Skip to main content

சாப்பிடலாம் வாங்கோ

ஈழத்தில் சோறுக்கு மேல கறிகள் எல்லாத்தையும் உண்டன ஊத்தி சாப்பிடும் பழக்கம், வழக்கமா இருக்கு. 
இதை அவதானித்த ஒருவர், மேலே உள்ள படத்தை நான் twitterஇல் பகிர்ந்ததை விமர்சிக்கும் விதமாக,

 "பிச்சைக்காரி தட்டு போல எல்லாம் ஒன்னா போட்டுதான் திங்கனுமா?? தட்டை விட திருவோடு கரெக்டா இருக்கும்"
என்று பதிவிட்டிருந்தார்..

அவருக்கு நான் கொடுத்த பதில்;

மலை போல சோற தட்டுல/இலையில போட்டு, அதுக்கு மேல காய் கறிய போட்டு, குழம்ப ஊத்தி, குழைச்சு சாப்பிடுவது தான் எங்கள் பழக்கம். கறிய தனியா வெச்சு தொட்டு சாப்பிடுறது எல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. எந்த கறியையும் ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது பாருங்கோ. தனியா விருப்பம் இல்லாத சில சத்தான உணவுகள் கூட குழையலில், தேனுடன் மருந்து போல் சாப்பிடலாம்.

சோறு, புட்டு, இடியப்பதுக்கெல்லாம், உண்டன கறியவோ, சொதியவோ விடாமல் ரொட்டி மாதிரி தொட்டு சாப்பிட முடியாது. ஒரு வேளை சாப்பாட்டில் முழு நாளை ஓட்டும் என் தரவழி ஆளுங்களுக்கு இப்படி சாப்பிட்டா தான் 12-14hrs at a stretch வேலை செய்ய முடியும்..

ஒரு முறை தெரியாமல் சரவண பவனுக்குள் நுழைந்துவிட்டேன். காகத்துக்கு வைக்குற மாதிரி சின்ன பாத்திரத்தில் கொண்டு வந்து சோற வெச்சான். ஒரு அரிசி மூட்டை வாங்கி கொடுத்து, சமைச்சு கொண்டு வாங்கோ எண்டு சொல்லோனும் போல இருந்துச்சு.

கீரை வகைகளை விட நெய், தயிர் தான் அந்த உணவுகளில் அதிகமாக இருந்தது. அதனாலேயே சரவண பவன் மாதிரி கடைகளை தவிர்க்கிறேன். எங்கட Portion size பெருசா இருந்தாலும், "பிச்சைக்காரன்" மாதிரி சாப்பிட்டாலும், இது நல்ல தரமான சாப்பாடு தான்.

தமிழ் உணவுகளுக்கு பிறகு, திராவிட ஒன்றிய உணவுகளில் தெலுங்கு தேசிய கடைகளில் தான் அதிகம் விரும்பி ஆட்டிறைச்சி பிரியாணி சாப்பிடுவேன், அவர்கள் கீரையை வைத்தும் ஒரு பிரியாணி செய்வார்கள், நல்லா இருக்கும். அதன் portion sizeஉம் உரைப்பும் எங்கட நாக்குக்கு ஏற்ற மாதிரி இருக்கும்..
Melbourneஇல் தெலுங்கு நண்பனின் பரிந்துரையில் சாப்பிட்ட கோங்குரா பிரியாணி

தோசை இட்லி எல்லாம் தனிப்பட்ட முறையில் எனக்கு இறங்காது. Lightஆன itemனா எங்கட ஊர் அப்பம் தான் நமக்கு சரி.
சிட்னி ஈழத்து கடை அப்பம்

புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் கதைய கேட்டு பலருக்கு சிவபெருமான் மீது மதிப்பு கூடியது, ஆனால் என் தரவழி ஆளுங்களுக்கு, சாப்பாட்டு ராவனங்களுக்கு, புட்டு மேல தான் மதிப்பு கூடியாது 😂
ஊரில் அப்பம்மா சமையல்: சுறா வறையும் புட்டும்

இரவு மிஞ்சும் புட்டு, இடியப்பத்த, அடுத்த நாள் காலையில் வெங்காயம், கிழங்கு, முட்டையுடன் பிரட்டி சாப்பிடுவம், வழக்கமா அது தான் பாடசாலைக்கு எடுத்து செல்லும் உணவாகவும் இருக்கும். அப்படி பிரட்டப்பட்ட புட்ட, சம்பல் தொட்ட துண்டு பான் உடன் அள்ளி சாப்பிட்டாலும் தனி ருசி தான்.
நண்பன் துவாவுடன் புட்டு கொத்தும் இடியப்பமும், யாழ் restaurant கொழும்பில்

