Skip to main content

ராஜீவின் Child Soldiers

ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பல இயக்கங்கள் வீழ்ச்சியடைய இந்திய உளவுத்துறையின் தலையீடே முக்கிய காரணமாக இருந்தது. TELO, EPRLF போன்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு சேவகம் செய்வதையே தங்கள் முதன்மை கடமையாக கொண்டிருந்தார்கள்.

இந்தியாவுக்கு அவர்கள் சேவகம் செய்த விதம் பற்றி எல்லாம், இன்னொரு பதிவில் பார்ப்போம்.

PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் வலுவடைந்திருந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை, அந்த மூன்று இயக்கங்களில் மிஞ்சிய எச்ச சொச்சங்களை வைத்து ENDLF என்ற ஒரு ஒட்டுக்குழுவை உருவாக்கியது.

ராஜீவ் படையின் இந்த ஒட்டுக்குழு தான் ஈழத்தில் சிறுவர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்த முதல் குழு.
ராஜீவின் உத்தரவின் பெயரில், இந்திய அமைதி காக்கும் படையின் ஆசீர்வாதத்தில், EPRLF பத்மநாபா கூட்டம் எனும் அடியாட்கள் ஊடாக தான் ஈழத்தில் முதல் முறையாக பாடசாலை மாணவர்கள் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

இந்திய ராணுவம் ஈழத்தில் தங்களின் ஒட்டுக்குழுக்களை கொண்டு, தங்கள் உத்தரவை நிறைவேற்ற, இந்தியாவின் proxyயாக, ஒரு புது ராணுவத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். தமிழ் தேச ராணுவம் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த so called ராணுவத்தை, ஈழத்தின் தனிப்பெரும் ஆயுத குழுவாக மாற்றி, அதன் ஊடாக டெல்லியின் ராணுவ நடவடிக்கைகளை ஈழத்தில் நடைமுறைப்படுத்த திட்டம் தீட்டப்பட்டது.


அதன் அடிப்படையில் அந்த ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் வேலை ஆரம்பித்தது.

இந்திய அமைதி காக்கும் படை, மற்றும் அதனுடன் பயணித்த ஒட்டுக்குழுக்களுக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எந்த ஒரு மதிப்பும் இருந்ததில்லை. அதற்கு காரணம் IPKF, EPRLFஇன் ஒழுக்கமற்ற, மனிதமற்ற நடவடிக்கைகள் தான். 

அதனால் மக்கள் யாரும் ராஜீவின் இந்த புது ராணுவத்தில் இணையவில்லை. அதனால் வலுக்கட்டாயமாக ஆள் சேர்க்கும் வேலையை ENDLF ஆரம்பித்தது. பாடலசாலைகள், Tutorialகளுக்கு வெளியே ENDLF வல்லூறுகள் போய் நின்று, அங்கு அருட்செல்வம் தேடி வரும் பிஞ்சுகளை, சிறுவர்களை, மாணவர்களை கடத்தி சென்று, அவர்களை ராணுவத்தில் இணைக்கும் வேலையை ஆரம்பித்தது.

தனியார் Busகளிலும், Vanகளிலும் சிறுவர்களை கடத்தும் வேலையை ஆரம்பித்தது ENDLF. அப்படி கடத்தப்படும் சிறுவர்கள், இந்திய முகாம்களுக்கு அருகில் உள்ள வீடுகளில்(தற்காலிக ENDLF முகாம்களில்) அடைக்கப்பட்டார்கள்.

அந்த வீடுகளில் அந்த சிறுவர்களுக்கு Cigarette, சாராயம் என்று போதை பொருட்கள் தாராளமாக வழங்கப்பட்டது, அவர்களை போதைக்கு "சுக வாழ்வுக்கு" அடிமைப்படுத்தும் வேலை ஒரு பக்கம் நடந்தது.

அடம்படித்த சிறுவர்கள் கொடூரமாக, மற்ற சிறுவர்கள் முன் தாக்கப்பட்டார்கள். அந்த சித்திரவதைகளை பார்த்து, அந்த பயத்திலேயே பல சிறுவர்கள், மாணவர்கள் அந்த காடையர்கள் சொன்னபடியே செயல்பட ஆரம்பித்தார்கள்.

தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்த இளைஞர்கள், இருட்டறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். நாலு நாட்கள் இப்படி இந்திய அமைதி காக்கும் படையின் முகாம்களுக்கு அருகில் உள்ள வீடுகளில் வைத்து துன்புறுத்தப்படும் அந்த சிறுவர்கள், 4ஆம் நாள் வேறொரு இடத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

அழைத்து செல்ல முன், அந்த சிறுவர்களுக்கு மொட்டை அடித்து, அவர்களின் கண்களை கட்டி தான் அவர்களை வாகனங்களில் ஏற்றுவார்கள். அந்த வீடுகளுக்கும், இந்திய முகாம்களுக்கும் வெளியே கடத்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரும், உறவுகளும் கதறி கதறி அழும் சத்தம் எப்போதும் ஒலித்தப்படி இருந்தது.

அந்த ஓலத்தின் நடுவே தமிழர் தேசம், அடங்கி, ஒடுங்கி, டெல்லி கோர வல்லாதிக்கத்தின் இந்த ஆட்டத்தை அடக்க முடியாது, அடங்கா கோபத்தில் எரிந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் ஒப்பந்தம் என்ற பெயரில் எங்கள் வீர மறவர்களின் கையில் இருந்து ஆயுதங்களை பறித்த ராஜீவ் காந்தி,  இன்னொரு பக்கம் ENDLF ஊடாக பாடசாலைக்கு சென்ற எங்கள் தமிழ் பிஞ்சுகளின் கைகளில் ஆயுதங்களை திணித்து ரசித்தார்.

காலப்போக்கில், ENDLF ஊடாக ராஜீவ் போட்ட திட்டங்களையும் விடுதலை புலிகள் முறியடித்து வென்றார்கள். பல பெற்றோரின் கோபத்தை தணித்தது அந்த முறியடிப்பு, 

உரிமை மறுக்கப்பட்ட எங்கள் தேசத்துக்கு, 

அநீதி இயல்பாக்கப் பட்டுக்கொண்டிருந்த  ஒரு கொடுஞ்சூழலில், எங்கள் மக்களுக்கான நீதியை வென்றெடுத்த விடுதலை புலிகள், மக்களின் பார்வையில் சட்டம், நீதி, இவை அனைத்தையும் வழி நடத்தும் தமிழர் அறத்தின் தனிப்பெரும் அடையாளமாக மாறினார்கள்.

தொடரும்..

Mr. பழுவேட்டரையர் 
8/3/2022

Comments

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற