Skip to main content

சாரம் | சிங்கள தேசியம்

ஈழத்தில் நான் வழக்கமா வீட்டுலயும், நண்பர்களுடன் வெளியே செல்லும் போதும்,சாரம்(லுங்கி) கட்டீட்டு தான் போவேன். இலங்கையில் அனைத்து இனத்தவருக்கும் சாரம் பொதுவானது,ஆனால் இந்த ஆடையை சிங்கள தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்த வரலாறு ஒன்று இருக்கு.

சிங்கள தேசியத்தின் தந்தை அநாகரிக தர்மபால, சிங்களவர்களின் 'தேசிய உடை', ஆரிய உடையாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். ஈழத்துக்கு சாரம், கடாரத்துடனான தொடர்பின் வழி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக கடலோரங்களில் வாழும் சோனகர்களின் ஆடையாகவே இது பார்க்கப்பட்டது 
சோனகர்களில் (Moors)Coastal Moorsக்கும் "Sri Lankan Moors"க்கும் இடையே கூட நிறைய வேறுபாடுகள் இருக்கு, அதை பற்றி பிறகு எழுதுகிறேன்.சோனகர்கள் என்பது ஒரு இன அடையாளமாக இருந்தாலும், அது இன்று இலங்கையில் முஸ்லிம் மக்களை குறிக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. 

சாவகத்தில்(Java) இருந்து சாரம் மட்டும் வரவில்லை, 'சம்பன்' என்ற சொல்லும் தான் ஈழத்துக்கு வந்தது. சம்பன் என்பது மலாய் மொழியில் படகை குறிக்கும் சொல். 
தமிழ் மொழியில் சம்பன் 'சம்மன்' ஆனது, 

சிங்கள மொழியில் அது 'ஹம்பன்'ஆனது

இதன் அடிப்படையில் கடல் வழி வணிகம் செய்ய வந்தவர்கள், கரையோரத்தில் வாழ்ந்தவர்கள் என்று அணைவரையும் சிங்களவர்கள்  'ஹம்பன்காரயா' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இது பிற்காலத்தில் ஒரு மதத்தினரை மட்டும் குறிக்கும் சொல்லாக சிங்களத்தில் மாறியது. 

இலங்கையில் வாழ்ந்த கரையோர தமிழ், சிங்கள மக்கள், Portugueseஇன் வருகைக்கு பிறகு மதம் மாறியது மட்டுமன்றி, தங்கள் ஆடைகளையும் மாற்றி கொண்டார்கள். சாரம், அதிலும் குறிப்பாக coloured சாரங்கள் என்பது அதிகம் கரையோர மக்களின் ஆடையாகவே Upcountry சிங்களவர்களால் பார்க்கப்பட்டது.
சிங்களவர்களை 'ஆரியர்களாக' முன்னிறுத்திய, சிங்கள தேசியத்தின் தந்தை தர்மபால, சிங்களவர்களில் உள்ள "தூய இன சிங்களவர்களான" மேல்நாட்டு சிங்களவர்களின் ஆரிய ஆடை கலாச்சாரமே "தூய சிங்கள கலாச்சாரம்" என்று அறிவித்தார். கரையோர மட்டும் Non Kandyan rural சிங்களவர்களை அவர்க்ளை போல மாற சொன்னார்.

அதுவரை சாரம் உடுத்தி வந்த சிங்களவர்களிடம் coloured சாரங்களை தவிர்த்து விட்டு, வெள்ளை சாரங்களை அணிய சொன்னார். 

அதை அநாகரிக தர்மபால எப்படி சொன்னார் தெரியுமா? "சிங்களனே! ஹம்பயா மாதிரி சாரம் உடுத்துவதை நிறுத்து" என்றார்.

'ஹம்பன்காரயா' என்று முஸ்லிம்களை குறிக்கும் சொல்லை, "ஹம்பயா" என்ற இழி சொல்லாக மாற்றி இங்கு பயன்படுத்தினார் தர்மபால.

சம்மாந்துறை(சம்பன் துறை) ஹம்பான்தோட்ட(சம்பன் தோட்ட) போன்ற பல கடலோர பகுதிகளின் பெயராக இருந்த சம்மான்/ஹம்பான் என்ற அடையாளத்தை just like that ஒரு இழி சொல்லாக மாற்றினார் தர்மபால. 

'பறையன்' என்ற சொல் சிங்களத்தில் 'பற தெமலா/தமிழா' ஆனது போல்,
சக்கிலியன் என்ற சொல் சிங்களத்தில் 'சக்கிலி தெமலா' ஆனது போல்,
ஹம்பன்காரயாவை சிங்களத்தில் ஹம்பயா என்ற இழி சொல்லாக, ஒரு இனத்தை தாழ்த்தும், இழிவுப்படுத்தும் சொல்லாக மாற்றினார் தர்மபால. 

தமிழர்களை 'டம்பளர்' என்று சொல்வதும்,
தெலுங்கு தேசிய இன மக்களை 'கொலுட்டி' என்று சொல்வதும்,
அப்பறம், சக்கிலி, சக்குடுன்னு ஒரு மக்கள் கூட்டத்தை இழிவுபடுத்தும் நோக்குடன் அடையாளப்படுத்துவது எல்லாம் சிங்கள பேரினவாதிகள் கையாண்ட அதே கேடுகெட்ட அரசியல் தான். 

Don't wear only a sarong like the Hambaya, 
Don't expose the body like the Vedda,
Don't wear a head comb like the Javanese என்றார் தர்மபாலா.
இலங்கையில் சிங்கள ஆதிக்க சாதியினர், தங்களை கூலி தொழிலாளர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்ட, தலையில் ஒரு சீப்பை இப்படி வைத்திருப்பார்கள்.


இதை எல்லாம் தவிர்த்து விட்டு, சிங்கள ஆரிய ஆடை கலாச்சாரத்தை பின்பற்றுமாறு கட்டளையிட்டார் தர்மபால. சிங்களவர்கள் கருப்பு ஆடைகளை தவிர்த்து 'வெள்ளை' நிற ஆடைகளை தான் தங்கள் தேசிய ஆடைகளாக அணிய வேண்டும் என்றார் தர்மபால. 

சிங்களவர்கள் அதிகம் "வெள்ளை" நிற ஆடைகளை பயன்படுத்துவது தங்களை தூய சிங்களவர்களாக அடையாளப்படுத்த தான். தமிழர் தேசத்தில் ஆறுமுக நாவலரும் இப்படி சைவர்களுக்கு வேறு விதமான சட்டங்கள் போட்டார். ஆனால் தமிழர்கள் இதை எல்லாம் கணக்கெடுக்கேல. நமக்கு சாரம் தோது தான் 🙂
நன்றி
Mr.பழுவேட்டரையர்
19/3/2020

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற