Skip to main content

காத்தான்குடிக்கு முன்: முஸ்லிம் ஊர்காவல் படை செய்த தமிழின அழிப்பு!

காத்தான்குடி படுகொலை இலங்கை முஸ்லிம் சமூகத்தினரால் ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகிறது. ஆனால் அதே சமூகத்தின் மீது இலங்கை இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் அதே அளவில் நினைவுகூரப்படுவதில்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

காத்தான்குடி படுகொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் யார் என்று உருப்படியான எந்த விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை. சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காத்தான்குடிக்குள், ஆயுததாரிகள் புகுந்து பட்ட பகலில் அதுவும் ஒரு பள்ளிவாசலில் படுகொலையை நிகழ்த்தி விட்டு, சர்வ சாதாரணமாக தப்பி போனது எப்படி? சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நொடி, ராணுவம் அங்கு உடனடியாக வந்ததும். சிங்கள அரசு உடனடியாக புலிகள் மீது பழியை சுமத்தி அவசர அவசரமாக அதை வைத்து கட்டமைத்த போலி கதைகள் பற்றியும் விலாவரியாக இன்னொரு பதிவில் பதிவிடுகிறேன். 
ஆனால் அதற்கு முன், காத்தான்குடி படுகொலை நடக்க முன், 

இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், காத்தான்குடி சம்பவத்திற்கு முன்னரான மூன்று மாத காலப்பகுதிக்குள், ஈழம் கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும், ஜிஹாத் குழுவினரும், இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன், தமிழர்களுக்கு எதிராக 39க்கும் மேற்பட்ட படுகொலைகளையும் கிராமிய அழிப்புகளையும் நிகழத்தியிருக்கிறார்கள்.. அதில் முஸ்லிம் ஊர்காவல் படையும், சிங்கள ராணுவமும் இணைந்து செய்த சில (தரவுகளுடன் ஆவணப்படுத்தப்பட்ட) படுகொலைகளின் பட்டியலை இங்கே பதிவிடுகிறேன். 

நீலாவணை படுகொலை -21/06/1990- நீலாவணையில் 25 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 14 கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 

கல்முனை எரியூட்டல்/ நகர் படுகொலை 21/06/1990
கல்முனை நகரில் 40 தமிழர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டனர் 
கல்முனை 1ஆம் 2ஆம் குறிச்சிகளில் 340 வீடுகள், பாண்டிருப்பில் 210 வீடுகள், நற்பிட்டி முனையில் 35 வீடுகள் சேனைக்குடியிருப்பில் 20 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. 

கல்முனை நகரில் 36 பலசரக்கு கடைகளையும் 10 நகை கடைகளையும் கொள்ளையடித்த பின் சேதப்படுத்தினர். 

பாண்டிருப்பில் 80 தமிழர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கல்முனையில் உள்ள தமிழர்களின் கடைகளுக்குள் போட்டு எரிக்கப்பட்டனர். 

இவர்களைத்தேடி இராணுவ முகாமுக்குச் சென்ற 60 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

பாத்திமா நகர் அகதி முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட 90 பொது மக்கள் கல்முனை நகரில் எரிக்கப்பட்டனர்.

பொத்துவில் படுகொலைகள்-

19/06/1990இல் 85 கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. 16 பேர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர் 

20/06/1990 இல் 1000 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டன.

 ஆலையடி வேம்பில் படுகொலைகள்- 26/06/1990- ஆலையடி வேம்பில் படுகொலைகள் -ஆலையடி வேம்பில் வைத்து 5 பொது மக்கள் கொல்லப்பட்டனர்


27/06/1990- வீரமுனையில் 360 வீடுகள் எரிக்கப்பட்டன, 69 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
 
மல்வத்தை கிராமிய அழிப்பு -27/06/1990- மல்வத்தை, மல்லிகைத்தீவு வளத்தாப்பிட்டி போன்ற கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன.
மல்வத்தையில் 170 வீடுகளும், மல்லிகைத்தீவில் 35 வீடுகளும், வளத்தாப்பிட்டியில் 115 வீடுகளும் கொள்ளை அடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன 

4ஆம் காலனி கிராமிய அழிப்பு - 27/06/1990- 4ஆம் காலனி என்ற கிராமம் முற்றாக அழிக்கப்பட்டது, 35 தமிழர்கள் சுடப்பட்டனர். 280 வீடுகள் எரிக்கப்பட்டன.

அக்கரைப்பற்று படுகொலைகள் -24/06/1990-03/07/1990
24/06/1990- 35 தமிழர்கள் கொல்லப்பட்டனர் 
25/06/1990- 16 தமிழர்கள் கொல்லப்பட்டனர்
28/06/1990-10 தமிழர்கள் கொல்லப்பட்டனர் 

03/07/1990-20/07/1990 வரை 103 தமிழர்கள் கொல்லப்பட்டனர் 1529 வீடுகள் சேதமாக்கப்பட்டன 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டன 20 கடைகளும், 2 மில்லும் எரிக்கப்பட்டன 
 
கோமாரி படுகொலை- 20/06/1990- கோமாரியில் 15 வீடுகளும் 2 கடைகளும் கொள்ளை அடிக்கப்பட்டன. 3 இளைஞர்கள்கள் கொல்லப்பட்டனர்.

21/06/1990- 20 தமிழர்கள் சுடப்பட்டனர், பின் வீரமுனையில் கைது செய்யப்பட்ட 90 தமிழர்கள் சம்மாந்துறை சந்தியில் வைத்து எரிக்கப்பட்டனர். 60 வீடுகள் எரிக்கப்பட்டன.

