Skip to main content

திமுகவும் கிரீஸ் டப்பாக்களும்

நாம் தமிழருக்கு எதிரான திமுகவின் நடவடிக்கைகளில் மிகவும் வேடிக்கையான தேர்தல் நேர பிரச்சார நடவடிக்கை என்றால் அது நாம் தமிழரில் இருந்து விலக்கப்பட்ட கிரீஸ் டப்பாக்களை கொண்டு நாம் தமிழரை அவர்கள் தாக்கியது தான்.

கட்சி தாவும் கிரீஸ் டப்பாக்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு போதும் மதிப்பும் மரியாதையும் இருந்ததில்லை. அந்த டப்பாக்கள் ஊடாக நாம் தமிழரை திமுக தாக்கிய போது, திமுகவின் விமர்சனங்கள் எல்லாமே அவதூறுகளாக தான் வெளிப்பட்டது. திமுகவினர் ராஜீவின் பதிவுகளை கண்டு குதூகலித்தாலும், நாம் தமிழர் மத்தியிலோ, மக்கள் மத்தியிலோ அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

This is an old strategy that doesn't work anymore. Nevertheless, it was good for NTK. When your enemy makes stupid mistakes, help them in their course of action.

ராஜீவ் போன்றவர்களை பயன்படுத்தி திமுக நாம் தமிழரை தாக்கும் போது
ராஜீவின் நம்பகத்தன்மை, நேர்மை, integrityஐ தான் மக்கள் முதலில் சந்தேகித்தார்கள்.

திமுகவினர் ராஜீவை போன்றோரை தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது, அண்ணன் சீமான் ராஜீவ் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாக இருந்தது.

திமுக ஒரு விதத்தில் நாம் தமிழருக்கு இந்த விஷயத்தில் உதவியது என்று தான் சொல்ல வேண்டும்.

ராஜீவ், கல்யாண் கட்சியை விட்டு வெளியேறிய போது கட்சிக்குள் இருந்த சிறு புலம்பல்களும், அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்த பிறகு காணாமல் போய்விட்டது.

அதுவரை அவர்களுக்கு கட்சிக்குள் இருந்து கொஞ்ச நஞ்ச பரிதாபமும், தொலைந்தது. ராஜீவ் திமுகவில் சேர்ந்தது நாம் தமிழருக்கு கிடைத்த ஒரு எதிர்பாரா நன்மை தான். அதற்கு திரு செந்தில்குமார் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

திமுகவினர், குறிப்பா செந்தில் குமார் அவர்கள் ராஜீவை ஊர் ஊராக காவிக் கொண்டு, ஏதோ பெரிய பரிசை வென்றது போல் திரிந்தார். கிட்டத்தட்ட எல்லா திமுக பிரமுகர்களின் வீட்டுக்கும் ராஜீவை அழைத்து சென்று உபசரித்தார்கள்.

அவரும் அங்கு நல்ல ஆடு போல் கொழுத்தார். தேர்தல் முடிந்து விட்டது, இனி தான் ஆடு வீட்டில் இருந்து கசாப்பு கடைக்கு அழைத்து செல்லப்படும்.

தமிழன் பிரசன்னா, கரு பழனியப்பன், இவன், அவன் என்ற பலர் பல வருடங்களாக திமுகவுக்குள் ஒரு நல்ல இடத்துக்கு வர முக்கி கொண்டிருக்கும் போது, ராஜீவுக்கு கிடைத்த இந்த திடீர் கவனம், ஒரு காரணத்துடன் வழங்கப்பட்ட கவனம் என்பதை ராஜீவ் உணர்ந்தாரா என்று எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிந்து விட்டது, இனி கொஞ்சம் கொஞ்சமாக அவர் காலாவதியான ஒரு பொருள் என்பதை உணர்வார் என்று நம்புகிறேன்

-Mr. பழுவேட்டரையர்
7/4/21

Comments

  1. Rajivku theriyala Namma election mudinjathum DMK vala etti othaikkapada pora grease dappanu,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற