படுகொலைகள் செய்தோம், கலவரங்கள் செய்தோம் ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள், அவர்களின் உரிமைகளை பறித்தாலும், தளராமல் போராடுகிறார்கள், ஏறி மிதித்தாலும் திமிறி எழுந்து போராடுகிறார்கள். இனக் கலவரங்களை உண்டாக்கினோம், அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம், அவர்களின் உடமைகளை எரித்தோம், அவர்களை விரட்டி அடித்தோம், கொன்று புதைந்தோம், இவ்வளவு செய்தும், இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும் அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும், தமிழ் மீதும் அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது. இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...
The official website of @mrpaluvets from twitter