இன்று இலங்கையின் ஆளுங்கட்சியாக இருக்கும் JVP அல்லது NPPஐ ஏதோ ஒரு மாபெரும் புரட்சிக்கர இயக்கம் போல சிலர் சித்தரிப்பதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. சிங்கள தேசத்துக்குள் இருந்த இடதுசாரி அமைப்புகளை, அதிலும் குறிப்பாக தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிங்கள இடதுசாரி அமைப்புகளை தேடி தேடி வேட்டையாடி கொன்று குவித்த JVP எப்படி ஒரு புரட்சிக்கர அமைப்பாகும். ? அது சிவப்பு சட்டை அணிந்த மற்றுமொரு சிங்கள இனவாத அமைப்பு தான்! சரி கதைக்கு வருவம். 70கள் காலப்பகுதிகளில், JVPயின் முதல் கிளர்ச்சி/புரட்சி (ஏதோ ஒன்று) எப்படி தோல்வியில் முடிந்தது என்று தேடி பார்த்தால், ஒரு நல்ல ஜனரஞ்சக நகைச்சுவை திரைப்படத்துக்கான 10-15 scriptsஏ அதில் கிடைத்து விடும். மார்ச் 3ஆம் திகதி 1971ஆம் ஆண்டு, தென்னிலங்கையில் உள்ள JVP தலைவர் ரோஹன விஜயவீரவின் வீட்டில் ஒரு கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இலங்கையில் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களை ஒரே நேரத்தில் தாக்குவது தொடர்பான திட்டம் பற்றி பேசுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம் அது. அந்த நேரத்தில் JVPக்குள் ஒரு சகோதர ய...
டக்லஸ் தேவானந்தா எனும் கொடிய மிருகம் சமீபத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட செய்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு சிங்கள Drug Mafia Underworld Gangsterக்கு தன்னிடமிருந்த துப்பாக்கியை வழங்கிய குற்றத்துக்கு இந்த டக்லஸ் மிருகம் கைது செய்யப்பட்டிருக்கு. தமிழினத்தை சிங்களத்துக்கு காட்டி கொடுத்து, காவு கொடுத்த மிருகங்களில் முதன்மையானவன் இந்த டக்ளஸ். EPRLF பத்மநாபாவின் சீடனான இவன், 80களில் EPRLFஇன் ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தான். EPRLFஇன் ராணுவ வீழ்ச்சிக்கு இவனும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தான் என்று சொல்லலாம். பின்னர் இந்திய அமைதி காக்கும் படை EPRLFஐயும் அதன் தலைமையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், இவன் அந்த அமைப்பில் இருந்து விலகி, தனியாக ஒரு அமைப்பை EPDP என்று உருவாக்கி, சிங்கள அரசுடன் இணைகிறான். விடுதலை புலிகள் இயக்கம், மற்றும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராட கூடிய அனைவரையும், சிங்களத்திடம் காட்டி கொடுத்து, கொன்று குவிக்கும் அடியாள் வேலையை இவன் யாழ்ப்பாணத்தில் இருந்து செய்து வந்தான். இவனோடு பயணிக்கும் ஆட்களுக்கு சிங்கள அரசின் தயவால், மாதாந்தம...