Skip to main content

கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் சோக கதை.

கருணாநிதியின் சுயநலத்தால் வீழ்ந்த அவர் மூத்த மகன் மு.க.முத்துவை பற்றி நீங்கள் கேள்விப்பட்டத்துண்டா ?
ஆரம்ப காலம் தொட்டே கருணாநிதிக்கு மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு ஒரு பெரிய பிரச்சனையாகவே இருந்திருக்கிறது.

திமுகவின் வெற்றிகளுக்கு மக்கள் திலகத்தின் திரை பிரபலம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அறிஞர் அண்ணாவை எளிய மக்களின் பார்வைக்கு எடுத்து சென்றது மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் என்று சொன்னால், அது மிகையாகாது. 

கருணாநிதியால் மக்கள் திலகத்தின் அந்த புகழை எட்ட முடியவில்லை. மக்கள் திலகத்தின் ஆதரவோடு முதலவரான பின்னரும் கருணாநிதியால் மக்கள் திலகத்தின் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

மக்கள் திலகம் திரைப்படங்களில் நடிப்பதினால் தான் இந்த புகழை எட்டியிருக்கிறார், அதனால் அவருக்கு போட்டியாக ஒருவரை திரைத்துறையில் இறக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் கருணாநிதி.

அதற்கான சிறந்த வேட்பாளரை வேறெங்கும் தேடாமல், குடும்பத்துக்குள்ளேயே தேடி, தன் முதல் மகனான முக முத்துவை தனது அதிகாரத்தை பயன்படுத்தி திரையுலகில் களமிறக்கினார் கருணாநிதி. 

கருணாநிதியின் ஆரம்ப கால ஆட்சியின் போது, கருணாநிதியின் ஆட்சி அதிகார தயவோடு, முத்து 7 படங்களில் நடித்தார்.

தனிப்பட்ட முறையில் MGRஇன் ரசிகராக இருந்த முத்து, தந்தையின் கட்டாயத்தின் பெயரில் நடிகரானார், நல்ல நடிகராக வலம் வர வேண்டியவரை, MGRஐ வீழ்த்த வேண்டும் என்ற வெறியில் நாசமாக்கியது திமுக.
கருணாநிதி முதலமைச்சரான முதல் termஇல் அமுல்படுத்திய முதல் project முத்து தான். MGRஐ எப்படியாவது ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காக மற்ற முதலமைச்சர் கடமைகளை மறந்துவிட்டு தானே தனது மகனின் முதல் படத்தை எழுதி தயாரித்தார். அப்படியாக 7 படங்கள் வரிசையாக அவர் ஆட்சிக்காலத்தில் வந்தது.
ஆனால் MGRஐ வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? கருணாநிதியின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது, மு க முத்துவின் திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கேலிக்குள்ளானது. கருணாநிதி எதிர்பார்த்த அளவுக்கு முத்துவால் திரையுலகில் சாதிக்க முடியவில்லை. வன்மத்தை மட்டும் வைத்து கொண்டு தந்தை மகன் கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை.
சிறு வயதில் தாயை இழந்த முத்துவுக்கு தந்தையின் பாசமும் பெரிதாக கிடைக்கவில்லை. எல்லா வெளிச்சமும் ஒரே நேரத்தில் தந்தை முதலமைச்சரானவுடன் கிடைத்தது. இந்த திடீர் மாற்றங்களை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. திரையுலகிலும் தாக்கு பிடிக்க முடியவில்லை, இறுதியில் அவர் போதைக்கு அடிமையானார்.

தனது திட்டத்துக்கு முத்து சரிப்பட்டு வரமாட்டார் என்று தெரிந்தவுடன் கலைஞர், தன் சொந்த மகனையே புறக்கணிக்க ஆரம்பித்தார்.. தந்தைக்கும் மகனுக்கும் விரிசல் ஏற்பட்டது, மக்கள் திலகத்தை அழிக்க புறப்பட்ட கூட்டணி, தனக்குள் முரண்பட்டு நின்றது.

தந்தை, மற்றும் கட்சியால் ஓரங்கட்டபட்ட முத்து இறுதியாக மக்கள் திலகத்தின் நட்பை பெற முயற்சித்தார், கருணாநிதியின் சொந்த மகனே கடைசியில் MGRஐ தான் நம்பினார். இப்படி எல்லா சதிகளையும் முறியடித்து தான் மக்கள் திலகம் முடி சூடினார்.

எம் ஜி ஆறும் அவரை பல முறை பல சிக்கல்களில் இருந்து காப்பாற்றி உதவியிருக்கிறார். கருணாநிதியின் மகன் என்று தெரிந்தும், தன்னை அழிக்க களமிறக்கப்பட்டவன் என்று அறிந்தும், மு.க.முத்துவுக்கு உதவினார் மக்கள் திலகம். அங்க நிற்கிறார் அந்த மனுஷன்.! 
பொறாமையும் வயித்தெரிச்சலும் இருக்கலாம், ஆனா சொந்த மகனையே பயன்படுத்தி வன்மம் தீர்க்க முயற்சிப்பது எல்லாம், மிகவும் கேவலமான அரசியல். தன் சுயலாபத்துக்காக தன் மகனின் வாழ்க்கையை கெடுத்தார் கருணாநிதி என்ற பழி மட்டும் தான் அவருக்கு மிஞ்சியது. 

-Mr.பழுவேட்டரையர்




Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற