Skip to main content

திமுகவை இறங்கியடிக்குது த.வெ.க!குழம்பி தவிக்குது நா.த.க!

பழைய குருடி கதவை திறடி கதையா, கட்சி தொடங்கியதில் இருந்து 24,843 ஆவது தடவையாக மீண்டும் பெரியார் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடக்கி வைத்து, பௌர்ணமிக்கு பௌர்ணமி செத்த குதிரையை அடிக்கும் சடங்கை செய்து கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. 


பெரியாரை நாம் தமிழர் எதிர்ப்பதும், தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அதற்காக செலவிடுவதும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவாக இருப்பதினால், அதில் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றே நினைக்கிறேன். அந்த நடவடிக்கை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக விலகி செல்லலாம்.

ஆனால் இந்த பெரியார் எதிர்ப்பின் ஊடாக, திராவிட கட்டமைப்பை வீழ்த்தி விடலாம் என்பதெல்லாம் வெறும் பொய் வெட்டி பிரச்சாரம் என்ற உண்மையையும் நாம் அடிக்கடி நினைவூட்ட வேண்டிய தேவையும் இருக்கிறது.

திமுக எனும் கட்டமைப்பு பெரியாரையோ, அவரின் தத்துவத்தையோ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்பல்ல. பெரியார் எதிர்ப்பு அரசியல் ஊடாக திமுகவை வீழ்த்துவது, கண்ணாடியை திருப்பி வண்டியை start பண்ணும் பம்மாத்து வித்தை தான். 

திராவிடம் பொருளற்ற ஒரு அரசியல் brandஆக மட்டுமே தான் மிஞ்சியிருக்கு. இன்று பெரியாரை பற்றிய அறிவோ, அறிதலோ பெரும்பாலான தமிழர்கள் மத்தியில் இல்லை என்பது தான் உண்மை. நடிகர் பிரதீப் ரங்கநாதனை அறிந்த அளவு மக்கள் கூட்டம் கூட பெரியாரை தமிழ்நாட்டில் இன்று அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

அதனால் பெரியாரின் மீது சூட்டப்படும் புகழும், இழிவும், எந்த தராசிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. 

அதனால் நாம் தமிழர் இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு பெரியாரை அடிப்பதினால் எந்த பயனும் கிடையாது. மிஞ்சி போனால் பெரியார் என்ற பெயர் மீது அதீத வெறுப்பை கட்டமைக்க முடியுமே தவிர, அந்த பிரச்சாரத்தால், சமகால அரசியலில் எந்த லாபத்தையும் அவர்களால் அடைய முடியாது. 

திமுக அதன் பணத்தையும் ஆற்றலையும், பெரியாரியத்தை, வளர்ப்பதிலோ, கட்டமைப்பதிலோ செலவிடுவதில்லை. அவர்கள் அறிஞர் அண்ணா, மற்றும் கருணாநிதயை மையமாக வைத்து தான் அவர்களின் கட்சியின் வரலாறை எழுதி வருகிறார்கள். திமுகவால், இன்னும் ஒரு சொற்ப காலத்தில் பெரியார் கூட இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில் தான் இருக்கிறார். 

Taking the above into consideration, நாம் தமிழரின் இன்றைய அரசியலால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்க போவதில்லை. 


இந்த இடத்தில் தான் த.வெ.க தெளிவான ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்து வருகிறது. 
ஒரு குறுகிய காலப்பகுதிக்குள்ளே தமிழக அரசியல் நிலவரத்தை DMK vs TVK என்ற இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் விஜய். தெளிவாக திமுக மட்டுமே தான் எங்கள் முதன்மை எதிரியென அடையாளப்படுத்தி, திமுக மீதான தாக்குதல்களை கூர்மைப்படுத்தி வருகிறது த.வெ.க.

போதாக்குறைக்கு திமுக கூட்டணிக்குள்ளும் த.வெ.கவின் நடவடிக்கை ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கு. 

செங்கோட்டையன் போன்றவர்களின் வரவு த.வெ.கவின் கட்டமைப்பு பலம் தொடர்பான கேள்விகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

விஜயை காண அலைமோதும் கூட்டம், த.வெ.க வெற்றிப்பெற கூடிய ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. 

பணம், ஊடகம், மக்கள் கூட்டம், இந்த மூன்றிலும் தான் திமுகவின் அதிகார நீட்சி தங்கியிருக்கு. இந்த மூன்றிலும் திமுகவை வீழ்த்தும் அளவுக்கான வலு சக்தியாக விஜய் இருக்கிறார் என்ற செய்தி மக்களுக்கு தெளிவாக கடத்தப்பட்டு வருகிறது. திமுகவை வீழ்த்த கூடிய பலம் பொருந்திய மக்கள் சக்தியாகவும் த.வெ.க மக்கள் மத்தியில் காட்சியளிக்கிறது. 

திமுக எதிர்ப்பில் தற்போது த.வெ.கவின் கை தான் ஓங்கி இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க த.வெ.கவின் கவனத்தை சிதைக்கும் நோக்குடன் நிறைய வேலைத்திட்டங்களில் திமுக நிச்சயம் ஈடுபடும். அதையெல்லாம் எப்படி விஜய் சமாளிப்பார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாம் தமிழரை பற்றி என்ன சொல்ல இருக்கிறது? அவர்களுக்கு பெரியார் ஒழிக என்று கோஷமிடவே நேரம் சரியாக இருக்கும். அதை அவர்கள் செய்துட்டு போகட்டும். 

-Mr. பழுவேட்டரையர் 
30/12/2025

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி...