Skip to main content

தமிழினப்படுகொலை Facts & Figures

#அறிவோம்ஈழம்

தொடர்ந்து தமிழினப்படுகொலை ஒன்று நடக்கவில்லை என்றும், அதை மறுக்கும் விதமாகவும், ஒரு genocide denier மனநிலையுடன், பல அவதூறுகளும் தவறான செய்திகளும் சிங்கள அரசு மற்றும் திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்ப பட்டு வருகிறது. அவற்றில் முதன்மையான அவதூறு இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பானது தான்.

இனப்படுகொலையில், அதிலும் குறிப்பாக இறுதிக்கட்ட போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்ட இந்த அவதூறு பரப்பும் மனிதமற்ற காடையர் கூட்டம் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அந்த கேடுகெட்ட முயற்சியை முறியடிக்கும் விதமாக இந்த தளத்தில் ஒரு சில ஆவணங்களை, ஆதாரங்களை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

இறுதிக்கட்ட போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மூடி மறைக்கும் முயற்சியை முறியடிக்கும் விதமாக பல மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புகளும் பல ஆதாரங்களை திரட்டி, அமபலப்படுத்தி, zero civilian casualty எனும் பெரும் சிங்களப் பொய்யை தோலுரித்து காட்டியிருக்கிறார்கள்.

அந்த தொடர் முயற்சிகளின் விளைவாக தான் தற்போது அநேகமான உலக அமைப்பு இறுதி போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 40,000,-50,000 என்றளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பல மனித உரிமை அமைப்புகள் அந்த தொகையை 160,000க்கு மேல் என்று ஆதாரங்களுடன் நிறுவி வருகிறார்கள். இதில் முதன்மையான ஆதாரமாக, சாட்சியமாக இருப்பது மறைந்த பெருமதிப்புக்குரிய மன்னார் பேராயர் ஜோசப் இராயப்பு LLRC என்று அழைக்கப்படும் இலங்கையின் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு"விடம் வழங்கிய சாட்சியம் தான்.

அதில் அவர் கொடுத்த தொகையின் விவரம் மற்றும்
▪️UN Crisis Operation Group
▪️UN Panel of Experts
▪️World Bank Household Data
▪️LLRC Submissions
▪️Crisis Group
போன்ற அமைப்புகளின் estimateகளை

South African சட்டத்தரணியாகவும், Nelson Mandelaவின்
South African Truth and Reconciliation Commissionஇன் முன்னாள் Commissionerஆகவும், Ban Ki Moonஇன் expert panel Legal advisorஆகவும், UN Commission on Human Rights in South Sudanஇன் Chair personஆகவும் இருந்த Yasmin Zookaவின் International Truth and Justice Project எனும் மனித உரிமை அமைப்பு 2021இல்
வெளியிட்ட Death Toll in Sri Lanka's 2009 war என்ற அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் இறுதிப்போரில் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 169,976ஆக உயர்ந்திருக்கிறது.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் range 80,000இல் இருந்து 170,000 வரையில் இருக்கிறது.

இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை
TNA estimateபடி  87,620
LLRC Submission Estimate 147,000
World Bank Household data estimate 169,796
Crisis Group estimate 100,000

மேலே பகிரப்பட்டிருக்கும் அறிக்கையின் source file கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி
Mr.பழுவேட்டரையர்.



Comments

  1. உங்களின் இந்த ஆக்கபூர்வமான பதிவுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற