கடுமையாக போரிட்ட வீரர்கள் அமைதியாக மக்களை எதிர்கொள்ளும் அந்த பக்குவம் எனக்கு புதிதாக இருந்தது. 'அதிகாரி' என்ற சொல் மீதிருந்த அச்சம் சற்று விலகியது. அப்போது எனக்கு அந்த ஒழுக்கத்தின் முக்கியத்துவம் புரியவில்லை.

பிறகு ஒரு நாள், யாழில் எங்கள் நிலத்தை அபகரித்து வைத்திருந்த ஒரு ஒட்டு குழுவின்(புலிகளுடன் மோதிய தமிழ் ஒட்டுக்குழு இயக்கத்தில் ஒன்று) கொழும்பு அலுவலகத்திற்கு அப்பம்மா, மற்றும் ஒரு மூத்த சட்டத்தரணியுடன் சென்றிருந்தேன். எனக்கு அப்ப 13-14 வயதிருக்கும்..

குடும்பத்தில் இருந்த கடன் தொல்லைகள், மருத்துவ சிலவுகளை சமாளிக்க அந்த நிலத்தை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, வேறு வழி இல்லை.. அதனால் அதை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது..

இந்த சந்திப்பில் அந்த ஒட்டுக்குழுவின் தலைவர் எங்கள் சடத்தரணியை சந்திக்க முன் வந்தார், எங்கள் சட்டத்தரணி ஒரு முதியவர், அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த ஒட்டு குழுவின் தலைவர் கேட்பதாக இல்லை, அவருக்கு அருகில் இன்னொரு மேசையில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தவனை அந்த தலைவர் ஒரு பார்வை பார்த்தார், உடனடியாக அவன் எழுந்து அவன் அமர்ந்திருந்த கதிரையை தூக்கி எங்கள் சட்டத்தரணி மீது ஓங்கி, வெளியே போ என்று மிரட்டினான். உடனடியாக அந்த ஒட்டு குழு தலைவர், அவனை அமைதியாக இருக்கும்படி நிதானமாக சொன்னார். அவன் அமைதியாகிவிட்டான்... அச்சத்துடன் அப்பம்மாவும், சட்டத்தரணியும் வெளியே வந்தார்கள், பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு நிலம் கிடைத்துவிட்டது, ஆனாலும் அந்த அனுபவம் இன்னும் நினைவில் இருக்கு..

போர் சூழலில் இருந்த ஒரு அதிகாரியின் பக்குவத்துக்கும், ஒழுக்கத்துக்கும்,

போரற்ற சூழலில், அரசாங்கம் கொடுக்கும் பணத்தில், சிங்கள ராணுவத்தின் பாதுகாப்பில் வாழும் இந்த ஒட்டு குழுவின் தலைவனுக்கு இருந்த அகந்தைக்கும், திமிருக்கும்

இடையே இருந்த அந்த வித்தியாசத்தை நினைத்தால் இன்றும் வியப்பாக இருக்கு.

எல்லாம் வளர்ப்பை பொறுத்தது, எதுவும் இங்கே தற்செயல் அல்ல..

அன்று புரியவில்லை,

சிரித்த முகத்தில் நான் பார்ததுது வீரம் என்றும்,
கதிரையை தூக்கி ஓங்கிய முகத்தில் நான் பார்த்தது கோழைத்தனம் என்றும் 
எனக்கு அன்று புரியவில்லை.

இன்று புரிகிறது....



நன்றி
தமிழுடன்
Mr. பழுவேட்டரையர் 

Comments

Post a Comment

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக