Skip to main content

தேர்தல் நேர 'இலவச' கூத்து

இலவசம் அல்ல உரிமை! 

வளர்ந்த நாடுகளில் washing machine, fridge போன்றவற்றை வாங்க அங்கத்தைய அரசுகளால் மக்களுக்கு social welfare initiatives/ சலுகைகள் வழங்கப்படுகிறது, காலம் மாற மாற அடிப்படை தேவைகளாக மாறும் அனைத்து பொருட்களையும் சேவைகளையும், மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கு. குறிப்பாக முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலும், வருமான ஏற்றத்தாழ்வும் அதிகமாக உள்ள நாடுகளில் 'இலவசங்கள்' என்றழைக்கப்படும் அனைத்தும் நசுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளாகும்.

அதை அரசு வழங்குவதில் எந்த தவறும் இல்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மக்கள் நல திட்டங்களை ஒரு அரசு தன் ஆட்சிக்காலத்தில் கொண்டு வருவது, அல்லது ஒரு எதிர்க்கட்சியாக அத்தகைய திட்டங்களை முன்மொழிந்து, அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற வைப்பது போன்ற செயற்பாடுகளை தான் மற்ற நாடுகளில் காணலாம்.

அங்கே நோக்கம் மக்களின் மேம்பாடு, அந்த நோக்கம் செயல்படுத்தப்படும் போது, அது மக்களின் உரிமையாக, அரசின் கடமையாக செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் திராவிடர்களோ, மக்களின் பணத்தில் அறிவிக்கும் திட்டங்களை, ஏதோ மக்களுக்கு அவர்கள் கட்சி போடும் பிச்சை போல விளம்பரப்படுத்தி, அதை தேர்தல் நேரத்தில் வாக்குகளை வாங்கும் ஒரு கேடுகெட்ட வியாபாரமாக்கி, மக்கள் நல திட்டங்களை, ஏதோ நாயுக்கு போடும் எலும்பு துண்டுகள் போல, மக்களிடம் போட்டி போட்டு வீசுகிறார்கள்.

மக்களின் சுயமரியாதையும் அங்கே விலை பேசப்படுகிறது. இந்த திராவிட செயல் ஊடாக உரிமைகள் இலவசங்களாய் சிறுமைப்படுத்தப்படுகிறது.

ஒரு இலவசத்தையோ/சமூக நல மேம்பாட்டு திட்டத்தையோ அறிமுகப்படுத்த முன், அது தொடர்பான அடிப்படை தகவல்களை

▪️அந்த திட்டத்தை ஏன் கொண்டு வருகிறோம்.
▪️அதனால் சமூகத்தில் எத்தகைய ஒரு விளைவை ஏற்படுத்த முனைகிறோம்.
▪️இந்த திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்த போகிறோம்.
▪️அதற்கான பணம் எவ்வளவு ஒதுக்கப்படும்.
▪️அந்த சேவையை, பொருளை வழங்கும் ஒப்பந்தம், ஏலம் எவ்வாறு நடக்கும், அதை அரசு எவ்வாறு அமுல்படுத்தும்
போன்ற அடிப்படை தகவல்களை மக்கள் முன் வைக்க வேண்டும், அது தொடர்பான வாத விவாதங்கள் நடக்க வேண்டும், இப்படி எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு, அது எதையும் பின்பற்றாமல், எடுத்தான் கவுத்தான், என்றாற்போல், தேர்தல் நேர கூத்தாக சமூக நல திட்ட அறிவிப்புகளை மாற்றியிருக்கு திராவிடம்.

சோறு போடுறது அற செயல் தான். ஆனால் மக்களின் பணத்தில், மக்களை பந்திக்கு அழைத்து, அவர்கள் முன் இலையை வைத்து விட்டு, நீ எனக்கு ஓட்டு போட்டா உனக்கு சோறு தருவேன்னு ஒருத்தன் சொல்லுறதும், நீ எனக்கு ஓட்டு போட்டு, உனக்கு சோறு கூட leg pieceஉம் வைப்பேன்னு இன்னொருத்தன் சொல்லுறதும் அறம் இல்லை. அது அறம் மிக்க செயலை தரங்கெட்ட செயலாக்கும் அரசியல். இதை தான் திராவிடம் இன்று செய்கிறது.

-Mr. பழுவேட்டரையர்
28/3/2021

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற