Skip to main content

சீன தூதுவரின் எச்சரிக்கை கட்டுரை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கொழும்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான ஒரு கிளர்ச்சி தோன்றி, கோத்தாபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடி, ஆட்சி கவிழ்ந்து, புது சனாதிபதியாக ரணில் பதவியேற்று, ஆட்சி கவிழ்ப்புக்காக போராடிய சிங்கள இளைஞர்களை, நன்றி கெட்ட ரணில் அரசு வேட்டையாடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த  3 மாதங்களாக அமைதியாக இருந்த சீனா மீண்டும் அதன் வலு'வை தமிழர் கடலில் காட்ட ஆரம்பித்திருக்கிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு விதத்தில் காரணமாக இருந்த சீனா, கடந்த மூன்று மாதங்களாக ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக இருந்த எதிர்ப்பலை சீனா பக்கம் திரும்பாத வண்ணம் கெட்டித்தனமாக அதன் நகர்வுகளை மேற்கொண்டது..

ஆனால் இந்தியாவோ, இந்த நெருக்கடியில் இலங்கையை மீட்க உதவுகிறோம் என்ற பெயரில் IMF உடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதில் தொடங்கி இலங்கையில் அதானிக்காக மோடி செய்த அரசியல் வரை எல்லா இடங்களிலும் மூக்குடைப்பட்டு, சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே இருந்த இந்திய விரோத மனநிலையை வலுப்படுத்தும் விதமாக செயல்பட்டிருக்கு.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சீனா அதன் Yuan Wang 5 எனும் போர் கப்பலை இலங்கைக்கு அனுப்பி இந்தியாவுக்கு மேலும் ஒரு நெருக்கடியை கொடுத்தது.

சீனா அந்த கப்பலை ஒரு ஆராய்ச்சி கப்பல் என்று சொன்னது,  ஆனால் இந்தியாவோ அதை ஒரு உளவு கப்பல் என்று குற்றம் சாட்டி கடுமையாக எதிர்த்து வருகிறது.


இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீனாவின் கப்பல் இலங்கைக்கு வந்து சேர்ந்தது. அதற்கு இலங்கையும் அனுமதி வழங்கிய அதே காலகட்டத்தில் Pakistan Navy frigate – PNS Taimur எனும் பாகிஸ்தானின் போர் கப்பலும் இலங்கைக்கு வந்தது.

இந்த இரண்டு நடவடிக்கையும் இந்தியா, இலங்கையில்
கடந்த ஒரு வருடமாக மேற்கொண்டு வந்த ராஜதந்திர நடவடிக்கைகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த கப்பல் வருகை சர்ச்சையில் சிங்கள பேரினவாதிகள் வெளிப்படையாக சீனா பக்கம் நின்று குரல் கொடுத்ததையும் நம்மால் காண கூடியதாக இருந்தது.

தற்போது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், சீனாவின் இலங்கைக்கான தூதுவர் Mr. Qi Zhenhong கட்டுரை வடிவில் ஒரு ஆப்பை இந்தியாவுக்கு வைத்திருக்கிறார்..

Sri Lanka Guardian இல் வெளிவந்த சீன தூதுவரின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில முக்கியமான செய்திகளை இங்கே பார்ப்போம்.

இந்த கட்டுரையின் சீனா Taiwan பிரச்னையை பற்றி பேசிவிட்டு, சீனாவின் One-China Principle- ஒற்றை சீனா கோட்பாடு பற்றி தூதுவர் பேசுகிறார்.

அதன் பின் அந்த கோட்பாட்டை பாத்துகாக்க வேண்டியதன் தேவை பற்றி பேசும் இடத்தில் இலங்கையை தொடர்புப்படுத்தி இந்தியாவையும் அமெரிக்காவையும் தாக்க ஆரம்பிக்கிறார்.

சீனாவின் வழக்கமான ராஜதந்திர உருட்டுகளை தாண்டி, இந்த கட்டுரையில் சீன தூதுவர், சீனாவை இலங்கை இறையாண்மையின் காவலராக முன்னிறுத்துகிறார்.

