Skip to main content

ரஞ்சித்தின் 'காலா'

காலா படத்தின் முதல் காட்சியிலேயே ரஜினி clean bowled ஆகுறாரு. காலா முதல் sceneலயே score பண்ணுறாரு. ரஜினி என்ற பிம்பத்தை, brand powerஐ ரஞ்சித் அந்த காட்சியில் உடைக்கவில்லை, அதை ஒரு மக்கள் கூட்டத்திடம் பகிர்ந்தளிக்கிறார்
அதன் பின் வரும் காலாவின் 'mass' எல்லாமே அந்த மக்கள் கூட்டத்தின் ஊடாகவே வெளிப்படுகிறது. முதல் காட்சியில் heroism உடைக்கப்படவில்லை, பகிரப்படுகிறது. இதுவரை காலமும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் காட்சியமைப்புகள் வழி அறிமுகமான ரஜினி, காலாவில் சமத்துவ தன்மையை அடைகிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் ராமன் தன் பேத்தியிடம் ஆதிக்கத்தை போதிக்கிறான். காலாவின் கால தொட்டு கும்பிட சொல்கிறான். ஆதிக்க கட்டமைப்பை ராமனும் பின்பற்றுகிறான் என்பதை உணர்த்தவே அந்த காட்சி.அந்த பொண்ணு, காலாவை கொன்று விடாதீர்கள் என்று சொல்கிறாள்! ஆதிக்கத்தின் திமிர்/பிச்சை, பெருந்தன்மையல்ல
காலா சிறுவர்களுடன் நடந்துகொள்ளும் முறை ராமனுக்கு நேர் எதிர். காலாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருப்பது அன்பின் அடிப்படையில் உருவான உறவு. ஆதிக்கம் அங்கு உறவாடவில்லை.
ராமனின் சூழல், வெள்ளையா, சுத்தமா, அமைதியா இருக்கும்! அது தனிமையல்ல, வெறுமை, மனிதர்கள்,மனிதத்தின் வெறுமை. அவனை சுற்றி இருப்பது அதிகார சின்னங்கள் (வாள்/ல்,கொடி, கிருஷ்ணன் etc) மட்டும் தான். ராமாயணத்தில் ராமன் கூட சீதையுடன் வாழ்ந்த காலத்தை விட ராஜ்ஜியதுடன் வாழ்ந்த காலம் தானே அதிகம்?
ஆனால் காலாவை சுற்றி அதிகாரம் இருக்காது, உறவுகள் இருக்கும், மக்கள் இருப்பார்கள், வெறுமை இருக்காது வேற்றுமை இருக்கும், வேற்றுமையில் ஒற்றுமை இருக்கும், குடும்பம்,சண்டை சச்சரவு என்று ஒரு சமூக கட்டமைப்பு இருக்கும். காலாவை சுற்றி பத்து தலைகள் எப்பவுமே இருக்கும்.
ராமன் ரொம்ப எளிமையான மனிதர், காந்தி போன்றவர், செருப்பு போட்டுக்கிட்டு, சாதாரண வெள்ளை உடையுடன் வருவார். Money doesn't motivate him,Dharma motivates him. காலாவை எதிர்ப்பதை மக்களின் நலனுக்காக என்று கருதி செய்கிறார். அதிகாரம், ஆதிக்கத்துக்கு simplicity தானே ஆடம்பரம்?
காலாவோ சாதாரண மனிதர், ஆடம்பரம் உண்டு! Mass, Style,கெத்து எல்லாமே உண்டு. Coat suit போடுவார், பாடுவார், ஆடுவார், எல்லாரையும் போல் இருப்பார், 10 கலைகள் அறிந்த தலை போல் செயல்படுவார்,ஆனால் அவரை motivate செய்வது அறம். இது தர்மத்துக்கும் அறத்துக்கும் இடையிலான போர்.
ராமன் யாருங்க? அவர் ஒரு சாதி மதமற்ற ஒரு ஆன்மிக அரசியல்வாதி, மய்யத்தில் இருந்து பேசுகிறார். மனு constructions/தர்மப்படி, உன் வாழ்வியலை மாற்றிக்கொள் என்று சொல்கிறார். நீ சுத்தமற்றவன் என் புனிதத்தை ஏற்றுக்கொள் என்கிறார்,golf விளையாடு sanskritisationஅ ஏற்றுக்கொள் என்கிறார்.
காலா என்ன சொல்கிறார்? என் வாழ்வியலை உன் புனிதம் தான் அசுத்தப்படுத்துகிறது, என் பிறப்பே உனக்கு அசுத்தமாக தான் தெரியும். உனக்கு என் உழைப்பு, வாக்கு, நிலம் தேவைப்படுது, அதனால் Sanskritisation"development"அ தூக்கிட்டு வருற, எனக்கு உன் புனிதம் வேண்டாம் என்கிறார்.
ராமன் அதிகாரம் படைத்த அரசியல்வாதி, அவனை சுற்றி சீருடையுடன் ஆண்கள் இருப்பார்கள்,அவன் எங்கு திரும்பினாலும் ஆண்கள். அவன் அதிகாரத்தில், தர்மத்தில் பெண்களுக்கு இடம் இல்லை, ராம ராஜ்ஜியத்தில் சீதையே காட்டில் தானே இருந்தால்?
காலாவை சுற்றி எங்கும் பெண்மையின் பன்முகத்தன்மை, சமூகத்தின் பன்முகத்தன்மை ஊடாக வெளிப்பட்டது.படத்தில் அதிகாரத்துக்கு எதிராக வரும் முதல் குரல் பெண்ணுடையது! கற்பெனும் கற்பிதத்தை காக்கும் ஆடையை அதிகாரம் அவிழ்த்த போது கூட, உரிமையை விட்டுக்கொடுக்காது போராடிய பெண்ணியம்
30/06/2018 ஆம் ஆண்டு ட்விட்டரில் நான் எழுதியதின் மீள் பதிவு

-Mr. பழுவேட்டரையர் 

Comments

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக