Skip to main content

மு.க.ராஜபக்ச

கருணாநிதியும் ராஜபக்சவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

ஈழத்தில், ஈழம், தமிழீழம் என்ற சொற்களை பயன்படுத்துவதற்கு தடை போட்டான் ராஜபக்ச!

தமிழகத்தில் ஈழம் என்ற சொல்லே இனி எந்த அரசியல் மேடைகளிலும் பயன்படுத்த கூடாதென்று உத்தரவிட்டார் கருணாநிதி.

ஈழத்தில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இடித்து தரமட்டமாக்க உத்தரவிட்டான் ராஜபக்ச.

தமிழகத்தில் எங்கும் தேசியத் தலைவரின புகைப்படங்கள் இருக்க கூடாதென்று திமுக ஆட்சியில் உத்தரவிட்டார் கருணாநிதி.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை ஆவணப்படுத்திய ஊடகவியலாளர்களை சிறைப்படுத்தினான் ராஜபக்ச!

தமிழகத்தில் இறுதி கட்ட போரின் போது நடந்த போர் குற்றங்களின் ஆவணங்களை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க முயற்சித்த தமிழர்களை சிறைப்படுத்தினார் கருணாநிதி. இனப்படுகொலை காட்சிகளை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சியை தடை செய்தார் கருணாநிதி.

ஈழத்தில் உலக நாடுகளால் தடை செய்ய பட்ட ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று பொய் உரைத்தான் ராஜபக்ச! 
ஈழத்தில் போரை நிறுத்திவிட்டேன் என்று வாய் கூசாமல் பொய் உரைத்தார் கருணாநிதி.

உலக பிரதிநிதிகளை ஈழத்திற்கு அழைத்துவந்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது பாருங்கள் என்றொரு நாடகத்தை அரங்கேற்றினான் ராஜபக்ச!
அந்த நாடகத்திற்கு தனது கூத்து பட்டறையில் இருந்து அரசியல் நடிகர்களை ஈழத்திற்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.

ஈழத்தில் உரிமைக்காக போராடும் தமிழர்களை பிரிவினைவாதிகள் தீவிரவாதிகள்னு குற்றம் சாட்டி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்கிறான் ராஜபக்ச!

தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக போராடிய தமிழர்களை பிரிவினைவாதிகள் தீவிரவாதிகள் என்று சொல்லி கைது செய்தார் கருணாநிதி!

தேசியத் தலைவரின் பெற்றோரை சிறைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்காமல், அந்த முதியவர்களை துன்புறுத்தினான் ராஜபக்ச.

மருத்துவ சிகிச்சைக்காக தாய்த்தமிழகம் வந்த அந்த தாயை தமிழகத்துக்குள் நுழைய விடாமல் விரட்டினார் கருணாநிதி. 

தமிழர்கள், தமிழர்கள் சார்ந்த உரிமைகள் என்று பேசினாலே அது பிரிவினைவாதம் என்று சொல்லி தமிழர்களின் குரல் வலையை நசுக்குகிறான் ராஜபக்ச!

தமிழர்கள் என்று சொன்னாலே பாசிசம் என்று சொல்லி தமிழர்களின் குரல் வலையை நசுக்குகிறது திமுக!

ராஜபக்ச தனது தமிழ் பேசும் அடிவருடிகளை கொண்டு ஈழத்திற்கும், தமிழர்களுக்கும் எதிரான வன்ம, வெறுப்பு பிரச்சாரங்களை இன்னும் நடத்தி வருகிறான்..

ராஜபக்ச கூட்டம் செய்யும் அதே பிரச்சாரங்களை தான் உடன்பிறப்புக்களும் இன்று சமூக வலைதளங்களில் செய்து வருகிறார்கள்.

-Mr. பழுவேட்டரையர்
28/11/21

Comments

  1. Offers a mobile app for each Android and iOS telephones with directions on how to to|tips on how to} run it. JackpotCity presently provides a tasty welcome bonus that out there in} quantity of} levels. Customer assist is fast and reliable, with a 24/7 stay chat capable of to} answer a lot of the problems we threw their way. This implies that when you accept $1,200 in bonus cash your play-through requirement will be $60,000. You have to be 18 years or older to use this web site, play pokies or take part 원 엑스 벳 in gambling. Jackpot City is operated by Belle Rock Gaming - a company that also owns the following beneficial gaming sites.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற