Skip to main content

திமுகவும் கிரீஸ் டப்பாக்களும்

நாம் தமிழருக்கு எதிரான திமுகவின் நடவடிக்கைகளில் மிகவும் வேடிக்கையான தேர்தல் நேர பிரச்சார நடவடிக்கை என்றால் அது நாம் தமிழரில் இருந்து விலக்கப்பட்ட கிரீஸ் டப்பாக்களை கொண்டு நாம் தமிழரை அவர்கள் தாக்கியது தான்.

கட்சி தாவும் கிரீஸ் டப்பாக்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு போதும் மதிப்பும் மரியாதையும் இருந்ததில்லை. அந்த டப்பாக்கள் ஊடாக நாம் தமிழரை திமுக தாக்கிய போது, திமுகவின் விமர்சனங்கள் எல்லாமே அவதூறுகளாக தான் வெளிப்பட்டது. திமுகவினர் ராஜீவின் பதிவுகளை கண்டு குதூகலித்தாலும், நாம் தமிழர் மத்தியிலோ, மக்கள் மத்தியிலோ அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

This is an old strategy that doesn't work anymore. Nevertheless, it was good for NTK. When your enemy makes stupid mistakes, help them in their course of action.

ராஜீவ் போன்றவர்களை பயன்படுத்தி திமுக நாம் தமிழரை தாக்கும் போது
ராஜீவின் நம்பகத்தன்மை, நேர்மை, integrityஐ தான் மக்கள் முதலில் சந்தேகித்தார்கள்.

திமுகவினர் ராஜீவை போன்றோரை தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது, அண்ணன் சீமான் ராஜீவ் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாக இருந்தது.

திமுக ஒரு விதத்தில் நாம் தமிழருக்கு இந்த விஷயத்தில் உதவியது என்று தான் சொல்ல வேண்டும்.

ராஜீவ், கல்யாண் கட்சியை விட்டு வெளியேறிய போது கட்சிக்குள் இருந்த சிறு புலம்பல்களும், அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்த பிறகு காணாமல் போய்விட்டது.

அதுவரை அவர்களுக்கு கட்சிக்குள் இருந்து கொஞ்ச நஞ்ச பரிதாபமும், தொலைந்தது. ராஜீவ் திமுகவில் சேர்ந்தது நாம் தமிழருக்கு கிடைத்த ஒரு எதிர்பாரா நன்மை தான். அதற்கு திரு செந்தில்குமார் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

திமுகவினர், குறிப்பா செந்தில் குமார் அவர்கள் ராஜீவை ஊர் ஊராக காவிக் கொண்டு, ஏதோ பெரிய பரிசை வென்றது போல் திரிந்தார். கிட்டத்தட்ட எல்லா திமுக பிரமுகர்களின் வீட்டுக்கும் ராஜீவை அழைத்து சென்று உபசரித்தார்கள்.

அவரும் அங்கு நல்ல ஆடு போல் கொழுத்தார். தேர்தல் முடிந்து விட்டது, இனி தான் ஆடு வீட்டில் இருந்து கசாப்பு கடைக்கு அழைத்து செல்லப்படும்.

தமிழன் பிரசன்னா, கரு பழனியப்பன், இவன், அவன் என்ற பலர் பல வருடங்களாக திமுகவுக்குள் ஒரு நல்ல இடத்துக்கு வர முக்கி கொண்டிருக்கும் போது, ராஜீவுக்கு கிடைத்த இந்த திடீர் கவனம், ஒரு காரணத்துடன் வழங்கப்பட்ட கவனம் என்பதை ராஜீவ் உணர்ந்தாரா என்று எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிந்து விட்டது, இனி கொஞ்சம் கொஞ்சமாக அவர் காலாவதியான ஒரு பொருள் என்பதை உணர்வார் என்று நம்புகிறேன்

-Mr. பழுவேட்டரையர்
7/4/21

Comments

  1. Rajivku theriyala Namma election mudinjathum DMK vala etti othaikkapada pora grease dappanu,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...