Skip to main content

சாப்பிடலாம் வாங்கோ

ஈழத்தில் சோறுக்கு மேல கறிகள் எல்லாத்தையும் உண்டன ஊத்தி சாப்பிடும் பழக்கம், வழக்கமா இருக்கு. 
இதை அவதானித்த ஒருவர், மேலே உள்ள படத்தை நான் twitterஇல் பகிர்ந்ததை விமர்சிக்கும் விதமாக,

 "பிச்சைக்காரி தட்டு போல எல்லாம் ஒன்னா போட்டுதான் திங்கனுமா?? தட்டை விட திருவோடு கரெக்டா இருக்கும்"
என்று பதிவிட்டிருந்தார்..

அவருக்கு நான் கொடுத்த பதில்;

மலை போல சோற தட்டுல/இலையில போட்டு, அதுக்கு மேல காய் கறிய போட்டு, குழம்ப ஊத்தி, குழைச்சு சாப்பிடுவது தான் எங்கள் பழக்கம். கறிய தனியா வெச்சு தொட்டு சாப்பிடுறது எல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. எந்த கறியையும் ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது பாருங்கோ. தனியா விருப்பம் இல்லாத சில சத்தான உணவுகள் கூட குழையலில், தேனுடன் மருந்து போல் சாப்பிடலாம்.

சோறு, புட்டு, இடியப்பதுக்கெல்லாம், உண்டன கறியவோ, சொதியவோ விடாமல் ரொட்டி மாதிரி தொட்டு சாப்பிட முடியாது. ஒரு வேளை சாப்பாட்டில் முழு நாளை ஓட்டும் என் தரவழி ஆளுங்களுக்கு இப்படி சாப்பிட்டா தான் 12-14hrs at a stretch வேலை செய்ய முடியும்..

ஒரு முறை தெரியாமல் சரவண பவனுக்குள் நுழைந்துவிட்டேன். காகத்துக்கு வைக்குற மாதிரி சின்ன பாத்திரத்தில் கொண்டு வந்து சோற வெச்சான். ஒரு அரிசி மூட்டை வாங்கி கொடுத்து, சமைச்சு கொண்டு வாங்கோ எண்டு சொல்லோனும் போல இருந்துச்சு.

கீரை வகைகளை விட நெய், தயிர் தான் அந்த உணவுகளில் அதிகமாக இருந்தது. அதனாலேயே சரவண பவன் மாதிரி கடைகளை தவிர்க்கிறேன். எங்கட Portion size பெருசா இருந்தாலும், "பிச்சைக்காரன்" மாதிரி சாப்பிட்டாலும், இது நல்ல தரமான சாப்பாடு தான்.

தமிழ் உணவுகளுக்கு பிறகு, திராவிட ஒன்றிய உணவுகளில் தெலுங்கு தேசிய கடைகளில் தான் அதிகம் விரும்பி ஆட்டிறைச்சி பிரியாணி சாப்பிடுவேன், அவர்கள் கீரையை வைத்தும் ஒரு பிரியாணி செய்வார்கள், நல்லா இருக்கும். அதன் portion sizeஉம் உரைப்பும் எங்கட நாக்குக்கு ஏற்ற மாதிரி இருக்கும்..
Melbourneஇல் தெலுங்கு நண்பனின் பரிந்துரையில் சாப்பிட்ட கோங்குரா பிரியாணி

தோசை இட்லி எல்லாம் தனிப்பட்ட முறையில் எனக்கு இறங்காது. Lightஆன itemனா எங்கட ஊர் அப்பம் தான் நமக்கு சரி.
சிட்னி ஈழத்து கடை அப்பம்

புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் கதைய கேட்டு பலருக்கு சிவபெருமான் மீது மதிப்பு கூடியது, ஆனால் என் தரவழி ஆளுங்களுக்கு, சாப்பாட்டு ராவனங்களுக்கு, புட்டு மேல தான் மதிப்பு கூடியாது 😂
ஊரில் அப்பம்மா சமையல்: சுறா வறையும் புட்டும்

