Skip to main content

யார் இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள்?

ஈழத்து அரசியல் வெளியில் இதுவரை காலமும் நாம் கண்டிராத அளவுக்கு ஒரு பெரும் சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது. அந்த சீரழிவு ஒரு கலாச்சாரமாக உருமாரி, இன்று ஒரு சிறு குழுவாக ஒருங்கிணைந்து இயங்கி வருவதை காண கூடியதாக இருக்கு. அந்த குழுவை 'சுமந்திரனின் ரசிக குஞ்சுகள்' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள் புலி நீக்க அரசியலின் ஒருங்கிணைப்பு. 2009 க்கு முன் வரை அரசியல் முகவரி இல்லாமல் இருந்த சுமந்திரன் என்பவர், 2009 க்கு பின்னர் தமிழர் அரசியல் வெளியில் இருந்து எங்கள் விடுதலை போராட்டத்தை அந்நியப்படுத்த, அந்நிய சக்திகளால் களம் இறக்கப்பட்ட ஒரு மக்கள் விரோத அரசியல் தரகர்.

அந்த தரகரின் ரசிக குஞ்சுகள், பொது வெளியில் சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்கு செயல் வடிவம் குடுக்க தையத்தக்க என குதிக்கும் வானரங்களாக செயல்படுகின்றனர்.

▪️புலி நீக்க அரசியலை normalise செய்வது
▪️ஒட்டுக்குழு பண்புகளை அரசியல் வெளியில் விதைப்பது
▪️தேசியத்தின் அடிப்படைகளில் உறுதியாக இருப்பவர்களை மட்டம் தட்டி இழிவுப்படுத்துவது
▪️போராட்டத்தை விமர்சிப்பவர்களையும், சிங்களத்திடமும் இந்தியத்திடமும் இணக்கமாக செல்வோரையும் தமிழர் அரசியல் வெளிக்குள் ஊடுருவ வழி வகை செய்து கொடுப்பது
▪️சிங்களத்தின் எதிர்ப்பார்புக்கேற்ப தமிழர் தேசம் மாற வேண்டும் என்ற நச்சு சிந்தனையை விதைப்பது.

போன்ற திட்டங்களின் அடிப்படையில் கருத்தியலை விதைக்கும் வேலையை சமூக வலைத்தளங்களில் இந்த ரசிக குஞ்சுகள் செய்து வருகிறார்கள்.

அதற்காக இவர்கள் ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் என்று தமிழர் விரோத சக்திகள் அனைவருடனும் இணைந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒட்டுக்குழுக்களின் neo வடிவம் தான் சுமந்திரனின் அணி என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் செயற்பாடுகள் இருக்கிறது.

இவர்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

அதை தொடர்ந்து செய்வோம். 
-Mr. பழுவேட்டரையர்
4/2/2023

Comments

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...