மத்தியானம் மிஞ்சிய சோரையும் மரக்கறியையும்(இறைச்சி மிஞ்சாது), இரவு சூடாக்கி, எல்லாத்தையும் ஒரு தட்டில் போட்டு,ரசம் கொஞ்சம் ஊத்தி குழைச்சு, பெரிய குழையல் உருண்டையாக பிடித்து, அப்பம்மா வீட்டில் உள்ள எல்லோரும் சுத்தி வர அமர பரிமாறுவார்கள்.

சிறுவர்களுக்கு இடியப்பம் அல்லது புட்டுடன் தேங்காய்ப்பூ மட்டும் சீனி சேர்த்து குழைத்து ஊட்டுவீனம். கொஞ்சமா பாலும் விடலாம்...

இந்த குழைத்து உண்ணும் பழக்கம் தான் Ceylon Burgher இன குழுமத்தின் Lampraisக்கும் inspirationஆ இருந்திருக்க கூடும்.சோறுடன் எல்லா கறியையும் சேர்த்து ஒரு வாழையிலையில் பொட்டலமாக கட்டி அவித்து உண்ணும் உணவு.மீன் cutletஉம் உள்ளே இருக்கும்.போன மார்கழியில் நான் ஈழத்தில் சாப்பிட்ட lamprais 
Colombo 'Variety' Lamprais 2017

'ஈழத்து வாழ்வும் வளமும்' என்ற நூலில் ஈழத்து உணவை பற்றி பேசும் போது பேராசிரியர் கணபதி

"இராவிலே எஞ்சிய கறிகள் யாவற்றையும் ஒன்று சேர்த்துக்(குழைத்து 🙂) கவளமாகத் திரட்டிக் கையிலே ஏந்தி வைத்துண்பர்"...

என்ற அந்த பழக்கம் தான் இன்றுவரை தொடர்கிறது. 

அநேகமான உணவுகளை பற்றி படங்களுடன் பேசிவிட்டேன், சங்கீகள் specialஆ எதுக்கும் கிளிநொச்சி பாரதி உணவகத்தில் சாப்பிட்ட மாட்டிறைச்சி சோரையும் இங்கே பகிர்கிறேன் 😂 😉👇


உலக சராசரியுடன் ஒப்பிடும் போது ஈழத்தில் அதிகமாகவே சோறு உண்பார்கள்.
உலக சராசரிப்படி ஒரு மனிதன் ஒரு வருடத்துக்கு 54kg சோறு சாப்பிடுகிறான்
ஈழத்தில் ஒரு மனிதன் ஒரு வருடத்துக்கு 108kg சோறு சாப்பிடுகிறான். 
(கொழும்பில் 2017 மார்கழியில் சாப்பிட்ட சவன்)

இறுதியாக,

வயிறார சாப்பாடு,
சுட சுட தேத்தண்ணி,
அறிவார்ந்த உரையாடல்,
திகட்டாத உழைப்பு,
சிந்திக்க வைக்கும் வாசிப்பு, கொள்கையுள்ள வாழ்வியல், நேர்த்தை களவாடும் நண்பர்கள், நேசத்தை பரிமாறும் உறவுகள்,
கொட்டி தீர்க்க காதல்
வெட்டி தள்ள பகை
பெருமை பேச தமிழ்
போதும் வாழ்க்கை ..

That's all. 

தமிழுடன்,
Mr. பழுவேட்டரையர் 

Comments

  1. என்னையே நான் மறந்துவிட்டேன் தோழா அருமை அருமை இன்றும் நம் உணவில் பல மாற்றங்கள் வந்தாலும் நம் பழைய சோறும் மோரும் வெங்காயமும் மாறவில்லை இலங்கையாக இருந்தால் என்ன இந்தியாவாக இருந்தால் என்ன எங்கு இருப்பினும் பிறப்பினும் தமிழன் தமிழனே

    ReplyDelete
  2. உங்களுடைய பதிவு,
    ஒவ்வொரு பதார்தத்தையும் நானே ருசித்த உனர்வு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற