Skip to main content

சாரம் | சிங்கள தேசியம்

ஈழத்தில் நான் வழக்கமா வீட்டுலயும், நண்பர்களுடன் வெளியே செல்லும் போதும்,சாரம்(லுங்கி) கட்டீட்டு தான் போவேன். இலங்கையில் அனைத்து இனத்தவருக்கும் சாரம் பொதுவானது,ஆனால் இந்த ஆடையை சிங்கள தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்த வரலாறு ஒன்று இருக்கு.

சிங்கள தேசியத்தின் தந்தை அநாகரிக தர்மபால, சிங்களவர்களின் 'தேசிய உடை', ஆரிய உடையாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். ஈழத்துக்கு சாரம், கடாரத்துடனான தொடர்பின் வழி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக கடலோரங்களில் வாழும் சோனகர்களின் ஆடையாகவே இது பார்க்கப்பட்டது 
சோனகர்களில் (Moors)Coastal Moorsக்கும் "Sri Lankan Moors"க்கும் இடையே கூட நிறைய வேறுபாடுகள் இருக்கு, அதை பற்றி பிறகு எழுதுகிறேன்.சோனகர்கள் என்பது ஒரு இன அடையாளமாக இருந்தாலும், அது இன்று இலங்கையில் முஸ்லிம் மக்களை குறிக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. 

சாவகத்தில்(Java) இருந்து சாரம் மட்டும் வரவில்லை, 'சம்பன்' என்ற சொல்லும் தான் ஈழத்துக்கு வந்தது. சம்பன் என்பது மலாய் மொழியில் படகை குறிக்கும் சொல். 
தமிழ் மொழியில் சம்பன் 'சம்மன்' ஆனது, 

சிங்கள மொழியில் அது 'ஹம்பன்'ஆனது

இதன் அடிப்படையில் கடல் வழி வணிகம் செய்ய வந்தவர்கள், கரையோரத்தில் வாழ்ந்தவர்கள் என்று அணைவரையும் சிங்களவர்கள்  'ஹம்பன்காரயா' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இது பிற்காலத்தில் ஒரு மதத்தினரை மட்டும் குறிக்கும் சொல்லாக சிங்களத்தில் மாறியது. 

இலங்கையில் வாழ்ந்த கரையோர தமிழ், சிங்கள மக்கள், Portugueseஇன் வருகைக்கு பிறகு மதம் மாறியது மட்டுமன்றி, தங்கள் ஆடைகளையும் மாற்றி கொண்டார்கள். சாரம், அதிலும் குறிப்பாக coloured சாரங்கள் என்பது அதிகம் கரையோர மக்களின் ஆடையாகவே Upcountry சிங்களவர்களால் பார்க்கப்பட்டது.
சிங்களவர்களை 'ஆரியர்களாக' முன்னிறுத்திய, சிங்கள தேசியத்தின் தந்தை தர்மபால, சிங்களவர்களில் உள்ள "தூய இன சிங்களவர்களான" மேல்நாட்டு சிங்களவர்களின் ஆரிய ஆடை கலாச்சாரமே "தூய சிங்கள கலாச்சாரம்" என்று அறிவித்தார். கரையோர மட்டும் Non Kandyan rural சிங்களவர்களை அவர்க்ளை போல மாற சொன்னார்.

அதுவரை சாரம் உடுத்தி வந்த சிங்களவர்களிடம் coloured சாரங்களை தவிர்த்து விட்டு, வெள்ளை சாரங்களை அணிய சொன்னார். 

அதை அநாகரிக தர்மபால எப்படி சொன்னார் தெரியுமா? "சிங்களனே! ஹம்பயா மாதிரி சாரம் உடுத்துவதை நிறுத்து" என்றார்.

'ஹம்பன்காரயா' என்று முஸ்லிம்களை குறிக்கும் சொல்லை, "ஹம்பயா" என்ற இழி சொல்லாக மாற்றி இங்கு பயன்படுத்தினார் தர்மபால.

சம்மாந்துறை(சம்பன் துறை) ஹம்பான்தோட்ட(சம்பன் தோட்ட) போன்ற பல கடலோர பகுதிகளின் பெயராக இருந்த சம்மான்/ஹம்பான் என்ற அடையாளத்தை just like that ஒரு இழி சொல்லாக மாற்றினார் தர்மபால. 

'பறையன்' என்ற சொல் சிங்களத்தில் 'பற தெமலா/தமிழா' ஆனது போல்,
சக்கிலியன் என்ற சொல் சிங்களத்தில் 'சக்கிலி தெமலா' ஆனது போல்,
ஹம்பன்காரயாவை சிங்களத்தில் ஹம்பயா என்ற இழி சொல்லாக, ஒரு இனத்தை தாழ்த்தும், இழிவுப்படுத்தும் சொல்லாக மாற்றினார் தர்மபால. 

தமிழர்களை 'டம்பளர்' என்று சொல்வதும்,
தெலுங்கு தேசிய இன மக்களை 'கொலுட்டி' என்று சொல்வதும்,
அப்பறம், சக்கிலி, சக்குடுன்னு ஒரு மக்கள் கூட்டத்தை இழிவுபடுத்தும் நோக்குடன் அடையாளப்படுத்துவது எல்லாம் சிங்கள பேரினவாதிகள் கையாண்ட அதே கேடுகெட்ட அரசியல் தான். 

Don't wear only a sarong like the Hambaya, 
Don't expose the body like the Vedda,
Don't wear a head comb like the Javanese என்றார் தர்மபாலா.
இலங்கையில் சிங்கள ஆதிக்க சாதியினர், தங்களை கூலி தொழிலாளர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்ட, தலையில் ஒரு சீப்பை இப்படி வைத்திருப்பார்கள்.


இதை எல்லாம் தவிர்த்து விட்டு, சிங்கள ஆரிய ஆடை கலாச்சாரத்தை பின்பற்றுமாறு கட்டளையிட்டார் தர்மபால. சிங்களவர்கள் கருப்பு ஆடைகளை தவிர்த்து 'வெள்ளை' நிற ஆடைகளை தான் தங்கள் தேசிய ஆடைகளாக அணிய வேண்டும் என்றார் தர்மபால. 

சிங்களவர்கள் அதிகம் "வெள்ளை" நிற ஆடைகளை பயன்படுத்துவது தங்களை தூய சிங்களவர்களாக அடையாளப்படுத்த தான். தமிழர் தேசத்தில் ஆறுமுக நாவலரும் இப்படி சைவர்களுக்கு வேறு விதமான சட்டங்கள் போட்டார். ஆனால் தமிழர்கள் இதை எல்லாம் கணக்கெடுக்கேல. நமக்கு சாரம் தோது தான் 🙂
நன்றி
Mr.பழுவேட்டரையர்
19/3/2020

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...