Skip to main content

பௌத்தத்தின் -சிங்கள ஆதிக்க சாதிய கொடி

இன்று நிறைய தமிழ் பௌத்தர்கள், குறிப்பாக தலித்திய கருத்தியலை முன்னிறுத்தும் பௌத்தர்கள் மத்தியில், இந்த பௌத்த கொடியை காண கூடியதாக இருக்கிறது. 
இந்த கொடியின் வரலாறு, இங்கே பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ சில பௌத்த துறவிகள் உருவாக்கிய கொடி என்று மட்டுமே தான் எல்லோருக்கும் மேலோட்டமா தெரிஞ்சிருக்கும். ஆனால் இந்த கொடியை உருவாக்கிய பௌத்த துறவிகளின் வரலாறு இங்கே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. 

இன்று உலகெங்கும் பரவி வாழும் பெரும்பாண்மையான பௌத்தர்கள் இந்த கொடியை பயன்படுத்தினாலும், இந்த கொடி சிங்கள பௌத்தர்களால் மட்டுமே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கொடியாகவே இருக்கிறது. அதிலும் இந்த கொடியை உருவாக்கிய துறவிகள் சாதியத்தை தூக்கி பிடித்தவர்களாகவும், தங்களை ஆரியர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். 

இதை பற்றி எல்லாம் கொஞ்சம் அலசி பார்ப்போம்.

இலங்கையில் உள்ள பௌத்தம், சிங்கள இனவாதத்தோட, இனத்தூய்மைவாதத்தோடு பிண்ணி பிணைந்திருக்கிறது. 

பௌத்தம் என்பது இலங்கையில் ஆதிக்கத்தின் குறியீடாக, சிங்கள மேலாதிக்க தர்மமாகவே திகழ்கிறது.

சிங்கள அரசு, இலங்கையை அடக்கி ஆளும் அதிகாரத்தை, சிங்கள பௌத்த துறவிகளால் உருவாக்கப்பட்ட இதிகாச கதைகளின் ஊடாகவே பெறுகிறார்கள். இலங்கை மீது சிங்கள தேசம் உரிமை கோருவது, பௌத்த துறவிகளால் உருவாக்கப்பட்ட மகாவம்சமெனும் நூலின் ஊடாக தான். 

சிங்கள அரசுகளின், சிங்கள பௌத்த துறவிகளின் வரலாறை நீங்கள் எடுத்து பார்த்தால், அதில் பௌத்த துறவிகள் பார்ப்பனியத்தன்மையோடும், சிங்கள அரசர்கள் சத்திரிய தன்மையோடும் நடந்து கொள்வதை நீங்கள் அவதானிக்கலாம். இதை நியாயப்படுத்தும் விதமான நூல்களையும் பல சிங்கள பௌத்த துறவிகள் இயற்றியும் இருக்கிறார்கள்.

உலகில் ஆரிய பார்ப்பனியத்தின் கோர வடிவமாக இருப்பது, இலங்கையில் இருக்கும் சிங்கள பௌத்த துறவிகள் தான்! 

சிங்களவர்கள் தங்களை வெளிப்படையாக ஆரியர்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்கள். 

பௌத்தர்கள் பயன்படுத்தும் இந்த கொடி. சிங்கள ஆதிக்க சாதியினரான கோவிகம சாதிய பௌத்த துறவிகளால் இலங்கையில் உருவாக்கப்பட்ட கொடி. இந்த கொடியை வடிவமைத்த சிங்கள பௌத்த துறவிகள் எல்லோரும் அந்த காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்பரசியல் செய்து வந்தவர்கள்.
இந்த கொடியை வடிவமைத்த ஹிக்கடுவ சுமங்கல தேர என்ற பௌத்த துறவி, ஆரிய தர்மம், பிராமண தர்மம் பற்றிய பிரச்சாரங்களை முன்னெடுத்த ஒரு சிங்கள ஆதிக்க சாதியவாதி. மகாவம்சத்தின் தமிழின வெறுப்பு பிரச்சாரத்தை சிங்கள மொழியில் இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்தது இந்த பௌத்த துறவி தான்.
சுமங்கல தேரவின் முதன்மை மாணவனாக செயல்பட்ட அநாகரிக தர்மபால தான் "சிங்களவர்கள் தூய ஆரிய இனம்!" என்று சொல்லி சிங்களவர்களின் பெயர்களுக்கு முன்னாள் ஆரியத்தை சேர்க்கும் வேலையை ஆரம்பித்துவிட்டான். ஆரியபால, ஆரியதிலக போன்ற பெயர்களோடு சிங்களவர்கள் திரிய காரணம் இவர் தான்.
"என்றும் சுழன்று கொண்டிருக்கும் பௌத்த சக்கரம்.ஆரிய அரசாட்சியின் சக்கரமாகும்"

"ஆரிய சிங்களவர்கள் உயர்ந்தவர்கள்,அவர்கள் தமிழர்கள்,முஸ்லிம்கள் போல் ஆடை அணிய கூடாது.வெள்ளை ஆடைகள் தான் அணிய வேண்டும்.ஆரியர்கள் தான் தூய மனிதர்கள்" போன்ற கருத்துக்களை பரப்பியவர் தான் இவர்
இலங்கையின் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி என்பது ஆரிய அடையாளத்தை தனதாக்கிக்கொள்ள சிங்களம் எடுத்த ஒரு நடவடிக்கை என்று தான் சொல்ல வேண்டும். அநாகரிக தரம்பாலவின்(சிங்கள தேசியத்தின் தந்தை) "சிங்கள தேசம் ஆரியர்களுக்கு சொந்தமான தேசம்" என்ற முழக்கம் தான் சிங்கள தேசியத்தின் முதல் முழக்கம்!
இந்துத்துவத்தின் தந்தையாக கருதப்படும் கோல்வாக்கரின் சிந்தனைகளுக்கும் சிங்கள தேசியத்தின் தந்தையான அநாகரிக தர்மபாலவின் கருத்துக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஆரிய சாதிய மேலாதிக்க சிங்கள பௌத்த துறவிகளால் உருவாக்கப்பட்ட மதவாத கொடி தான் இன்று உலக பௌத்தர்களின் கொடியாக இருக்கிறது. அந்த கொடியை வடிவமைத்தவர்களின் கொடிய சிந்தனை எப்படி இருக்கு பார்த்தீங்களா 👇
தொடரும்...

Mr. பழுவேட்டரையர்
30/07/2023

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

தலைவருக்கு யாரும் மரண செய்தி எழுத வேண்டாம்!

2009 மே 18- சிங்கள அரசு உலகத்துக்கு இரண்டு செய்திகளை சொன்னது.  1) விடுதலை புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி  2) தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி.  அந்த செய்திகளுடன் சிங்களம் போர் வெற்றியை அறிவித்து முடிவுரை எழுதியது. அதனுடன், தலைவரின் மரணத்தை காட்சிப்படுத்தி ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. மே 18 தொடர்பாக உலகத்துக்கு சிங்களம் வழங்கிய narrative இது தான்.  இந்த செய்தி ஊடாக இரண்டு விடயங்களை சிங்களம் சாதிக்க துடித்தது.  1) இனப்படுகொலையை மூடி மறைத்தல், 2) போர், விடுதலை புலிகளை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்டது என்ற பொய்யை நிறுவுவது.  சிங்களத்தின் இந்த நிகழ்ச்சி நிரலை உலகத்தமிழினம் வெற்றிக்கரமாக முறியடித்து, இன்று உலகெங்கும் ஈழத்தில் நடந்தது, போர் அல்ல , இனப்படுகொலை என்பதை நிறுவி கொண்டிருக்கிறார்கள்.  இது சிங்களத்துக்கு விழுந்த பேரிடி !  தலைவரின் உடலை அலங்கோலமாக காட்டி, அதை வைத்து, அந்த நாளை அவரின் மரண செய்திக்கான நாளாக மாற்ற துடித்தது சிங்களம். அப்படி செய்வதன் ஊடாக, கவனத்தை இனப்படுகொலையில் இருந்து திசைதிருப்பலா...