பழைய குருடி கதவை திறடி கதையா, கட்சி தொடங்கியதில் இருந்து 24,843 ஆவது தடவையாக மீண்டும் பெரியார் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடக்கி வைத்து, பௌர்ணமிக்கு பௌர்ணமி செத்த குதிரையை அடிக்கும் சடங்கை செய்து கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. பெரியாரை நாம் தமிழர் எதிர்ப்பதும், தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அதற்காக செலவிடுவதும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவாக இருப்பதினால், அதில் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றே நினைக்கிறேன். அந்த நடவடிக்கை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக விலகி செல்லலாம். ஆனால் இந்த பெரியார் எதிர்ப்பின் ஊடாக, திராவிட கட்டமைப்பை வீழ்த்தி விடலாம் என்பதெல்லாம் வெறும் பொய் வெட்டி பிரச்சாரம் என்ற உண்மையையும் நாம் அடிக்கடி நினைவூட்ட வேண்டிய தேவையும் இருக்கிறது. திமுக எனும் கட்டமைப்பு பெரியாரையோ, அவரின் தத்துவத்தையோ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்பல்ல. பெரியார் எதிர்ப்பு அரசியல் ஊடாக திமுகவை வீழ்த்துவது, கண்ணாடியை திருப்பி வண்டியை start பண்ணும் பம்மாத்து வித்தை தான். திராவிடம் பொருளற்ற ஒரு அரசியல் brandஆக மட்ட...
The official website of @mrpaluvets from twitter