இரவு மிஞ்சும் புட்டு, இடியப்பத்த, அடுத்த நாள் காலையில் வெங்காயம், கிழங்கு, முட்டையுடன் பிரட்டி சாப்பிடுவம், வழக்கமா அது தான் பாடசாலைக்கு எடுத்து செல்லும் உணவாகவும் இருக்கும். அப்படி பிரட்டப்பட்ட புட்ட, சம்பல் தொட்ட துண்டு பான் உடன் அள்ளி சாப்பிட்டாலும் தனி ருசி தான்.
நண்பன் துவாவுடன் புட்டு கொத்தும் இடியப்பமும், யாழ் restaurant கொழும்பில்

மத்தியானம் மிஞ்சிய சோரையும் மரக்கறியையும்(இறைச்சி மிஞ்சாது), இரவு சூடாக்கி, எல்லாத்தையும் ஒரு தட்டில் போட்டு,ரசம் கொஞ்சம் ஊத்தி குழைச்சு, பெரிய குழையல் உருண்டையாக பிடித்து, அப்பம்மா வீட்டில் உள்ள எல்லோரும் சுத்தி வர அமர பரிமாறுவார்கள்.

சிறுவர்களுக்கு இடியப்பம் அல்லது புட்டுடன் தேங்காய்ப்பூ மட்டும் சீனி சேர்த்து குழைத்து ஊட்டுவீனம். கொஞ்சமா பாலும் விடலாம்...

இந்த குழைத்து உண்ணும் பழக்கம் தான் Ceylon Burgher இன குழுமத்தின் Lampraisக்கும் inspirationஆ இருந்திருக்க கூடும்.சோறுடன் எல்லா கறியையும் சேர்த்து ஒரு வாழையிலையில் பொட்டலமாக கட்டி அவித்து உண்ணும் உணவு.மீன் cutletஉம் உள்ளே இருக்கும்.போன மார்கழியில் நான் ஈழத்தில் சாப்பிட்ட lamprais 
Colombo 'Variety' Lamprais 2017

'ஈழத்து வாழ்வும் வளமும்' என்ற நூலில் ஈழத்து உணவை பற்றி பேசும் போது பேராசிரியர் கணபதி

"இராவிலே எஞ்சிய கறிகள் யாவற்றையும் ஒன்று சேர்த்துக்(குழைத்து 🙂) கவளமாகத் திரட்டிக் கையிலே ஏந்தி வைத்துண்பர்"...

என்ற அந்த பழக்கம் தான் இன்றுவரை தொடர்கிறது. 

அநேகமான உணவுகளை பற்றி படங்களுடன் பேசிவிட்டேன், சங்கீகள் specialஆ எதுக்கும் கிளிநொச்சி பாரதி உணவகத்தில் சாப்பிட்ட மாட்டிறைச்சி சோரையும் இங்கே பகிர்கிறேன் 😂 😉👇


உலக சராசரியுடன் ஒப்பிடும் போது ஈழத்தில் அதிகமாகவே சோறு உண்பார்கள்.
உலக சராசரிப்படி ஒரு மனிதன் ஒரு வருடத்துக்கு 54kg சோறு சாப்பிடுகிறான்
ஈழத்தில் ஒரு மனிதன் ஒரு வருடத்துக்கு 108kg சோறு சாப்பிடுகிறான். 
(கொழும்பில் 2017 மார்கழியில் சாப்பிட்ட சவன்)

இறுதியாக,

வயிறார சாப்பாடு,
சுட சுட தேத்தண்ணி,
அறிவார்ந்த உரையாடல்,
திகட்டாத உழைப்பு,
சிந்திக்க வைக்கும் வாசிப்பு, கொள்கையுள்ள வாழ்வியல், நேர்த்தை களவாடும் நண்பர்கள், நேசத்தை பரிமாறும் உறவுகள்,
கொட்டி தீர்க்க காதல்
வெட்டி தள்ள பகை
பெருமை பேச தமிழ்
போதும் வாழ்க்கை ..

That's all. 

தமிழுடன்,
Mr. பழுவேட்டரையர் 

Comments

  1. என்னையே நான் மறந்துவிட்டேன் தோழா அருமை அருமை இன்றும் நம் உணவில் பல மாற்றங்கள் வந்தாலும் நம் பழைய சோறும் மோரும் வெங்காயமும் மாறவில்லை இலங்கையாக இருந்தால் என்ன இந்தியாவாக இருந்தால் என்ன எங்கு இருப்பினும் பிறப்பினும் தமிழன் தமிழனே

    ReplyDelete
  2. உங்களுடைய பதிவு,
    ஒவ்வொரு பதார்தத்தையும் நானே ருசித்த உனர்வு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக