Skip to main content

தேவை ஒரு Task Force

கொழும்பில் நடக்கும் கூத்து ஒரு புறம் இருக்கட்டும். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த மீள தேவைப்படும் எந்த ஒரு செயல் திட்டத்தையும் கொழும்பில் இருந்து அடுத்த ஒரு வருடத்துக்கு செய்ய முடியாது. எல்லாம் மக்களிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தமிழ் தேசம் குறிப்பாக வேற ஒரு செயல் திட்டத்தில் ஈடுபட வேண்டும்.

தென்னிலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள், வட கிழக்குக்கு முதலில் திரும்ப வேண்டும். உங்களுக்கு கொழும்பில் எந்த வேலையும் இப்போதைக்கு கிடையாது.

தாயகம் திரும்பியவுடன் கூட்டமைப்பு, முன்னணி என்ற இரண்டு முதன்மை கட்டமைப்புகளின் தலைமைகளும் இணைந்து ஒரு சந்திப்பை நடத்த வேண்டும்.

அந்த சந்திப்பில், இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து தமிழர் தேசத்தை மீட்க ஒரு தனி bi partisan task force ஒன்றை உருவாக்க வேண்டும்.

இந்த task force எந்த கட்சி பிரச்சரங்களிலும் ஈடுபடாது, மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நோக்குடன், தாயகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரில் இருந்தும் நெருக்கடி பாதிப்பு குறித்தான தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும்.

இந்த பணியில் இரு கட்சி தொண்டர்களும் தலைமைகளும்
இணைந்து செயல்பட வேண்டும். இதில் ஒரு பக்கம் தரவு சேகரிப்பு நடக்கும் போது, மற்ற பக்கம் இரு கட்சி தலைமைகளும், முதன்மை முகங்களும், ஒன்றாக ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து பேச வேண்டும். கூட்டங்கள் நடத்தி நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.

சேகரிக்கப்படும் தகவல்கள் வழி, உடனடி தேவைகளை மதிப்பீடு செய்து, அவற்றை எவ்வாறு மக்களுக்கு வழங்கலாம் என்ற logistics பற்றி திட்டங்களை அந்த task force வகுக்க வேண்டும்.

முக்கிய இரு கட்சி அரசியல் பிரமுகர்கள் இணைந்து அவற்றை நடத்தி முடிக்க தேவையான பணத்தை திரட்ட ஒரு NGO வை உருவாக்க வேண்டும். அதன் நடவடிக்கை fully transparent ஆ இருக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட NGOவுக்கு புலம்பெயர் தமிழர்கள் ஊடாக பணத்தை அனுப்பி வைக்க வழி அமைத்து கொடுக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஊர்கள், மக்களுக்கு உடனடியாக உதவிகள் போய் சேரும் விதம் ஒழுங்கமைப்புகள் எல்லாம் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஊடாக, நமது தேசத்தை ஒருங்கிணைத்து,

ஒரு collective ஆ எங்கள் strength அ நாங்கள் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

இதன் ஊடாக தென்னிலங்கைக்கு நம் மக்கள் ஒரு பாடத்தை படிப்பிக்கலாம்.

வட கிழக்கில் எம்மவர்கள் தெருவில் நிற்க வேண்டிய தேவை இல்லாத ஒரு நிலையை உருவாக்கி காட்டுவது தான் அந்த task force இன் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நம்மை நிர்வாகிக்க நாமே போதும் என்று காட்ட வேண்டும்.

சிவில் சமூகத்தின் இயக்க வெளியை அதிகார வெளி மட்டுமே தீர்மாணிக்காது என்பதை உணர்த்த இத்தகைய நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

-Mr. பழுவேட்டரையர்
12/07/2022

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...