Skip to main content

குஜராத் படுகொலையும்-கருணாநிதியும்! ஒரு Flash Back.

சமீபத்தில் அண்ணன் சீமான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. உடன்பிறப்புகளின் உலகத்தில் ஒவ்வொரு கிழமையும் இது தான் செய்தி. 30 secondsக்குள் எதையாவது வெட்டி ஒட்டி சரி ஒரு கிழமைக்கான தீவனத்தை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் அறிவாலயத்துக்கு வெளியே ஒதுங்கும் திமுகவின் ஊடகமுட்டாளர்களுக்கு தினம் ஒரு சர்ச்சையை உருவாக்கினால் தான் வயிறு நிரம்பும்.

அப்படிப்பட்டவர்கள் உருவாக்கிய புது சர்ச்சை தான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்ணன் சீமான் பேசிவிட்டார் என்ற இந்த புது புகார்.

அண்ணன் சீமானின் பேச்சானது, தொடர்ந்து பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக எனும் கூட்டத்துக்கு வாக்களிக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்கள் மீதான ஆதங்கம் தான்.

அந்த பேச்சின் தொடக்கத்தில்,
குஜராத் படுகொலையை, மோடி எனும் இந்துத்துவ பயங்கரவாதி நிகழ்த்திய போது, அதை கண்டிக்காது வேடிக்கை பார்த்து, பாஜகவை பல இடங்களில் காப்பாற்றும் வேலையையும் செய்த திமுக மீதான விமர்சனம் மற்றும் அதன் துரோக வரலாற்றின் அம்பலப்படுத்தலோடும் தான் ஆரம்பிக்கிறது. 

ஆதாரம்:

திமுகவினர் இன்று மும்முரமாக பரப்பும் அண்ணன் சீமானின் 30 second வீடியோவில் அவர் திமுகவை அம்பலப்படுத்திய பேச்சு இருக்காது.
குஜராத் படுகொலைக்கு துணை நின்ற துரோகத்தை பற்றி பேசாது கடக்கவே, சாத்தானை பிடித்து தொங்கும் இந்த புது சர்ச்சையை உடன்பிறப்புகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

குஜராத் படுகொலையை பற்றி ஊடகவியலாளர் மணி ஒரு முறை கருணாநிதியை நோக்கி கேள்வி எழுப்பிய போது, "அது இன்னொரு மாநிலத்தின் உள் விவகாரம் அதில் நாம் தலையிட கூடாது" என்று சொன்னவர் தான் கருணாநிதி.

அது மட்டுமா? அன்று குஜராத் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து, பாஜக அரசையே ஆதரித்து ஓட்டளிப்போம் என்று கூட கருணாநிதி வெளிப்படையாக சொல்லியிருந்தார்.

ஆதாரம்: 
அன்று உலகெங்கிலும் இருந்து குஜராத் கலவரத்துக்கு எதிராக கண்டனங்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் கும்பகோணத்தில் ஒரு மேடையில் கருணாநிதி

"தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் கலவரம் நடந்திருப்பது மிக வேதனையான விஷயம்.ஆனால் இந்தக் கலவரத்தை யாரும் அரசியலாக்காதீர்கள்" என்று மீண்டும் கலவரத்துக்கு எதிரான மக்களின் கண்டனங்களை கூட கொச்சைப்படுத்தி பேசியவர் தான் கருணாநிதி.


இவ்வளவு ஏன்? 2013இல் நரேந்திர மோடி எனும் அந்த படுகொலையாளன் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருந்த போது, அதற்கு எதிராக ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் திமுகவினரின் கையொப்பமும் இருக்கிறது என்ற செய்தி கேட்டவுடன், உடனடியாக பதறிப் போய், மோடிக்கு எதிராக கையெழுத்திட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர் தான் இந்த கருணாநிதி.

முரசொலி மாறன் தரகர் வேலை பார்த்து, தனக்கும், ஆ.ராசா மற்றும் பாலுவுக்கு மத்தியில் பதவியை பெற்று, கட்டிய பாஜக-திமுக கூட்டணியை, அன்று குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் பிணங்களின் மேல் நின்று காத்த துரோகி கருணாநிதியின் இந்த துரோகத்தை..... அண்ணன் சீமான், ஐயா பழனி பாபா போல, தொடர்ந்து மேடைக்கு மேடை அம்பலப்படுத்தி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாததால், நாளுக்கொரு சர்ச்சையோடும், புது கதைகளோடும், 30 second விடியோக்களோடும் எல்லோருடைய whatsapp வாசலிலும் காத்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள். ஐயோ பரிதாபம்!

கால காலமாக இப்படி தான் திமுக தமிழர்களை ஏமாற்றி வருகிறது. இனியும் அது நடக்காது. இது உங்க தாத்தா காலத்து திமுகவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் தமிழர்கள் உங்கள் தாத்தா காலத்து தமிழர்கள் இல்லை என்பதை நினைவில் வைத்திருங்கள்.

-Mr பழுவேட்டரையர்
5/8/2023


Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற