Skip to main content

மு.க.ராஜபக்ச

கருணாநிதியும் ராஜபக்சவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

ஈழத்தில், ஈழம், தமிழீழம் என்ற சொற்களை பயன்படுத்துவதற்கு தடை போட்டான் ராஜபக்ச!

தமிழகத்தில் ஈழம் என்ற சொல்லே இனி எந்த அரசியல் மேடைகளிலும் பயன்படுத்த கூடாதென்று உத்தரவிட்டார் கருணாநிதி.

ஈழத்தில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இடித்து தரமட்டமாக்க உத்தரவிட்டான் ராஜபக்ச.

தமிழகத்தில் எங்கும் தேசியத் தலைவரின புகைப்படங்கள் இருக்க கூடாதென்று திமுக ஆட்சியில் உத்தரவிட்டார் கருணாநிதி.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை ஆவணப்படுத்திய ஊடகவியலாளர்களை சிறைப்படுத்தினான் ராஜபக்ச!

தமிழகத்தில் இறுதி கட்ட போரின் போது நடந்த போர் குற்றங்களின் ஆவணங்களை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க முயற்சித்த தமிழர்களை சிறைப்படுத்தினார் கருணாநிதி. இனப்படுகொலை காட்சிகளை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சியை தடை செய்தார் கருணாநிதி.

ஈழத்தில் உலக நாடுகளால் தடை செய்ய பட்ட ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று பொய் உரைத்தான் ராஜபக்ச! 
ஈழத்தில் போரை நிறுத்திவிட்டேன் என்று வாய் கூசாமல் பொய் உரைத்தார் கருணாநிதி.

உலக பிரதிநிதிகளை ஈழத்திற்கு அழைத்துவந்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது பாருங்கள் என்றொரு நாடகத்தை அரங்கேற்றினான் ராஜபக்ச!
அந்த நாடகத்திற்கு தனது கூத்து பட்டறையில் இருந்து அரசியல் நடிகர்களை ஈழத்திற்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.

ஈழத்தில் உரிமைக்காக போராடும் தமிழர்களை பிரிவினைவாதிகள் தீவிரவாதிகள்னு குற்றம் சாட்டி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்கிறான் ராஜபக்ச!

தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக போராடிய தமிழர்களை பிரிவினைவாதிகள் தீவிரவாதிகள் என்று சொல்லி கைது செய்தார் கருணாநிதி!

தேசியத் தலைவரின் பெற்றோரை சிறைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்காமல், அந்த முதியவர்களை துன்புறுத்தினான் ராஜபக்ச.

மருத்துவ சிகிச்சைக்காக தாய்த்தமிழகம் வந்த அந்த தாயை தமிழகத்துக்குள் நுழைய விடாமல் விரட்டினார் கருணாநிதி. 

தமிழர்கள், தமிழர்கள் சார்ந்த உரிமைகள் என்று பேசினாலே அது பிரிவினைவாதம் என்று சொல்லி தமிழர்களின் குரல் வலையை நசுக்குகிறான் ராஜபக்ச!

தமிழர்கள் என்று சொன்னாலே பாசிசம் என்று சொல்லி தமிழர்களின் குரல் வலையை நசுக்குகிறது திமுக!

ராஜபக்ச தனது தமிழ் பேசும் அடிவருடிகளை கொண்டு ஈழத்திற்கும், தமிழர்களுக்கும் எதிரான வன்ம, வெறுப்பு பிரச்சாரங்களை இன்னும் நடத்தி வருகிறான்..

ராஜபக்ச கூட்டம் செய்யும் அதே பிரச்சாரங்களை தான் உடன்பிறப்புக்களும் இன்று சமூக வலைதளங்களில் செய்து வருகிறார்கள்.

-Mr. பழுவேட்டரையர்
28/11/21

Comments

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக