Skip to main content

தமிழ் மொழி- நாகரிகத்தின் மொழி!

3000, 4000 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்று சொல்லும் தந்தை பெரியாரின் கருத்து, அறிவியலுக்கு முரணான, Civilisation/நாகரிகத்தின் தோற்றம் பற்றிய புரிதலற்ற பிதற்றலாக தான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்வது ஒரு வித திராவிட மூடநம்பிக்கை.

அறிவியலின் அடிப்படையில்,
மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்க போனால், 
காடுகளில் வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதர்கள், பெரியாரின் மொழியில் சொல்லப்போனால் "காட்டுமிராண்டிகள்", 
ஒரு நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அங்கே கூடி குடியிருந்து , கட்டமைப்புகள் உருவாக்கி, ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மொழி வளர்த்து, விவசாயம் செய்தி, கால்நடைகள் வளர்த்து, ஆவணப்படுத்தல், அறிவு கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் கூட்டமே நாகரிகமாக அடையாளப்படுகிறார்கள். 

இங்கே காட்டுமிராண்டியையும், நாகரிகத்தையும் வேறுப்படுத்தும் விடயங்களில் மொழி முக்கியமான இடத்தில் இருக்கிறது.

எழுத்து, பேச்சு, இலக்கணம், என வளர்ச்சி அடைந்த மொழி - நாகரிகத்தின் அடையாளமாக, அடிநாதமாக இருக்கிறது. 

காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனிதர்கள், தமிழோடு சேர்ந்து பரிணாமித்து நாகரிகத்தின் மனிதர்களாக, தமிழர்களாக அடையாளப்படுகிறார்கள். 

இங்கே காட்டுமிராண்டியை நாகரிக மனிதனாக மாற்றியது தமிழ் என்று கூட சொல்லலாம். 

அதனால் தமிழ்! நாகரிக மனிதனின் மொழியாக இருக்கிறது. !
நாகரிகத்தை உருவாக்கிய மொழியாக இருக்கிறது! ஆகையினால் தமிழ், 
தொன்மை மிக்க நாகரிகத்தின் முதன்மை அடையாளமாக இருக்கிறது! 

அதை காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொல்வது, மொழியின் பரிணாம வளர்ச்சியை பற்றிய, நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிய புரிதலற்ற பேச்சாகவே பார்க்க வேண்டியதாக இருக்கு. 

அறிவியலுக்கு முரணனான நிறைய கருத்துக்களை பெரியார் பல இடங்களில் சொல்லிவிட்டு செல்கிறார். அதில் ஒன்று தான் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்ற அவரது கருத்தும்.

அந்த கருத்தை இன்று வரை ஆழமாக நம்பி பரப்பும் திராவிடர்கள், மூடர்களாகவும், மூட நம்பிக்கை கொண்டவர்களாகவும் தான் தென்படுகிறார்கள்.    
-Mr. பழுவேட்டரையர் 

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...