Skip to main content

தேர்தல் நேர 'இலவச' கூத்து

இலவசம் அல்ல உரிமை! 

வளர்ந்த நாடுகளில் washing machine, fridge போன்றவற்றை வாங்க அங்கத்தைய அரசுகளால் மக்களுக்கு social welfare initiatives/ சலுகைகள் வழங்கப்படுகிறது, காலம் மாற மாற அடிப்படை தேவைகளாக மாறும் அனைத்து பொருட்களையும் சேவைகளையும், மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கு. குறிப்பாக முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலும், வருமான ஏற்றத்தாழ்வும் அதிகமாக உள்ள நாடுகளில் 'இலவசங்கள்' என்றழைக்கப்படும் அனைத்தும் நசுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளாகும்.

அதை அரசு வழங்குவதில் எந்த தவறும் இல்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மக்கள் நல திட்டங்களை ஒரு அரசு தன் ஆட்சிக்காலத்தில் கொண்டு வருவது, அல்லது ஒரு எதிர்க்கட்சியாக அத்தகைய திட்டங்களை முன்மொழிந்து, அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற வைப்பது போன்ற செயற்பாடுகளை தான் மற்ற நாடுகளில் காணலாம்.

அங்கே நோக்கம் மக்களின் மேம்பாடு, அந்த நோக்கம் செயல்படுத்தப்படும் போது, அது மக்களின் உரிமையாக, அரசின் கடமையாக செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் திராவிடர்களோ, மக்களின் பணத்தில் அறிவிக்கும் திட்டங்களை, ஏதோ மக்களுக்கு அவர்கள் கட்சி போடும் பிச்சை போல விளம்பரப்படுத்தி, அதை தேர்தல் நேரத்தில் வாக்குகளை வாங்கும் ஒரு கேடுகெட்ட வியாபாரமாக்கி, மக்கள் நல திட்டங்களை, ஏதோ நாயுக்கு போடும் எலும்பு துண்டுகள் போல, மக்களிடம் போட்டி போட்டு வீசுகிறார்கள்.

மக்களின் சுயமரியாதையும் அங்கே விலை பேசப்படுகிறது. இந்த திராவிட செயல் ஊடாக உரிமைகள் இலவசங்களாய் சிறுமைப்படுத்தப்படுகிறது.

ஒரு இலவசத்தையோ/சமூக நல மேம்பாட்டு திட்டத்தையோ அறிமுகப்படுத்த முன், அது தொடர்பான அடிப்படை தகவல்களை

▪️அந்த திட்டத்தை ஏன் கொண்டு வருகிறோம்.
▪️அதனால் சமூகத்தில் எத்தகைய ஒரு விளைவை ஏற்படுத்த முனைகிறோம்.
▪️இந்த திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்த போகிறோம்.
▪️அதற்கான பணம் எவ்வளவு ஒதுக்கப்படும்.
▪️அந்த சேவையை, பொருளை வழங்கும் ஒப்பந்தம், ஏலம் எவ்வாறு நடக்கும், அதை அரசு எவ்வாறு அமுல்படுத்தும்
போன்ற அடிப்படை தகவல்களை மக்கள் முன் வைக்க வேண்டும், அது தொடர்பான வாத விவாதங்கள் நடக்க வேண்டும், இப்படி எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு, அது எதையும் பின்பற்றாமல், எடுத்தான் கவுத்தான், என்றாற்போல், தேர்தல் நேர கூத்தாக சமூக நல திட்ட அறிவிப்புகளை மாற்றியிருக்கு திராவிடம்.

சோறு போடுறது அற செயல் தான். ஆனால் மக்களின் பணத்தில், மக்களை பந்திக்கு அழைத்து, அவர்கள் முன் இலையை வைத்து விட்டு, நீ எனக்கு ஓட்டு போட்டா உனக்கு சோறு தருவேன்னு ஒருத்தன் சொல்லுறதும், நீ எனக்கு ஓட்டு போட்டு, உனக்கு சோறு கூட leg pieceஉம் வைப்பேன்னு இன்னொருத்தன் சொல்லுறதும் அறம் இல்லை. அது அறம் மிக்க செயலை தரங்கெட்ட செயலாக்கும் அரசியல். இதை தான் திராவிடம் இன்று செய்கிறது.

-Mr. பழுவேட்டரையர்
28/3/2021

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

தலைவருக்கு யாரும் மரண செய்தி எழுத வேண்டாம்!

2009 மே 18- சிங்கள அரசு உலகத்துக்கு இரண்டு செய்திகளை சொன்னது.  1) விடுதலை புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி  2) தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி.  அந்த செய்திகளுடன் சிங்களம் போர் வெற்றியை அறிவித்து முடிவுரை எழுதியது. அதனுடன், தலைவரின் மரணத்தை காட்சிப்படுத்தி ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. மே 18 தொடர்பாக உலகத்துக்கு சிங்களம் வழங்கிய narrative இது தான்.  இந்த செய்தி ஊடாக இரண்டு விடயங்களை சிங்களம் சாதிக்க துடித்தது.  1) இனப்படுகொலையை மூடி மறைத்தல், 2) போர், விடுதலை புலிகளை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்டது என்ற பொய்யை நிறுவுவது.  சிங்களத்தின் இந்த நிகழ்ச்சி நிரலை உலகத்தமிழினம் வெற்றிக்கரமாக முறியடித்து, இன்று உலகெங்கும் ஈழத்தில் நடந்தது, போர் அல்ல , இனப்படுகொலை என்பதை நிறுவி கொண்டிருக்கிறார்கள்.  இது சிங்களத்துக்கு விழுந்த பேரிடி !  தலைவரின் உடலை அலங்கோலமாக காட்டி, அதை வைத்து, அந்த நாளை அவரின் மரண செய்திக்கான நாளாக மாற்ற துடித்தது சிங்களம். அப்படி செய்வதன் ஊடாக, கவனத்தை இனப்படுகொலையில் இருந்து திசைதிருப்பலா...