Skip to main content

நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும்..

நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும், தமிழகத்தின் அரசியல் சூழலை முழுவதுமாக மாற்றியமைக்கும். அந்த மாற்றம் சமூக நீதி, பெண்ணியம் போன்ற தத்துவங்கள், அடிப்படைகள், அதிகார வடிவம் பெற வழி வகுக்கும்.

சிந்தித்து பாருங்கள். தமிழகம் முழுவதும் பெண்களை, அதுவும் வேட்பாளர்களில் 50% பெண்களை நாம் தமிழர் நிறுத்துவது என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தில் எளிதான காரியம் இல்லை. தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் வாக்களிக்கிறார்கள். தங்கள் அடிப்படை சனநாயக கடமையை சரிவர செய்து வரும் ஒரு பாலினத்துக்கு, அந்த சனநாயக கட்டமைப்பு, அதிகாரத்தில் பங்கை உறுதி செய்யாதது எவ்வளவு பெரிய அநீதி!.

அந்த அநீதியை சர்வ சாதாரணமாக நாம் கடந்து செல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!. இந்த லட்சணத்தில் மேடைக்கு மேடை முறுக்கு மீசைகளும், வேட்டிகளும் பெண்ணியம் பற்றி வெட்டி வீர வசனம் வேற பேசி கொண்டு திரிகிறார்கள்.

இத்தகைய சூழலில் நாம் தமிழர் 50% பெண்களை தேர்தலில் முன்னிறுத்தி களமாடும் போது, கட்சிக்குள் பெண்ணியம் சார்ந்த பார்வை அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் இயல்பாகவே கடத்தப்படுகிறது.

நாம் தமிழரில் பயணிக்கும் ஒரு ஆணுக்கு, அதிகாரத்தில் பாலின சமத்துவம் பற்றிய பார்வையை ஒரு நடைமுறை பாடமாக கட்சி கற்பிக்கிறது.

கட்சிக்குள் இயங்கும் மகளிர் சார்ந்த அணிகள், பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் பாசறைகள் என்று அனைத்துமே வெறும் tokenistic gestureஆக இல்லாமல், பெண்களை அதிகாரத்தில் அமர்த்த, அரசியல்படுத்த தேவையான ஒரு அடிப்படை கட்டமைப்பாக மாறி நிற்கிறது.

ஒரு கட்சியின் கலாச்சாரமே இங்கே மாற்றியமைக்கப்படுகிறது. Cadre politicsஅ தாண்டி அக்கா தங்கை, அண்ணன் தம்பி என்று ஒரு குடும்பம் போல, ஒரு பாதுகாப்பான, progressiveஆன சூழல் கட்சிக்குள் உருவாகிறது.

பெண்களின் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் குடும்பங்கள், சமூகம் போல், அரசியல், அதிகாரமும், பெண்களில் அதீத பங்களிப்புடன் முன்னேற்றத்தை காணும் என்பதில் சந்தேகமில்லை. தமிழீழத்தில் அது சாத்தியப்பட்டிருக்கு. தமிழீழத்தை விடவும் முற்போக்கான சமூக கட்டமைப்புகள், வாய்ப்புகள் உள்ள தாய்த்தமிழகத்தில் இது சாத்தியப்படாதா என்ன?

அதிகாரத்தில் இந்த மாற்றங்கள் நிகழ வேண்டும் என்றால், இந்த மாற்றங்களை, இயல்பான குணாதிசயமாக, கலாச்சாரமாக கொண்ட கட்சிகள் கையில் அதிகாரம் செல்ல வேண்டும்.

நாம் தமிழரின் வளர்ச்சியும், வெற்றியும், தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வழி வகுக்கும்.

-Mr. பழுவேட்டரையர்
5/4/21









Comments

  1. மிக சிறப்பு

    ReplyDelete
  2. தமிழருக்கும் ஓரே இறுதி வாய்ப்பு, 5 வருடத்தில் ஒன்றையும் விற்றுவிட முடியாது, 50 வருடங்களாக மாறி மாறி திரூடிய பணத்தை காக்கவே முயற்சிக்கிறார்கள், இருகட்சிகளுக்கும் அடிப்படையில் குற்றங்களை மறைக்கவும் கொள்ளையடிக்கும் உதவியே வருகின்றனர்

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு 👍

    ReplyDelete
  4. மக்களுக்கான வெற்றி நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே சாத்தியம்.

    ReplyDelete
  5. #எனது வாக்கு நாம் தமிழருக்கே..
    #வெல்வான் விவசாயி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற