Skip to main content

நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும்..

நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும், தமிழகத்தின் அரசியல் சூழலை முழுவதுமாக மாற்றியமைக்கும். அந்த மாற்றம் சமூக நீதி, பெண்ணியம் போன்ற தத்துவங்கள், அடிப்படைகள், அதிகார வடிவம் பெற வழி வகுக்கும்.

சிந்தித்து பாருங்கள். தமிழகம் முழுவதும் பெண்களை, அதுவும் வேட்பாளர்களில் 50% பெண்களை நாம் தமிழர் நிறுத்துவது என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தில் எளிதான காரியம் இல்லை. தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் வாக்களிக்கிறார்கள். தங்கள் அடிப்படை சனநாயக கடமையை சரிவர செய்து வரும் ஒரு பாலினத்துக்கு, அந்த சனநாயக கட்டமைப்பு, அதிகாரத்தில் பங்கை உறுதி செய்யாதது எவ்வளவு பெரிய அநீதி!.

அந்த அநீதியை சர்வ சாதாரணமாக நாம் கடந்து செல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!. இந்த லட்சணத்தில் மேடைக்கு மேடை முறுக்கு மீசைகளும், வேட்டிகளும் பெண்ணியம் பற்றி வெட்டி வீர வசனம் வேற பேசி கொண்டு திரிகிறார்கள்.

இத்தகைய சூழலில் நாம் தமிழர் 50% பெண்களை தேர்தலில் முன்னிறுத்தி களமாடும் போது, கட்சிக்குள் பெண்ணியம் சார்ந்த பார்வை அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் இயல்பாகவே கடத்தப்படுகிறது.

நாம் தமிழரில் பயணிக்கும் ஒரு ஆணுக்கு, அதிகாரத்தில் பாலின சமத்துவம் பற்றிய பார்வையை ஒரு நடைமுறை பாடமாக கட்சி கற்பிக்கிறது.

கட்சிக்குள் இயங்கும் மகளிர் சார்ந்த அணிகள், பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் பாசறைகள் என்று அனைத்துமே வெறும் tokenistic gestureஆக இல்லாமல், பெண்களை அதிகாரத்தில் அமர்த்த, அரசியல்படுத்த தேவையான ஒரு அடிப்படை கட்டமைப்பாக மாறி நிற்கிறது.

ஒரு கட்சியின் கலாச்சாரமே இங்கே மாற்றியமைக்கப்படுகிறது. Cadre politicsஅ தாண்டி அக்கா தங்கை, அண்ணன் தம்பி என்று ஒரு குடும்பம் போல, ஒரு பாதுகாப்பான, progressiveஆன சூழல் கட்சிக்குள் உருவாகிறது.

பெண்களின் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் குடும்பங்கள், சமூகம் போல், அரசியல், அதிகாரமும், பெண்களில் அதீத பங்களிப்புடன் முன்னேற்றத்தை காணும் என்பதில் சந்தேகமில்லை. தமிழீழத்தில் அது சாத்தியப்பட்டிருக்கு. தமிழீழத்தை விடவும் முற்போக்கான சமூக கட்டமைப்புகள், வாய்ப்புகள் உள்ள தாய்த்தமிழகத்தில் இது சாத்தியப்படாதா என்ன?

அதிகாரத்தில் இந்த மாற்றங்கள் நிகழ வேண்டும் என்றால், இந்த மாற்றங்களை, இயல்பான குணாதிசயமாக, கலாச்சாரமாக கொண்ட கட்சிகள் கையில் அதிகாரம் செல்ல வேண்டும்.

நாம் தமிழரின் வளர்ச்சியும், வெற்றியும், தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வழி வகுக்கும்.

-Mr. பழுவேட்டரையர்
5/4/21









Comments

  1. மிக சிறப்பு

    ReplyDelete
  2. தமிழருக்கும் ஓரே இறுதி வாய்ப்பு, 5 வருடத்தில் ஒன்றையும் விற்றுவிட முடியாது, 50 வருடங்களாக மாறி மாறி திரூடிய பணத்தை காக்கவே முயற்சிக்கிறார்கள், இருகட்சிகளுக்கும் அடிப்படையில் குற்றங்களை மறைக்கவும் கொள்ளையடிக்கும் உதவியே வருகின்றனர்

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு 👍

    ReplyDelete
  4. மக்களுக்கான வெற்றி நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே சாத்தியம்.

    ReplyDelete
  5. #எனது வாக்கு நாம் தமிழருக்கே..
    #வெல்வான் விவசாயி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...