தமிழினப்படுகொலையில் சிங்கள அரசோடு நகமும் சதையுமாக இலங்கையின் முஸ்லிம் அமைப்புகளும் தலைமைகளும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத, வெளிப்படையான உண்மை.
இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் தொடர்பான எல்லா உரையாடல்களிலும் எப்படி வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது பேசப்படுகிறதோ, அதே போல கிழக்கில் இருந்து முஸ்லிம் ஊர்காவல் படையால் வெளியேற்றப்பட்ட தமிழர்களின் வரலாறும், மொழியுரிமையில் இருந்து ஈஸ்டர் தாக்குதல் வரையிலான அனைத்து விடயங்களிலும் முஸ்லிம் தலைமைகளின் தமிழர் விரோத போக்கும் பேசப்பட வேண்டும்.
இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை சிங்களத்தின் பயங்கரவாதத்தால் அதிக உரிமைகள், உயிர்கள், உடமைகளை இழந்தது ஈழத்தமிழர்கள் தான்.
ஆனால் இன்றோ ஈழத்தமிழர்கள் மீதே பழியை திருப்பி போட சிலர் ஆரம்பித்துவிட்டார்கள்.
குறிப்பா சமீபத்தில் இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம், தேசியத் தலைவருடனான சந்திப்பு பற்றி பேசிய ஒரு பேச்சு, தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, ஆனால் அந்த பதிவுகளுக்கு கீழே பதிவிட்ட பெரும்பாலான முஸ்லிம் சகோதரர்கள், தமிழர்களையும் இயக்கத்தையும் தங்கள் முதன்மை விரோதிகளாக முன்னிருத்தி வன்மத்தை கொட்டினார்கள். காத்தான்குடி படுகொலை, வடக்கில் இருந்து முஸ்லிம் வெளியேற்றம் பற்றி தான் அதிகம் பேசினார்கள்.
தமிழர்கள் நாமும், நமது முஸ்லிம் சகோதரர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
காத்தான்குடி படுகொலை இயக்கத்தின் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு, இருப்பினும் அதை அவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள், ஆனால் தமிழர்கள் நாம் அந்தளவுக்கு தீவிரமாக ஏன் முஸ்லிம் ஊர்காவல் படையின் படுகொலைகளை பற்றி பேசுவதில்லை?
கிழக்கில் நடந்த மிகப்பெரும் படுகொலையான, தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம் ஊர்காவல் படை செய்த வீரமுனை படுகொலை பற்றி நாங்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?
தமிழர்கள் உயிர்களுக்கு மதிப்பில்லையா? இல்லை முஸ்லிம் ஊர்காவல் படை செய்த படுகொலைகளை பேச கூடாது என்று ஏதாவது வாய் பூட்டு சட்டம் இருக்கிறதா?
அதுக்கு பிறகு வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது தவறான நடவடிக்கை என்று இயக்கமே ஏற்றுக்கொண்டு மன்னிப்பும் கேட்டது. இலங்கையில் இப்படி எந்த தரப்பும் இன்னொரு குழுமத்திடம் மன்னிப்பு கோரியதில்லை. ஆனால் இயக்கம் அதன் தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டது. ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை முஸ்லிம் தலைமைகள் தமிழர்களுக்கு விரோதமாக தானே செயல்பட்டு வருகிறார்கள்?. அதற்கு முஸ்லிம் தரப்பில் இருந்து யார் மன்னிப்பு கேட்க போறது.
ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பெரும்பான்மை இனத்தோடு, அவர்களுக்கு துணையாக நிற்பது என்பது அவர்களின் உரிமை. அதை நான் மதிக்கிறேன். தமிழர்களுக்கு யாரோடும் கூட்டணி வைத்து போராட வேண்டும் என்ற தேவை இல்லை. ஆனால் சிங்களவர்களிடம் உங்கள் விஸ்வாசத்தை நிரூபிக்க தமிழர்களை குற்றவாளிகளாக சித்தரித்தால், அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்கள் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
உண்மையான நல்லிணக்கம் பிறக்க வேண்டும் என்றால், உண்மையை உள்ளபடி பேச வேண்டும். பேசுவோம்.
-@mrpaluvets
10/02/2026
Comments
Post a Comment