Skip to main content

கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் சோக கதை.

கருணாநிதியின் சுயநலத்தால் வீழ்ந்த அவர் மூத்த மகன் மு.க.முத்துவை பற்றி நீங்கள் கேள்விப்பட்டத்துண்டா ?
ஆரம்ப காலம் தொட்டே கருணாநிதிக்கு மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு ஒரு பெரிய பிரச்சனையாகவே இருந்திருக்கிறது.

திமுகவின் வெற்றிகளுக்கு மக்கள் திலகத்தின் திரை பிரபலம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அறிஞர் அண்ணாவை எளிய மக்களின் பார்வைக்கு எடுத்து சென்றது மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் என்று சொன்னால், அது மிகையாகாது. 

கருணாநிதியால் மக்கள் திலகத்தின் அந்த புகழை எட்ட முடியவில்லை. மக்கள் திலகத்தின் ஆதரவோடு முதலவரான பின்னரும் கருணாநிதியால் மக்கள் திலகத்தின் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

மக்கள் திலகம் திரைப்படங்களில் நடிப்பதினால் தான் இந்த புகழை எட்டியிருக்கிறார், அதனால் அவருக்கு போட்டியாக ஒருவரை திரைத்துறையில் இறக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் கருணாநிதி.

அதற்கான சிறந்த வேட்பாளரை வேறெங்கும் தேடாமல், குடும்பத்துக்குள்ளேயே தேடி, தன் முதல் மகனான முக முத்துவை தனது அதிகாரத்தை பயன்படுத்தி திரையுலகில் களமிறக்கினார் கருணாநிதி. 

கருணாநிதியின் ஆரம்ப கால ஆட்சியின் போது, கருணாநிதியின் ஆட்சி அதிகார தயவோடு, முத்து 7 படங்களில் நடித்தார்.

தனிப்பட்ட முறையில் MGRஇன் ரசிகராக இருந்த முத்து, தந்தையின் கட்டாயத்தின் பெயரில் நடிகரானார், நல்ல நடிகராக வலம் வர வேண்டியவரை, MGRஐ வீழ்த்த வேண்டும் என்ற வெறியில் நாசமாக்கியது திமுக.
கருணாநிதி முதலமைச்சரான முதல் termஇல் அமுல்படுத்திய முதல் project முத்து தான். MGRஐ எப்படியாவது ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காக மற்ற முதலமைச்சர் கடமைகளை மறந்துவிட்டு தானே தனது மகனின் முதல் படத்தை எழுதி தயாரித்தார். அப்படியாக 7 படங்கள் வரிசையாக அவர் ஆட்சிக்காலத்தில் வந்தது.
ஆனால் MGRஐ வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? கருணாநிதியின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது, மு க முத்துவின் திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கேலிக்குள்ளானது. கருணாநிதி எதிர்பார்த்த அளவுக்கு முத்துவால் திரையுலகில் சாதிக்க முடியவில்லை. வன்மத்தை மட்டும் வைத்து கொண்டு தந்தை மகன் கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை.
சிறு வயதில் தாயை இழந்த முத்துவுக்கு தந்தையின் பாசமும் பெரிதாக கிடைக்கவில்லை. எல்லா வெளிச்சமும் ஒரே நேரத்தில் தந்தை முதலமைச்சரானவுடன் கிடைத்தது. இந்த திடீர் மாற்றங்களை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. திரையுலகிலும் தாக்கு பிடிக்க முடியவில்லை, இறுதியில் அவர் போதைக்கு அடிமையானார்.

தனது திட்டத்துக்கு முத்து சரிப்பட்டு வரமாட்டார் என்று தெரிந்தவுடன் கலைஞர், தன் சொந்த மகனையே புறக்கணிக்க ஆரம்பித்தார்.. தந்தைக்கும் மகனுக்கும் விரிசல் ஏற்பட்டது, மக்கள் திலகத்தை அழிக்க புறப்பட்ட கூட்டணி, தனக்குள் முரண்பட்டு நின்றது.

தந்தை, மற்றும் கட்சியால் ஓரங்கட்டபட்ட முத்து இறுதியாக மக்கள் திலகத்தின் நட்பை பெற முயற்சித்தார், கருணாநிதியின் சொந்த மகனே கடைசியில் MGRஐ தான் நம்பினார். இப்படி எல்லா சதிகளையும் முறியடித்து தான் மக்கள் திலகம் முடி சூடினார்.

எம் ஜி ஆறும் அவரை பல முறை பல சிக்கல்களில் இருந்து காப்பாற்றி உதவியிருக்கிறார். கருணாநிதியின் மகன் என்று தெரிந்தும், தன்னை அழிக்க களமிறக்கப்பட்டவன் என்று அறிந்தும், மு.க.முத்துவுக்கு உதவினார் மக்கள் திலகம். அங்க நிற்கிறார் அந்த மனுஷன்.! 
பொறாமையும் வயித்தெரிச்சலும் இருக்கலாம், ஆனா சொந்த மகனையே பயன்படுத்தி வன்மம் தீர்க்க முயற்சிப்பது எல்லாம், மிகவும் கேவலமான அரசியல். தன் சுயலாபத்துக்காக தன் மகனின் வாழ்க்கையை கெடுத்தார் கருணாநிதி என்ற பழி மட்டும் தான் அவருக்கு மிஞ்சியது. 

-Mr.பழுவேட்டரையர்




Comments

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக