Skip to main content

"NewsMinute ஷபீர நிம்மதியா வாழ விட மாட்டோம்"-திமுக R.S. பாரதியின் மகன் மிரட்டல்

வெள்ளத்தை,..

நீரின்றி
உணவின்றி 
பாலின்றி
உறக்கமின்றி
தவித்து கொண்டிருக்கும்
மக்களின் அவல நிலையை, மூடி மறைக்க கடுமையாக போராடி வருகிறது திமுகவின் IT wing.

வட சென்னை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்க,  வெள்ளத்தால் பாதிக்கப்படாத ஒரு இடத்தில் இருந்த புணூல் அணிந்த ஐயரின் மீது வெளிச்சத்தை பாய்ச்சி, "எல்லாம் ஷேமமாக இருக்கு"ன்னு சொல்ல வெச்சு, அதுவே மக்களின் கருத்து என்று விளம்பரப்படுத்தி கொண்டிருக்கிறது திராவிட ஊடகங்கள்.
இந்த கூட்டத்துக்கு மத்தியில், ஊடக அறத்தை கடைப்பிடித்து செயல்பட்டு வரும் ஊடகவியலாளர்களில் ஒருவரான NewsMinute ஊடகத்தை சேர்ந்த ஷபீர் அஹமத் தான் , கவனிப்பாரற்று கிடந்த வட சென்னை மக்களின் அவலத்தை ஊடகத்தில் முதல் முறையாக வெளிச்சம் போட்டு காட்டினார்.
அவரின் இந்த செயல், திமுகவினர் பக்கம் பக்கமாக எழுதி வந்த "சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது" கட்டுகதைகளை எல்லாம் பொய் என்று அம்பலப்படுத்தியது.

இதனால் கடுப்பான திமுக IT wing..
"மக்களுக்கு இந்த நேரத்தில் பால் எல்லாம் அவசியமா?
முழங்கால் வரை தானே தண்ணி நிற்குது, உங்களுக்கு எதுக்கு படகு"
என்றெல்லாம் அதிகார திமிரில் உளறி கொட்டியதை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இது போதாது என்று இன்னும் ஒரு படி மேலே போய் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் ஊடகவியளாலர் ஷீபர் அஹமதுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். நேற்று Twitter/X தளத்தில் நடந்த ஒரு Space உரையாடலில் பேசிய போது சாய் லட்சுமிகாந்த்,
"ஷபீர் போன்ற ஊடகவியலாளர்களை எல்லாம் நிம்மதியாக வாழவே விட கூடாது என்று" மிரட்டுகிறார். அப்படி எல்லாம் மிரட்ட கூடாது என்று அவரது தோழர்கள் அவரை தடுக்க முற்பட்ட போது. இல்லை நான் அப்படி தான் மிரட்டுவேன். இவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள் இல்லை, விபச்சாரிகள் என்று சொல்கிறார்.

இப்படி எல்லாம் பேசுவது ஆர். எஸ். பாரதியின் மகனுக்கு ஒரு முழு நேர தொழிலாகவே மாறியிருக்கிறது. தகப்பனின் பெயரை சொல்லி அரசியலில் தண்ட சோறு தின்னும் nepo kidகளில் ஒருவர் தான் இந்த ஆர். எஸ். பாரதியின் மகன். ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அப்பன் சொகுசில் சுகம் காணும் இவர்களிடம் இருந்தெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது தான்.. 

திமுக ஆட்சியில் இப்படி ஊடகவியலாளர்களை வெளிப்படையாக மிரட்டும் அளவுக்கு தான் நீதி நிர்வாகம் இருக்கிறது போல.

அரசுக்கு எதிராக ஒரு மீம் போட்டாலே அவசர அவசரமா கைது செய்யுற திமுகவின் சட்ட ஒழுங்கு. இதை அமைதியா வேடிக்கை பார்ப்பது ஏன்? இல்லை தொடர்ந்து வேடிக்கை தான் பார்க்க போகிறீர்கள் என்றால் ஆர் எஸ் பாரதியின் மகன் சொல்வது போல, திமுகவும் வேறு தொழில் பார்க்க போகலாம் தானே? ஆர்.எஸ்.பாரதியின் மகனிடம் அந்த வேலை வாய்ப்பு சார்ந்த யோசனைகளை கேட்டு பெறலாம்..

-Mr. பழுவேட்டரையர்.
9/12/23


Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...