Skip to main content

நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும்..

நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும், தமிழகத்தின் அரசியல் சூழலை முழுவதுமாக மாற்றியமைக்கும். அந்த மாற்றம் சமூக நீதி, பெண்ணியம் போன்ற தத்துவங்கள், அடிப்படைகள், அதிகார வடிவம் பெற வழி வகுக்கும்.

சிந்தித்து பாருங்கள். தமிழகம் முழுவதும் பெண்களை, அதுவும் வேட்பாளர்களில் 50% பெண்களை நாம் தமிழர் நிறுத்துவது என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தில் எளிதான காரியம் இல்லை. தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் வாக்களிக்கிறார்கள். தங்கள் அடிப்படை சனநாயக கடமையை சரிவர செய்து வரும் ஒரு பாலினத்துக்கு, அந்த சனநாயக கட்டமைப்பு, அதிகாரத்தில் பங்கை உறுதி செய்யாதது எவ்வளவு பெரிய அநீதி!.

அந்த அநீதியை சர்வ சாதாரணமாக நாம் கடந்து செல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!. இந்த லட்சணத்தில் மேடைக்கு மேடை முறுக்கு மீசைகளும், வேட்டிகளும் பெண்ணியம் பற்றி வெட்டி வீர வசனம் வேற பேசி கொண்டு திரிகிறார்கள்.

இத்தகைய சூழலில் நாம் தமிழர் 50% பெண்களை தேர்தலில் முன்னிறுத்தி களமாடும் போது, கட்சிக்குள் பெண்ணியம் சார்ந்த பார்வை அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் இயல்பாகவே கடத்தப்படுகிறது.

நாம் தமிழரில் பயணிக்கும் ஒரு ஆணுக்கு, அதிகாரத்தில் பாலின சமத்துவம் பற்றிய பார்வையை ஒரு நடைமுறை பாடமாக கட்சி கற்பிக்கிறது.

கட்சிக்குள் இயங்கும் மகளிர் சார்ந்த அணிகள், பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் பாசறைகள் என்று அனைத்துமே வெறும் tokenistic gestureஆக இல்லாமல், பெண்களை அதிகாரத்தில் அமர்த்த, அரசியல்படுத்த தேவையான ஒரு அடிப்படை கட்டமைப்பாக மாறி நிற்கிறது.

ஒரு கட்சியின் கலாச்சாரமே இங்கே மாற்றியமைக்கப்படுகிறது. Cadre politicsஅ தாண்டி அக்கா தங்கை, அண்ணன் தம்பி என்று ஒரு குடும்பம் போல, ஒரு பாதுகாப்பான, progressiveஆன சூழல் கட்சிக்குள் உருவாகிறது.

பெண்களின் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் குடும்பங்கள், சமூகம் போல், அரசியல், அதிகாரமும், பெண்களில் அதீத பங்களிப்புடன் முன்னேற்றத்தை காணும் என்பதில் சந்தேகமில்லை. தமிழீழத்தில் அது சாத்தியப்பட்டிருக்கு. தமிழீழத்தை விடவும் முற்போக்கான சமூக கட்டமைப்புகள், வாய்ப்புகள் உள்ள தாய்த்தமிழகத்தில் இது சாத்தியப்படாதா என்ன?

அதிகாரத்தில் இந்த மாற்றங்கள் நிகழ வேண்டும் என்றால், இந்த மாற்றங்களை, இயல்பான குணாதிசயமாக, கலாச்சாரமாக கொண்ட கட்சிகள் கையில் அதிகாரம் செல்ல வேண்டும்.

நாம் தமிழரின் வளர்ச்சியும், வெற்றியும், தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வழி வகுக்கும்.

-Mr. பழுவேட்டரையர்
5/4/21









Comments

  1. மிக சிறப்பு

    ReplyDelete
  2. தமிழருக்கும் ஓரே இறுதி வாய்ப்பு, 5 வருடத்தில் ஒன்றையும் விற்றுவிட முடியாது, 50 வருடங்களாக மாறி மாறி திரூடிய பணத்தை காக்கவே முயற்சிக்கிறார்கள், இருகட்சிகளுக்கும் அடிப்படையில் குற்றங்களை மறைக்கவும் கொள்ளையடிக்கும் உதவியே வருகின்றனர்

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு 👍

    ReplyDelete
  4. மக்களுக்கான வெற்றி நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே சாத்தியம்.

    ReplyDelete
  5. #எனது வாக்கு நாம் தமிழருக்கே..
    #வெல்வான் விவசாயி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக