Skip to main content

பிள்ளை கடத்தல்காரன் டக்ளஸ் கைது. தமிழர்கள் கொண்டாட்டம்!

டக்லஸ் தேவானந்தா எனும் கொடிய மிருகம் சமீபத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட செய்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு சிங்கள Drug Mafia Underworld Gangsterக்கு தன்னிடமிருந்த துப்பாக்கியை வழங்கிய குற்றத்துக்கு இந்த டக்லஸ் மிருகம் கைது செய்யப்பட்டிருக்கு. 
தமிழினத்தை சிங்களத்துக்கு காட்டி கொடுத்து, காவு கொடுத்த மிருகங்களில் முதன்மையானவன் இந்த டக்ளஸ். EPRLF பத்மநாபாவின் சீடனான இவன், 80களில்
EPRLFஇன் ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தான். EPRLFஇன் ராணுவ வீழ்ச்சிக்கு இவனும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தான் என்று சொல்லலாம். பின்னர் இந்திய அமைதி காக்கும் படை EPRLFஐயும் அதன் தலைமையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், இவன் அந்த அமைப்பில் இருந்து விலகி, தனியாக ஒரு அமைப்பை EPDP என்று உருவாக்கி, சிங்கள அரசுடன் இணைகிறான். 

விடுதலை புலிகள் இயக்கம், மற்றும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராட கூடிய அனைவரையும், சிங்களத்திடம் காட்டி கொடுத்து, கொன்று குவிக்கும் அடியாள் வேலையை இவன் யாழ்ப்பாணத்தில் இருந்து செய்து வந்தான். இவனோடு பயணிக்கும் ஆட்களுக்கு சிங்கள அரசின் தயவால், மாதாந்தம் சம்பளம் , சாராயம், குடும்பத்தினருக்கு அரச வேலைகள், பதவிகள் வழங்கப்பட்டது. 

இலங்கை வடக்கில் உள்ள தீவக பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டு, தமிழர்களுக்கு எதிரான பல படுகொலைகளை, ஆட்கடத்தல், போதை பொருட்கடத்தல், போன்ற குற்ற செயல்களை செய்து வந்தான். தென்னிலங்கையில் என்ன ஆட்சி மாற்றம் நடந்தாலும், இவனுக்கு நிச்சயம் ஏதாவதொரு அமைச்சு பதவி வழங்கப்பட்டு வந்தது. இவன் செய்த கொடூர செயல்களிலே மிகவும் கொடூரமானது ஆதரவற்று இருந்த சிறுவர்களை கடத்தி அடிமைகளாக விற்றது தான். எண்ணற்ற தமிழ் சிறுவர்கள், குறிப்பாக ஆண்கள், இவனது கும்பலால் கடத்தப்பட்டு, வெளிநாட்டு மாபியாக்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். இந்த குற்றங்கள் குறித்தான ஆதாரங்களை வெளியே கொண்டு வந்த ஸ்டீபன் சுந்தரராஜ் எனும் World Vision குழந்தை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரையும் இவனது கும்பல் படுகொலை செய்தது. 

இப்படி இந்த மிருகம் செய்த படுகொலைகள் குற்றங்கள் சிலவற்றின் பட்டியல்..

1989 (சென்னை, இந்தியா): ஒரு 10-வயது சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த குற்றத்துக்காக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டான். அதற்கு பிறகு சூளைமேடு துப்பாக்கி சூடு சம்பவத்திலும் இவன் மீது வழக்கிருக்கு. 

1 ஜனவரி 1993 (கொழும்பு): தர்மலிங்கம் செல்வகுமார் என்ற முன்னாள் ஈ பி டி பி உறுப்பினர் ஒருவர் டக்ளசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததற்காக கடத்தப்பட்டு, சித்தரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டான். 

90களில் ஈபிடிபி சிங்கள ராணுவத்தோடு சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான ஆயிரக்கணக்கான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது. 

2 நவம்பர் 1999 (கொழும்பு): தமிழ் வார பத்திரிகை தினமுரசு இலக்கிய மற்றும் தலைமை ஆசிரியரான அற்புதராஜா நடராஜாவை அவரது டிரைவர் உடன் சுட்டுத் தள்ளினார்கள் இந்த ஈபிடிபியினர். 

19 அக்டோபர் 2000 (யாழ்ப்பாணம்): மைல்வாகணம் நிமல்ராஜன் – யாழில் உள்ள Uthayan, BBC தமிழ் & சிங்கள சேவைகள், விரகேசரி, போன்ற ஊடகங்களுக்கு எழுதும் பத்திரிகையாளர் ஈபிடிபியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

2 மே 2006 (யாழ்ப்பாணம்): சுரேஷ் குமார், ரஞ்ஜித் குமார் – Uthayan பத்திரிகை ஊழியர்கள் ஈபிடிபியினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். 

13 மே 2008 (யாழ்ப்பாணம்): மகேஸ்வரி வேலாயுதம் – மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் சமூக நலத் துறை ஆலோசகர்,ஈபிடிபியினரால் படுகொலை செய்யப்பட்டார்.

2009: ஸ்டீபன் சுந்தர்ராஜ் – World Vision குழந்தை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், ஈபிடிபியினரால் படுகொலை செய்யப்பட்டார்

2012 (நெடுந்தீவு): 12-வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு ஈபிடிபி காடையரால் படுகொலை செய்யப்பட்டாள்  

இப்படி ஆயிரக்கணக்கான குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இந்த மிருகம் ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டாலும், அவன் கைது செய்யப்பட்ட செய்து தமிழர்கள் மத்தியில் கொண்டாட்டத்துக்குரிய செய்தியாகவே பார்க்கப்படுகிறது. 

-mrpaluvets
08/01/26

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...