Skip to main content

குஜராத் படுகொலையும்-கருணாநிதியும்! ஒரு Flash Back.

சமீபத்தில் அண்ணன் சீமான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. உடன்பிறப்புகளின் உலகத்தில் ஒவ்வொரு கிழமையும் இது தான் செய்தி. 30 secondsக்குள் எதையாவது வெட்டி ஒட்டி சரி ஒரு கிழமைக்கான தீவனத்தை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் அறிவாலயத்துக்கு வெளியே ஒதுங்கும் திமுகவின் ஊடகமுட்டாளர்களுக்கு தினம் ஒரு சர்ச்சையை உருவாக்கினால் தான் வயிறு நிரம்பும்.

அப்படிப்பட்டவர்கள் உருவாக்கிய புது சர்ச்சை தான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்ணன் சீமான் பேசிவிட்டார் என்ற இந்த புது புகார்.

அண்ணன் சீமானின் பேச்சானது, தொடர்ந்து பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக எனும் கூட்டத்துக்கு வாக்களிக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்கள் மீதான ஆதங்கம் தான்.

அந்த பேச்சின் தொடக்கத்தில்,
குஜராத் படுகொலையை, மோடி எனும் இந்துத்துவ பயங்கரவாதி நிகழ்த்திய போது, அதை கண்டிக்காது வேடிக்கை பார்த்து, பாஜகவை பல இடங்களில் காப்பாற்றும் வேலையையும் செய்த திமுக மீதான விமர்சனம் மற்றும் அதன் துரோக வரலாற்றின் அம்பலப்படுத்தலோடும் தான் ஆரம்பிக்கிறது. 

ஆதாரம்:

திமுகவினர் இன்று மும்முரமாக பரப்பும் அண்ணன் சீமானின் 30 second வீடியோவில் அவர் திமுகவை அம்பலப்படுத்திய பேச்சு இருக்காது.
குஜராத் படுகொலைக்கு துணை நின்ற துரோகத்தை பற்றி பேசாது கடக்கவே, சாத்தானை பிடித்து தொங்கும் இந்த புது சர்ச்சையை உடன்பிறப்புகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

குஜராத் படுகொலையை பற்றி ஊடகவியலாளர் மணி ஒரு முறை கருணாநிதியை நோக்கி கேள்வி எழுப்பிய போது, "அது இன்னொரு மாநிலத்தின் உள் விவகாரம் அதில் நாம் தலையிட கூடாது" என்று சொன்னவர் தான் கருணாநிதி.

அது மட்டுமா? அன்று குஜராத் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து, பாஜக அரசையே ஆதரித்து ஓட்டளிப்போம் என்று கூட கருணாநிதி வெளிப்படையாக சொல்லியிருந்தார்.

ஆதாரம்: 
அன்று உலகெங்கிலும் இருந்து குஜராத் கலவரத்துக்கு எதிராக கண்டனங்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் கும்பகோணத்தில் ஒரு மேடையில் கருணாநிதி

"தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் கலவரம் நடந்திருப்பது மிக வேதனையான விஷயம்.ஆனால் இந்தக் கலவரத்தை யாரும் அரசியலாக்காதீர்கள்" என்று மீண்டும் கலவரத்துக்கு எதிரான மக்களின் கண்டனங்களை கூட கொச்சைப்படுத்தி பேசியவர் தான் கருணாநிதி.


இவ்வளவு ஏன்? 2013இல் நரேந்திர மோடி எனும் அந்த படுகொலையாளன் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருந்த போது, அதற்கு எதிராக ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் திமுகவினரின் கையொப்பமும் இருக்கிறது என்ற செய்தி கேட்டவுடன், உடனடியாக பதறிப் போய், மோடிக்கு எதிராக கையெழுத்திட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர் தான் இந்த கருணாநிதி.

முரசொலி மாறன் தரகர் வேலை பார்த்து, தனக்கும், ஆ.ராசா மற்றும் பாலுவுக்கு மத்தியில் பதவியை பெற்று, கட்டிய பாஜக-திமுக கூட்டணியை, அன்று குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் பிணங்களின் மேல் நின்று காத்த துரோகி கருணாநிதியின் இந்த துரோகத்தை..... அண்ணன் சீமான், ஐயா பழனி பாபா போல, தொடர்ந்து மேடைக்கு மேடை அம்பலப்படுத்தி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாததால், நாளுக்கொரு சர்ச்சையோடும், புது கதைகளோடும், 30 second விடியோக்களோடும் எல்லோருடைய whatsapp வாசலிலும் காத்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள். ஐயோ பரிதாபம்!

கால காலமாக இப்படி தான் திமுக தமிழர்களை ஏமாற்றி வருகிறது. இனியும் அது நடக்காது. இது உங்க தாத்தா காலத்து திமுகவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் தமிழர்கள் உங்கள் தாத்தா காலத்து தமிழர்கள் இல்லை என்பதை நினைவில் வைத்திருங்கள்.

-Mr பழுவேட்டரையர்
5/8/2023


Comments

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக