Skip to main content

மு.க.ராஜபக்ச

கருணாநிதியும் ராஜபக்சவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

ஈழத்தில், ஈழம், தமிழீழம் என்ற சொற்களை பயன்படுத்துவதற்கு தடை போட்டான் ராஜபக்ச!

தமிழகத்தில் ஈழம் என்ற சொல்லே இனி எந்த அரசியல் மேடைகளிலும் பயன்படுத்த கூடாதென்று உத்தரவிட்டார் கருணாநிதி.

ஈழத்தில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இடித்து தரமட்டமாக்க உத்தரவிட்டான் ராஜபக்ச.

தமிழகத்தில் எங்கும் தேசியத் தலைவரின புகைப்படங்கள் இருக்க கூடாதென்று திமுக ஆட்சியில் உத்தரவிட்டார் கருணாநிதி.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை ஆவணப்படுத்திய ஊடகவியலாளர்களை சிறைப்படுத்தினான் ராஜபக்ச!

தமிழகத்தில் இறுதி கட்ட போரின் போது நடந்த போர் குற்றங்களின் ஆவணங்களை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க முயற்சித்த தமிழர்களை சிறைப்படுத்தினார் கருணாநிதி. இனப்படுகொலை காட்சிகளை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சியை தடை செய்தார் கருணாநிதி.

ஈழத்தில் உலக நாடுகளால் தடை செய்ய பட்ட ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று பொய் உரைத்தான் ராஜபக்ச! 
ஈழத்தில் போரை நிறுத்திவிட்டேன் என்று வாய் கூசாமல் பொய் உரைத்தார் கருணாநிதி.

உலக பிரதிநிதிகளை ஈழத்திற்கு அழைத்துவந்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது பாருங்கள் என்றொரு நாடகத்தை அரங்கேற்றினான் ராஜபக்ச!
அந்த நாடகத்திற்கு தனது கூத்து பட்டறையில் இருந்து அரசியல் நடிகர்களை ஈழத்திற்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.

ஈழத்தில் உரிமைக்காக போராடும் தமிழர்களை பிரிவினைவாதிகள் தீவிரவாதிகள்னு குற்றம் சாட்டி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்கிறான் ராஜபக்ச!

தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக போராடிய தமிழர்களை பிரிவினைவாதிகள் தீவிரவாதிகள் என்று சொல்லி கைது செய்தார் கருணாநிதி!

தேசியத் தலைவரின் பெற்றோரை சிறைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்காமல், அந்த முதியவர்களை துன்புறுத்தினான் ராஜபக்ச.

மருத்துவ சிகிச்சைக்காக தாய்த்தமிழகம் வந்த அந்த தாயை தமிழகத்துக்குள் நுழைய விடாமல் விரட்டினார் கருணாநிதி. 

தமிழர்கள், தமிழர்கள் சார்ந்த உரிமைகள் என்று பேசினாலே அது பிரிவினைவாதம் என்று சொல்லி தமிழர்களின் குரல் வலையை நசுக்குகிறான் ராஜபக்ச!

தமிழர்கள் என்று சொன்னாலே பாசிசம் என்று சொல்லி தமிழர்களின் குரல் வலையை நசுக்குகிறது திமுக!

ராஜபக்ச தனது தமிழ் பேசும் அடிவருடிகளை கொண்டு ஈழத்திற்கும், தமிழர்களுக்கும் எதிரான வன்ம, வெறுப்பு பிரச்சாரங்களை இன்னும் நடத்தி வருகிறான்..

ராஜபக்ச கூட்டம் செய்யும் அதே பிரச்சாரங்களை தான் உடன்பிறப்புக்களும் இன்று சமூக வலைதளங்களில் செய்து வருகிறார்கள்.

-Mr. பழுவேட்டரையர்
28/11/21

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...