Skip to main content

தமிழினப்படுகொலை Facts & Figures

#அறிவோம்ஈழம்

தொடர்ந்து தமிழினப்படுகொலை ஒன்று நடக்கவில்லை என்றும், அதை மறுக்கும் விதமாகவும், ஒரு genocide denier மனநிலையுடன், பல அவதூறுகளும் தவறான செய்திகளும் சிங்கள அரசு மற்றும் திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்ப பட்டு வருகிறது. அவற்றில் முதன்மையான அவதூறு இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பானது தான்.

இனப்படுகொலையில், அதிலும் குறிப்பாக இறுதிக்கட்ட போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்ட இந்த அவதூறு பரப்பும் மனிதமற்ற காடையர் கூட்டம் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அந்த கேடுகெட்ட முயற்சியை முறியடிக்கும் விதமாக இந்த தளத்தில் ஒரு சில ஆவணங்களை, ஆதாரங்களை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

இறுதிக்கட்ட போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மூடி மறைக்கும் முயற்சியை முறியடிக்கும் விதமாக பல மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புகளும் பல ஆதாரங்களை திரட்டி, அமபலப்படுத்தி, zero civilian casualty எனும் பெரும் சிங்களப் பொய்யை தோலுரித்து காட்டியிருக்கிறார்கள்.

அந்த தொடர் முயற்சிகளின் விளைவாக தான் தற்போது அநேகமான உலக அமைப்பு இறுதி போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 40,000,-50,000 என்றளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பல மனித உரிமை அமைப்புகள் அந்த தொகையை 160,000க்கு மேல் என்று ஆதாரங்களுடன் நிறுவி வருகிறார்கள். இதில் முதன்மையான ஆதாரமாக, சாட்சியமாக இருப்பது மறைந்த பெருமதிப்புக்குரிய மன்னார் பேராயர் ஜோசப் இராயப்பு LLRC என்று அழைக்கப்படும் இலங்கையின் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு"விடம் வழங்கிய சாட்சியம் தான்.

அதில் அவர் கொடுத்த தொகையின் விவரம் மற்றும்
▪️UN Crisis Operation Group
▪️UN Panel of Experts
▪️World Bank Household Data
▪️LLRC Submissions
▪️Crisis Group
போன்ற அமைப்புகளின் estimateகளை

South African சட்டத்தரணியாகவும், Nelson Mandelaவின்
South African Truth and Reconciliation Commissionஇன் முன்னாள் Commissionerஆகவும், Ban Ki Moonஇன் expert panel Legal advisorஆகவும், UN Commission on Human Rights in South Sudanஇன் Chair personஆகவும் இருந்த Yasmin Zookaவின் International Truth and Justice Project எனும் மனித உரிமை அமைப்பு 2021இல்
வெளியிட்ட Death Toll in Sri Lanka's 2009 war என்ற அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் இறுதிப்போரில் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 169,976ஆக உயர்ந்திருக்கிறது.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் range 80,000இல் இருந்து 170,000 வரையில் இருக்கிறது.

இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை
TNA estimateபடி  87,620
LLRC Submission Estimate 147,000
World Bank Household data estimate 169,796
Crisis Group estimate 100,000

மேலே பகிரப்பட்டிருக்கும் அறிக்கையின் source file கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி
Mr.பழுவேட்டரையர்.



Comments

  1. உங்களின் இந்த ஆக்கபூர்வமான பதிவுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

The Story of Veeramunai: How Muslim Home Guards Carried Out the Largest Massacre of Tamils in the East!

Nestled in the Ampara District of Sri Lanka, Veeramunai is a Tamil-majority village that forms part of the Eastern Province of Sri Lanka. The Eastern Province is an integral region of the Tamil homeland. For generations, this land has held deep cultural and strategic significance for Tamils. That said, the East is also a very diverse place and home to a large percentage of Tamil speaking Muslims who choose to identify themselves as a distinct group of people who consciously avoid the Tamil political and cultural identity. Successive Sinhala governments deliberately stirred tensions between Tamils and Muslims, weakening both communities and used the “Muslim factor” as a convenient pretext to sever the bond between the North and East. In this process, much of the Muslim leadership fell in line with the state’s agenda. This blog is part two of our series on Sri Lanka's Muslim Home Guard. To read Part 1 click here👇 MHG01-Kattankudy's War on Tamils https://www.mrpaluvets.com/2025/0...