சம்மாந்துறை படுகொலை-25/06/1990- சம்மாந்துறையில் 80 தமிழ் மக்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் 


27/06/1990- திருக்கோயில் படுகொலை- திருக்கோயிலில் 25 இளைஞர்கள் இரகசியமாக கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

லகுகல காட்டுப் படுகொலை- 28/06/1990 இல் லகுகல காட்டில் அகதிகளாக இருந்த 25 இளைஞர்கள் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர்.

பொத்துவில் காவல்துறை படுகொலை -29/06/1990 பொத்துவில் காவல்த்துறை நிலையம் திறக்கப்பட்டது, 

▪️30-06-1990இல் இருந்து 25/07/1990 வரை 75 பேர் வரை கொலை செய்யப்பட்டனர் 


 சவளக்கடை படுகொலை 30/06/1990- சவளக்கடையில் 6 தமிழர்கள் கொல்லப்பட்டனர், 25 வீடுகள் எரிக்கப்பட்டன 

01/07/1990- சம்மாந்துறையில் 52 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 40 வீடுகள் எரிக்கப்பட்டன.  
சொறிக்கல்முனையில் 25 வீடுகள் எரிக்கப்பட்டன. 3 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். 

03/07/1990 சுற்றிவளைக்கப்பட்டு பாண்டியூரன் உட்பட 65 பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் 

நிந்தாவூர் முருகன் கோவில் படுகொலை 
08/07/1990- 89 தமிழர்கள் நிந்தாவூர் முருகன் ஆலயத்தில் வைத்து சுடப்பட்டு ஆலயத்துள் போட்டு எரிக்கப்பட்டுள்ளனர் 

08/07/1990- சாகாமப் பகுதியில் 15 வீடுகள் எரிக்கப்பட்டன 
09/07/1990- கஞ்சிக்குடியாறு, தங்கவேலாயுதபுரத்தில் 150 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. 10 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2000க்கு மேற்பட்ட ஆடுகள் மாடுகள் பிடித்துச் செல்லப்பட்டன.

28/07/1990- மீண்டும் கல்முனையையும், பாண்டிருப்பையும் சுற்றிவளைத்து 35 தமிழர்கள் சுட்டு கொன்றனர். 
இந்த 35 பேரும் கல்முனை நகரில் கடை வைத்திருந்த தமிழர்கள் ஆவர்.

சம்மாந்துறை 
வீரமுனையில் கைது செய்யப்பட்ட 40 தமிழர்கள் சம்மாந்துறை காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீதிகளில் எரிக்கப்பட்டனர்.

28/07/1990-கோமாரி அகதிகள் முகாமில் இருந்து 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

சித்தாண்டி படுகொலைகள் 20,27.07.1990 -137 தமிழர்கள் கொல்லப்பட்டனர் 

02/08/1990 அட்டவவள்ளத்தில் 40 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். 5 பேர் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். வயலில் அருவி வெட்ட சென்ற 7 பேர் கொல்லப்பட்டனர்.

02/08/1990 வரை காரைதீவு கிராமத்தில் 108 தமிழர்கள் கொல்லப்பட்டனர் 

01/08/1990- பொத்துவில் அகதி முகாம் சுற்றிவளைக்கப்பட்டு 200பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 100 பேர் சுடப்பட்டனர். 
02/08/1990 மேலும் இரு தமிழர்கள் கொல்லப்பட்டனர் 


இந்த தாக்குதல்கள் அனைத்தையும் முஸ்லிம் ஊர்காவல் படை/ஆயுததாரிகளும் சிங்கள ராணுவமும் சேர்ந்து செய்தது. 

இது வெறும் காத்தான்குடி படுகொலைக்கு முன் நடந்த படுகொலைகள் மட்டும் தான். அதன் பின்னர் தமிழர்களுக்கு எதிராக நடந்த படுகொலைகளின் பட்டியல் இதை விட பெரிது. 
இங்கே காத்தான்குடியை தமிழர்களுக்கு எதிரான ஒரு அடையாளமாக மாற்றியவர்கள், கால காலமாக காத்தான்குடி எப்படி முஸ்லிம் ஊர்காவல் படை, ஜிகாத் குழு.. ஏன் ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமாக இருந்த சஹ்ரான் குழு வரை அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்தது என்ற வரலாரை மூடி மறைக்கிறார்கள் என்றும் கேட்டு சொல்லுங்கள். 

-Mr. பழுவேட்டரையர்.
05/08/2026

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

The Story of Veeramunai: How Muslim Home Guards Carried Out the Largest Massacre of Tamils in the East!

Nestled in the Ampara District of Sri Lanka, Veeramunai is a Tamil-majority village that forms part of the Eastern Province of Sri Lanka. The Eastern Province is an integral region of the Tamil homeland. For generations, this land has held deep cultural and strategic significance for Tamils. That said, the East is also a very diverse place and home to a large percentage of Tamil speaking Muslims who choose to identify themselves as a distinct group of people who consciously avoid the Tamil political and cultural identity. Successive Sinhala governments deliberately stirred tensions between Tamils and Muslims, weakening both communities and used the “Muslim factor” as a convenient pretext to sever the bond between the North and East. In this process, much of the Muslim leadership fell in line with the state’s agenda. This blog is part two of our series on Sri Lanka's Muslim Home Guard. To read Part 1 click here👇 MHG01-Kattankudy's War on Tamils https://www.mrpaluvets.com/2025/0...