Skip to main content

ரஞ்சித்தின் 'காலா'

காலா படத்தின் முதல் காட்சியிலேயே ரஜினி clean bowled ஆகுறாரு. காலா முதல் sceneலயே score பண்ணுறாரு. ரஜினி என்ற பிம்பத்தை, brand powerஐ ரஞ்சித் அந்த காட்சியில் உடைக்கவில்லை, அதை ஒரு மக்கள் கூட்டத்திடம் பகிர்ந்தளிக்கிறார்
அதன் பின் வரும் காலாவின் 'mass' எல்லாமே அந்த மக்கள் கூட்டத்தின் ஊடாகவே வெளிப்படுகிறது. முதல் காட்சியில் heroism உடைக்கப்படவில்லை, பகிரப்படுகிறது. இதுவரை காலமும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் காட்சியமைப்புகள் வழி அறிமுகமான ரஜினி, காலாவில் சமத்துவ தன்மையை அடைகிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் ராமன் தன் பேத்தியிடம் ஆதிக்கத்தை போதிக்கிறான். காலாவின் கால தொட்டு கும்பிட சொல்கிறான். ஆதிக்க கட்டமைப்பை ராமனும் பின்பற்றுகிறான் என்பதை உணர்த்தவே அந்த காட்சி.அந்த பொண்ணு, காலாவை கொன்று விடாதீர்கள் என்று சொல்கிறாள்! ஆதிக்கத்தின் திமிர்/பிச்சை, பெருந்தன்மையல்ல
காலா சிறுவர்களுடன் நடந்துகொள்ளும் முறை ராமனுக்கு நேர் எதிர். காலாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருப்பது அன்பின் அடிப்படையில் உருவான உறவு. ஆதிக்கம் அங்கு உறவாடவில்லை.
ராமனின் சூழல், வெள்ளையா, சுத்தமா, அமைதியா இருக்கும்! அது தனிமையல்ல, வெறுமை, மனிதர்கள்,மனிதத்தின் வெறுமை. அவனை சுற்றி இருப்பது அதிகார சின்னங்கள் (வாள்/ல்,கொடி, கிருஷ்ணன் etc) மட்டும் தான். ராமாயணத்தில் ராமன் கூட சீதையுடன் வாழ்ந்த காலத்தை விட ராஜ்ஜியதுடன் வாழ்ந்த காலம் தானே அதிகம்?
ஆனால் காலாவை சுற்றி அதிகாரம் இருக்காது, உறவுகள் இருக்கும், மக்கள் இருப்பார்கள், வெறுமை இருக்காது வேற்றுமை இருக்கும், வேற்றுமையில் ஒற்றுமை இருக்கும், குடும்பம்,சண்டை சச்சரவு என்று ஒரு சமூக கட்டமைப்பு இருக்கும். காலாவை சுற்றி பத்து தலைகள் எப்பவுமே இருக்கும்.
ராமன் ரொம்ப எளிமையான மனிதர், காந்தி போன்றவர், செருப்பு போட்டுக்கிட்டு, சாதாரண வெள்ளை உடையுடன் வருவார். Money doesn't motivate him,Dharma motivates him. காலாவை எதிர்ப்பதை மக்களின் நலனுக்காக என்று கருதி செய்கிறார். அதிகாரம், ஆதிக்கத்துக்கு simplicity தானே ஆடம்பரம்?
காலாவோ சாதாரண மனிதர், ஆடம்பரம் உண்டு! Mass, Style,கெத்து எல்லாமே உண்டு. Coat suit போடுவார், பாடுவார், ஆடுவார், எல்லாரையும் போல் இருப்பார், 10 கலைகள் அறிந்த தலை போல் செயல்படுவார்,ஆனால் அவரை motivate செய்வது அறம். இது தர்மத்துக்கும் அறத்துக்கும் இடையிலான போர்.
ராமன் யாருங்க? அவர் ஒரு சாதி மதமற்ற ஒரு ஆன்மிக அரசியல்வாதி, மய்யத்தில் இருந்து பேசுகிறார். மனு constructions/தர்மப்படி, உன் வாழ்வியலை மாற்றிக்கொள் என்று சொல்கிறார். நீ சுத்தமற்றவன் என் புனிதத்தை ஏற்றுக்கொள் என்கிறார்,golf விளையாடு sanskritisationஅ ஏற்றுக்கொள் என்கிறார்.
காலா என்ன சொல்கிறார்? என் வாழ்வியலை உன் புனிதம் தான் அசுத்தப்படுத்துகிறது, என் பிறப்பே உனக்கு அசுத்தமாக தான் தெரியும். உனக்கு என் உழைப்பு, வாக்கு, நிலம் தேவைப்படுது, அதனால் Sanskritisation"development"அ தூக்கிட்டு வருற, எனக்கு உன் புனிதம் வேண்டாம் என்கிறார்.
ராமன் அதிகாரம் படைத்த அரசியல்வாதி, அவனை சுற்றி சீருடையுடன் ஆண்கள் இருப்பார்கள்,அவன் எங்கு திரும்பினாலும் ஆண்கள். அவன் அதிகாரத்தில், தர்மத்தில் பெண்களுக்கு இடம் இல்லை, ராம ராஜ்ஜியத்தில் சீதையே காட்டில் தானே இருந்தால்?
காலாவை சுற்றி எங்கும் பெண்மையின் பன்முகத்தன்மை, சமூகத்தின் பன்முகத்தன்மை ஊடாக வெளிப்பட்டது.படத்தில் அதிகாரத்துக்கு எதிராக வரும் முதல் குரல் பெண்ணுடையது! கற்பெனும் கற்பிதத்தை காக்கும் ஆடையை அதிகாரம் அவிழ்த்த போது கூட, உரிமையை விட்டுக்கொடுக்காது போராடிய பெண்ணியம்
30/06/2018 ஆம் ஆண்டு ட்விட்டரில் நான் எழுதியதின் மீள் பதிவு

-Mr. பழுவேட்டரையர் 

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...