சீனாவின் போர் கப்பலை, இலங்கையில் நிறுத்த இலங்கை அரசு அனுமதித்தது என்பது, இலங்கையின் இறையாண்மையை நிலைநாட்டும் ஒரு செய்யற்பாடாக சீன தூதுவர் முன்னிறுத்துகிறார்.

அதனோடு மட்டும் நின்று விடாமல், மேற்குலக நாடுகள், இந்தியாவை எல்லாம் இலங்கையின் முன்னாள் ஆக்கிரமிப்பாளர்களாக அடையாளப்படுத்தும் வேலையையும் இந்த கட்டுரையில் குறிப்பாக இந்த பகுதியில்

'Looking back at the great history of the island, Sri Lanka overcome aggression from its northern neighbour 17 times, colonization by the west for 450 years, and an anti-terrorism war for nearly 3 decades, is now still standing in the world bravely and proudly. Any infringement on the national sovereignty, independence and territorial integrity of Sri Lanka shall not be tolerated.'

அவர் செய்கிறார். இதில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பதனுடன், சிறுமைப்படுத்துவதுடன் மட்டுமே நின்று விடாமல், அந்த போராட்டத்தையும், சோழ படையெடுப்பையும், Colonialism ஐயும் சம நிலையில் நிறுத்தும் வேலையையும் அவர் செய்கிறார்.

கட்டுரை முழுவதும் சீன தூதுவர்
Any infringement on the national sovereignty, independence and territorial integrity of Sri Lanka shall not be tolerated.
என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

இங்கே national sovereignty பற்றிய செய்தியை இலங்கையின் ஒற்றையாட்சிக்கு ஆதரவான ஒரு செய்தியாகவும்.

territorial integrity பற்றிய செய்தியை தமிழர்களின் தாயக, அதிகார பகிர்வு கோரிக்கைகளுக்கு எதிரான சீனாவின் நிலைப்பாடாகவும் தான் நாம் பார்க்க வேண்டியதாக இருக்கு.

இந்த கருத்தின் ஊடாக சீனாவின் தமிழர் உரிமை சார்ந்த பார்வை எப்படி இருக்கிறது என்பதையும் எம்மால் உணர கூடியதாக இருக்கிறது. சீனா இலங்கை உறவில், சீனா முழுவதுமாக சிங்கள பேரினவாதத்தின் பக்கம் நகர்ந்திருக்கிறது.

இவ்வளவு நாளும் வெளிப்படையாக சொல்லாமல் இருந்தது, இப்போது வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கு.

இந்த கட்டுரை முழுவதிலும் இந்தியாவின் பெயர் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. இங்கே சீனா இந்தியாவை இன்னும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கும் ஒரு தரப்பாகவே, சுய புத்தி இல்லாத ஒரு நாடாகவே சித்தரிக்க முயற்சித்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல் கட்டுரையின் முடிவில்

Next month, the 51stsession of the UN Human Rights Council will be held in Geneva where human rights issues in Sri Lanka might probably be stirred up again. As the Sri Lankan people are still grappling with severe economic and humanitarian difficulties, many might wonder what those countries who have been always preaching about human rights will actually do.

Will they help Sri Lanka to ease its human rights crisis by providing concrete support? Or will they again use human rights as a cover-up tool to interfere into the island nation’s internal affairs and continue to rub salt into the wound of Sri Lankan people?

ஜெனிவாவில் நடக்கும் அரசியலையும் விமர்சித்து விட்டு முடித்திருக்கிறது.

சீனா தன்னை இலங்கை இறையாண்மையின் பாத்துகாவலராக, அங்கமாக தூதுவரின் கட்டுரை ஊடாக அடையாளப்படுத்தியிருக்கும் இந்த நேரத்தில்,இந்தியா யாழ்ப்பானத்தில் இந்து கல்லூரி மாணவர்களுக்கு ஏக் கவும் ஏக் கிசான் ரகு தாத்தா'னு இந்தி பாடம் எடுத்து கொண்டிருக்கிறது.

உருப்பட்ட மாதிரி தான்.

Mr. பழுவேட்டரையர்
27/8/22




Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற