Skip to main content

பௌத்தத்தின் -சிங்கள ஆதிக்க சாதிய கொடி

இன்று நிறைய தமிழ் பௌத்தர்கள், குறிப்பாக தலித்திய கருத்தியலை முன்னிறுத்தும் பௌத்தர்கள் மத்தியில், இந்த பௌத்த கொடியை காண கூடியதாக இருக்கிறது. 
இந்த கொடியின் வரலாறு, இங்கே பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ சில பௌத்த துறவிகள் உருவாக்கிய கொடி என்று மட்டுமே தான் எல்லோருக்கும் மேலோட்டமா தெரிஞ்சிருக்கும். ஆனால் இந்த கொடியை உருவாக்கிய பௌத்த துறவிகளின் வரலாறு இங்கே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. 

இன்று உலகெங்கும் பரவி வாழும் பெரும்பாண்மையான பௌத்தர்கள் இந்த கொடியை பயன்படுத்தினாலும், இந்த கொடி சிங்கள பௌத்தர்களால் மட்டுமே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கொடியாகவே இருக்கிறது. அதிலும் இந்த கொடியை உருவாக்கிய துறவிகள் சாதியத்தை தூக்கி பிடித்தவர்களாகவும், தங்களை ஆரியர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். 

இதை பற்றி எல்லாம் கொஞ்சம் அலசி பார்ப்போம்.

இலங்கையில் உள்ள பௌத்தம், சிங்கள இனவாதத்தோட, இனத்தூய்மைவாதத்தோடு பிண்ணி பிணைந்திருக்கிறது. 

பௌத்தம் என்பது இலங்கையில் ஆதிக்கத்தின் குறியீடாக, சிங்கள மேலாதிக்க தர்மமாகவே திகழ்கிறது.

சிங்கள அரசு, இலங்கையை அடக்கி ஆளும் அதிகாரத்தை, சிங்கள பௌத்த துறவிகளால் உருவாக்கப்பட்ட இதிகாச கதைகளின் ஊடாகவே பெறுகிறார்கள். இலங்கை மீது சிங்கள தேசம் உரிமை கோருவது, பௌத்த துறவிகளால் உருவாக்கப்பட்ட மகாவம்சமெனும் நூலின் ஊடாக தான். 

சிங்கள அரசுகளின், சிங்கள பௌத்த துறவிகளின் வரலாறை நீங்கள் எடுத்து பார்த்தால், அதில் பௌத்த துறவிகள் பார்ப்பனியத்தன்மையோடும், சிங்கள அரசர்கள் சத்திரிய தன்மையோடும் நடந்து கொள்வதை நீங்கள் அவதானிக்கலாம். இதை நியாயப்படுத்தும் விதமான நூல்களையும் பல சிங்கள பௌத்த துறவிகள் இயற்றியும் இருக்கிறார்கள்.

உலகில் ஆரிய பார்ப்பனியத்தின் கோர வடிவமாக இருப்பது, இலங்கையில் இருக்கும் சிங்கள பௌத்த துறவிகள் தான்! 

சிங்களவர்கள் தங்களை வெளிப்படையாக ஆரியர்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்கள். 

பௌத்தர்கள் பயன்படுத்தும் இந்த கொடி. சிங்கள ஆதிக்க சாதியினரான கோவிகம சாதிய பௌத்த துறவிகளால் இலங்கையில் உருவாக்கப்பட்ட கொடி. இந்த கொடியை வடிவமைத்த சிங்கள பௌத்த துறவிகள் எல்லோரும் அந்த காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்பரசியல் செய்து வந்தவர்கள்.
இந்த கொடியை வடிவமைத்த ஹிக்கடுவ சுமங்கல தேர என்ற பௌத்த துறவி, ஆரிய தர்மம், பிராமண தர்மம் பற்றிய பிரச்சாரங்களை முன்னெடுத்த ஒரு சிங்கள ஆதிக்க சாதியவாதி. மகாவம்சத்தின் தமிழின வெறுப்பு பிரச்சாரத்தை சிங்கள மொழியில் இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்தது இந்த பௌத்த துறவி தான்.
சுமங்கல தேரவின் முதன்மை மாணவனாக செயல்பட்ட அநாகரிக தர்மபால தான் "சிங்களவர்கள் தூய ஆரிய இனம்!" என்று சொல்லி சிங்களவர்களின் பெயர்களுக்கு முன்னாள் ஆரியத்தை சேர்க்கும் வேலையை ஆரம்பித்துவிட்டான். ஆரியபால, ஆரியதிலக போன்ற பெயர்களோடு சிங்களவர்கள் திரிய காரணம் இவர் தான்.
"என்றும் சுழன்று கொண்டிருக்கும் பௌத்த சக்கரம்.ஆரிய அரசாட்சியின் சக்கரமாகும்"

"ஆரிய சிங்களவர்கள் உயர்ந்தவர்கள்,அவர்கள் தமிழர்கள்,முஸ்லிம்கள் போல் ஆடை அணிய கூடாது.வெள்ளை ஆடைகள் தான் அணிய வேண்டும்.ஆரியர்கள் தான் தூய மனிதர்கள்" போன்ற கருத்துக்களை பரப்பியவர் தான் இவர்
இலங்கையின் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி என்பது ஆரிய அடையாளத்தை தனதாக்கிக்கொள்ள சிங்களம் எடுத்த ஒரு நடவடிக்கை என்று தான் சொல்ல வேண்டும். அநாகரிக தரம்பாலவின்(சிங்கள தேசியத்தின் தந்தை) "சிங்கள தேசம் ஆரியர்களுக்கு சொந்தமான தேசம்" என்ற முழக்கம் தான் சிங்கள தேசியத்தின் முதல் முழக்கம்!
இந்துத்துவத்தின் தந்தையாக கருதப்படும் கோல்வாக்கரின் சிந்தனைகளுக்கும் சிங்கள தேசியத்தின் தந்தையான அநாகரிக தர்மபாலவின் கருத்துக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஆரிய சாதிய மேலாதிக்க சிங்கள பௌத்த துறவிகளால் உருவாக்கப்பட்ட மதவாத கொடி தான் இன்று உலக பௌத்தர்களின் கொடியாக இருக்கிறது. அந்த கொடியை வடிவமைத்தவர்களின் கொடிய சிந்தனை எப்படி இருக்கு பார்த்தீங்களா 👇
தொடரும்...

Mr. பழுவேட்டரையர்
30/07/2023

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற