Skip to main content

BIGIL REVIEW

26 October 2019.. - Bigil

#Bigil பார்த்தேன்.. ஒரு MGR படம் பார்த்த மாதிரி இருந்தது. தொய்வில்லா திரைக்கதை. ஒவ்வொரு காட்சியும் கைத்தட்டி ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கு. 

பாட்டு, அதிரடி, நகைச்சுவை என எல்லாம் கலந்த total விஜய் package தான் Michael intro. வெறித்தனம் பாடல், மேலும் வெறியேற்றும். 

விஜயின் நடனத்திற்கு ஈடு கொடுக்க படத்தில் ஒரே ஒரு பாட்டு தான் இருக்குன்னு ஆரம்பத்தில் கவலைப்பட்டேன், ஆனால் வெறித்தனம் எனும் ஒரு பாட்டு, நாலு விஜயின் குத்து பாடல்கள் பார்த்த திருப்தியை தரும். பாடல்கள் தரம். 👍 

Michael intro அதிரடி என்றால், ராயப்பன் intro காட்சி அதகளம்! முதல் காட்சியே வாத்தியார் பாடலுடன் ஒரு action வகுப்பு தான். விஜய இதுக்கு முன்ன இப்படி ஒரு introல பார்த்ததில்லை என்று கூட சொல்லலாம். ராயப்பன், கதை முழுவதும், கதையின் உயிர்நாடியாக வலம் வருகிறார். 

ராயப்பன் கதாபாத்திரம் விஜய்க்கு புதுசு. ஒரு matured mass hero எப்படி இருக்கணுமோ, அப்படியிருக்கிறார் ராயப்பன். 

3 மணித்தியாலத்தில் படத்தில் வரும் ஒரு காட்சி கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை. எல்லாமே சரியாக பொருந்தும்..  

சிறு சிறு நகைச்சுவை காட்சிகள், அந்த காவல் நிலைய காட்சி, விவேக், யோகிபாபு, church scenes, என்று எல்லாமே அழகா இருக்கு, கதையில் புது கதாபாத்திரங்கள், புது புது storylines இடையில் சேர்க்கப்படுவது, மக்களின் கவனத்தை சிதற விடாமல் தடுக்குது.

இன்னொரு கதை side trackஆ ஓடினாலும், அதுவும் படத்தின் ஓட்டத்தை திசை திருப்பாமல், திரைக்கதையின் வேகத்தையும், வலிமையையும் அதிகரிக்கவே உதவுகிறது.

எச்சையின் அட்மினுக்கும், அவனது ஹரி ஹர 'சர்மா' பெயருக்கும்(allegedly) படத்தில் தரமான செருப்படி இருக்கு. டெல்லி அதிகார திமிருக்கும் சவுக்கடி வசனங்கள் இருக்கு. 

விஜய் தொடர்ந்து 'தமிழ் மாநிலம் வாழ்க' என முழங்கும் படங்களில் நடிப்பது, விஜயின் மீதுள்ள மரியாதையை அதிகரிக்கிறது. 

இந்த படமும் சமூக நீதி பேசுது! 

State, மாநிலம், ஊர் என்று விஜய் குறிப்பிடும் போது, அதற்கு homelandனு subtitles போட்டது சிறப்பு.

இது வெறும் sport film அல்ல. இது ஒரு பக்கா commercial film.ஆனாலும் Football sequencesக்கு முக்கியத்துவம் கொடுத்து நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள். ஒரு வழக்கமான sport film மாதிரி drag பண்ணாம, எல்லாம் கலந்த ஒரு total packageஆ படம் விறுவிறுப்பா நகருது.

ரகுமானின் இசையும் தரம். அது சொல்லி தான் தெரிய வேண்டும் என்றில்லை. Simpleஆ சொல்லனும்னா, வழக்கமா சொல்லுறது தான். ஒரு MGR படம் பார்த்த மாதிரி இருக்கு. 
#Bigil ❤️❤️❤️❤️❤️
🙏

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...