Skip to main content

1915 சிங்கள முஸ்லிம் கலவரம் - சிங்கள உழைக்கும் வர்க்கம் பக்கம் நின்ற ராமநாதன்! வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள்.

1915 நடந்த முஸ்லிம் சிங்கள கலவரத்தின் பின்னர், அமுல்ப்படுத்தப்பட்ட martial lawஇன் அடிப்படையில் இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்களிடம் இருந்து கலவரத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பீடு என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அன்று 50, 60 சதங்கள் கணக்கில் உழைத்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர்களிடமிருந்தெல்லாம் 6000, 7000 தண்டனை கட்டணமாக கோரப்பட்டது.

அந்த தொகையை கட்ட முடியாதவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் உடமைகள் பறிக்கப்பட்டது.


கண்டியில் நடந்த கலவரத்துக்கு எப்படி இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் பொறுப்பாவார்கள்? குறிப்பிட்ட கலவரத்தை தொடக்கி வைத்த வெளிநாட்டு முஸ்லிம் வார்த்தகர்களின் அரசியலையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

கண்டியில் உள்ள இலங்கையை சேர்ந்த சோனகர்களும், அவர்களின் பள்ளிவாசல் நிர்வாகமும் குறிப்பிட்ட பௌத்த பெரஹேராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஒட்டுமொத்த சோனகர்களும் எதிர்ப்பு தெரிவித்தது போல் தான் சித்தரிக்கப்பட்டது.

அன்று பொன்னம்பலம் ராமநாதன் Martial lawக்கு எதிராக வாதாடினார் என்று சொல்லும் போது, இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் மீது  சுமத்தப்பட்ட குற்றத்துக்கு எதிராகவும் தான் வாதாடினார். அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாமல் வறுமையில் வாடிய சிங்கள கிராமங்களில் உள்ள மக்களின் மீதும் Martial law பாய்ந்தது. அவர்களுக்கும் கலவரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொன்னம்பலம் ராமநாதனின் நடவடிக்கையால் விடுதலையான 8000க்கு மேற்பட்ட சிங்களவர்களில் இப்படிப்பட்ட கூலித் தொழிலாளர்களும் அடங்குவார்கள்.

Martial lawஆல் ஒவ்வொரு ஊரிலும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் விவரங்களை எல்லாம் சேகரித்து அவர்களுக்கான நீதியையும் பெற்று கொடுத்தார் ராமநாதன். அதனால் தான் சிங்களவர்கள் அவரை தலைக்கு மேல் தூக்கி கொண்டாடினார்கள்.

ராமநாதன் மற்றும் அன்று தலையிடாமல் Martial law தொடர்ந்து நீடித்திருந்தால், இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்களின் கோபம், கண்டிக்கு வெளியே வாழும் அப்பாவி சோனகர்களுக்கு எதிராகவும் திரும்பியிருக்கும்.

ராமநாதன் ஒரு சிக்களுக்குரிய அரசியல்வாதி என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் 1915இல் அவர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வாதாடினார் என்று பொது புத்தியில் ஏற்றப்பட்ட கதையானது ஆதாரமற்ற கட்டுக் கதை.

Martial law தண்டனை கட்டனத்தால் பாதிக்கப்பட்ட சில சிங்கள ஊர்களை பற்றிய விவரத்தை, பதிவோடு இணைக்கப்பட்டிருக்கும் ராமநாதன் உரையின் சில பக்கங்களில் காணலாம்.
-mrpaluvets, 08/02/26




Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...