Skip to main content

சாரம் | சிங்கள தேசியம்

ஈழத்தில் நான் வழக்கமா வீட்டுலயும், நண்பர்களுடன் வெளியே செல்லும் போதும்,சாரம்(லுங்கி) கட்டீட்டு தான் போவேன். இலங்கையில் அனைத்து இனத்தவருக்கும் சாரம் பொதுவானது,ஆனால் இந்த ஆடையை சிங்கள தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்த வரலாறு ஒன்று இருக்கு.

சிங்கள தேசியத்தின் தந்தை அநாகரிக தர்மபால, சிங்களவர்களின் 'தேசிய உடை', ஆரிய உடையாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். ஈழத்துக்கு சாரம், கடாரத்துடனான தொடர்பின் வழி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக கடலோரங்களில் வாழும் சோனகர்களின் ஆடையாகவே இது பார்க்கப்பட்டது 
சோனகர்களில் (Moors)Coastal Moorsக்கும் "Sri Lankan Moors"க்கும் இடையே கூட நிறைய வேறுபாடுகள் இருக்கு, அதை பற்றி பிறகு எழுதுகிறேன்.சோனகர்கள் என்பது ஒரு இன அடையாளமாக இருந்தாலும், அது இன்று இலங்கையில் முஸ்லிம் மக்களை குறிக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. 

சாவகத்தில்(Java) இருந்து சாரம் மட்டும் வரவில்லை, 'சம்பன்' என்ற சொல்லும் தான் ஈழத்துக்கு வந்தது. சம்பன் என்பது மலாய் மொழியில் படகை குறிக்கும் சொல். 
தமிழ் மொழியில் சம்பன் 'சம்மன்' ஆனது, 

சிங்கள மொழியில் அது 'ஹம்பன்'ஆனது

இதன் அடிப்படையில் கடல் வழி வணிகம் செய்ய வந்தவர்கள், கரையோரத்தில் வாழ்ந்தவர்கள் என்று அணைவரையும் சிங்களவர்கள்  'ஹம்பன்காரயா' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இது பிற்காலத்தில் ஒரு மதத்தினரை மட்டும் குறிக்கும் சொல்லாக சிங்களத்தில் மாறியது. 

இலங்கையில் வாழ்ந்த கரையோர தமிழ், சிங்கள மக்கள், Portugueseஇன் வருகைக்கு பிறகு மதம் மாறியது மட்டுமன்றி, தங்கள் ஆடைகளையும் மாற்றி கொண்டார்கள். சாரம், அதிலும் குறிப்பாக coloured சாரங்கள் என்பது அதிகம் கரையோர மக்களின் ஆடையாகவே Upcountry சிங்களவர்களால் பார்க்கப்பட்டது.
சிங்களவர்களை 'ஆரியர்களாக' முன்னிறுத்திய, சிங்கள தேசியத்தின் தந்தை தர்மபால, சிங்களவர்களில் உள்ள "தூய இன சிங்களவர்களான" மேல்நாட்டு சிங்களவர்களின் ஆரிய ஆடை கலாச்சாரமே "தூய சிங்கள கலாச்சாரம்" என்று அறிவித்தார். கரையோர மட்டும் Non Kandyan rural சிங்களவர்களை அவர்க்ளை போல மாற சொன்னார்.

அதுவரை சாரம் உடுத்தி வந்த சிங்களவர்களிடம் coloured சாரங்களை தவிர்த்து விட்டு, வெள்ளை சாரங்களை அணிய சொன்னார். 

அதை அநாகரிக தர்மபால எப்படி சொன்னார் தெரியுமா? "சிங்களனே! ஹம்பயா மாதிரி சாரம் உடுத்துவதை நிறுத்து" என்றார்.

'ஹம்பன்காரயா' என்று முஸ்லிம்களை குறிக்கும் சொல்லை, "ஹம்பயா" என்ற இழி சொல்லாக மாற்றி இங்கு பயன்படுத்தினார் தர்மபால.

சம்மாந்துறை(சம்பன் துறை) ஹம்பான்தோட்ட(சம்பன் தோட்ட) போன்ற பல கடலோர பகுதிகளின் பெயராக இருந்த சம்மான்/ஹம்பான் என்ற அடையாளத்தை just like that ஒரு இழி சொல்லாக மாற்றினார் தர்மபால. 

'பறையன்' என்ற சொல் சிங்களத்தில் 'பற தெமலா/தமிழா' ஆனது போல்,
சக்கிலியன் என்ற சொல் சிங்களத்தில் 'சக்கிலி தெமலா' ஆனது போல்,
ஹம்பன்காரயாவை சிங்களத்தில் ஹம்பயா என்ற இழி சொல்லாக, ஒரு இனத்தை தாழ்த்தும், இழிவுப்படுத்தும் சொல்லாக மாற்றினார் தர்மபால. 

தமிழர்களை 'டம்பளர்' என்று சொல்வதும்,
தெலுங்கு தேசிய இன மக்களை 'கொலுட்டி' என்று சொல்வதும்,
அப்பறம், சக்கிலி, சக்குடுன்னு ஒரு மக்கள் கூட்டத்தை இழிவுபடுத்தும் நோக்குடன் அடையாளப்படுத்துவது எல்லாம் சிங்கள பேரினவாதிகள் கையாண்ட அதே கேடுகெட்ட அரசியல் தான். 

Don't wear only a sarong like the Hambaya, 
Don't expose the body like the Vedda,
Don't wear a head comb like the Javanese என்றார் தர்மபாலா.
இலங்கையில் சிங்கள ஆதிக்க சாதியினர், தங்களை கூலி தொழிலாளர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்ட, தலையில் ஒரு சீப்பை இப்படி வைத்திருப்பார்கள்.


இதை எல்லாம் தவிர்த்து விட்டு, சிங்கள ஆரிய ஆடை கலாச்சாரத்தை பின்பற்றுமாறு கட்டளையிட்டார் தர்மபால. சிங்களவர்கள் கருப்பு ஆடைகளை தவிர்த்து 'வெள்ளை' நிற ஆடைகளை தான் தங்கள் தேசிய ஆடைகளாக அணிய வேண்டும் என்றார் தர்மபால. 

சிங்களவர்கள் அதிகம் "வெள்ளை" நிற ஆடைகளை பயன்படுத்துவது தங்களை தூய சிங்களவர்களாக அடையாளப்படுத்த தான். தமிழர் தேசத்தில் ஆறுமுக நாவலரும் இப்படி சைவர்களுக்கு வேறு விதமான சட்டங்கள் போட்டார். ஆனால் தமிழர்கள் இதை எல்லாம் கணக்கெடுக்கேல. நமக்கு சாரம் தோது தான் 🙂
நன்றி
Mr.பழுவேட்டரையர்
19/3/2020

Comments

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக