Skip to main content

ஈழ மலையக உறவு

ஈழத்தில் சாதியத்தின் நிலை, தீண்டாமையின் நிலை எப்படி இருக்கிறது. போருக்கு முன் சூழல் எப்படி, போருக்கு பின் சூழல் எப்படி என்றெல்லாம் நிறைய விவாதங்கள் நடப்பதை காண கூடியதாக இருக்கிறது. 

இங்கே எல்லா விவாதங்களும் அவற்றை தொடுப்பவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு மற்றும் கருத்து நிலை சார்ந்த பற்றின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படுகிறதே தவிர, இதில் எங்கும் வரலாறு சரியான முறையில் பதியப்படுவதும்  இல்லை, பேசப்படுவதும் இல்லை. 

ஈழத்தில் உள்ள சாதிய கட்டமைப்புகள்,
மலையகத்தில் ஒரு வடிவத்திலும்,
தமிழீழத்தில் இன்னொரு வடிவத்திலும்,
சிங்களவர்கள் மத்தியில் இன்னொரு வடிவத்திலும் இருக்கிறது.

இந்த மூன்று மக்கள் கூட்டம் மத்தியிலும் உள்ள சாதி கட்டமைப்புகள் கூட ஒரே வடிவத்தில் இல்லை. சாதிய படிநிலைகளில் வித்தியாசம் உண்டு, சாதிய அடையாளங்களில் வித்தியாசங்கள் உண்டு, இவ்வாறாக நிலத்தின் அடிப்படையில் கட்டமைப்புகள் மாறுகின்றன. ஊருக்கு ஊர் கூட சில நேரங்களில் கட்டமைப்புகள் மாறுகிறது. 

வழக்கமா ஈழத்தில் உள்ள சாதியம் பற்றி பேசுபவர்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் சாதியம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க கடுமையாக முயற்சிக்கிறார்கள். இதன் பின்னால் இருக்கும் அரசியலை நாம் ஆராய வேண்டிய தேவை இருக்கிறது. 

தற்போதைய சூழலில் சாதிய கட்டமைப்புகள் சிங்கள தேசத்திலும் மலையகத்திலும் கூட தான்  வலுவாக இருக்கிறது. ஆனால் அதை பற்றிய உரையாடல்கள் இங்கு பெரும்பாலும் நடப்பதில்லை. தமிழர்களின் தாயக நிலமான தமிழீழத்திலும் சாதி எனும் கொடிய நோய் இருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் சிங்கள தேசத்தில் இருப்பது போன்று தமிழீழத்தில் சாதியம், இயல்பாக்கப்பட்ட ஒரு தேசிய குணாதிசயமாக இல்லை. மலையகத்தில் இன்றுவரை எம்மவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று பக்கம் பக்கமாக எழுதும் ஒரு கூட்டம், திட்டமிட்டே, தொழிற்சங்கங்களின் சாதியவாதத்தை மூடி மறைக்கின்றனர். 

அதனால் நேர்மையாக ஈழத்தில் சாதியத்தின் இன்றைய நிலை பற்றி நாம் அறிய வேண்டும் என்றால். எல்லா பக்கங்களையும் புரட்ட வேண்டிய தேவை இருக்கிறது. 

வரலாற்றில் எல்லா பக்கங்களையும் புரட்ட வேண்டிய தேவை இருக்கிறது.. 

எல்லாருடைய நோக்கங்களையம் நாம் ஆராய வேண்டிய தேவை இருக்கிறது. 

குறிப்பாக ஈழத்தில் தலித்திய கருத்தியலை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கும் கூட்டத்தின் நோக்கங்கள் உற்பட அனைத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இலக்கிய வட்டம், வாசகர் வட்டம் என்று குறுகிய வட்டங்கள் செய்யும் மூளை சலவைகளை, ஆதாரமற்ற சோடிப்புகளை பற்றியும் பேச வேண்டிய ஒரு தேவை இருக்கிறது.


இங்கே ஈழத்தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் இடையில் ஏதோ சண்டை இருப்பது போலவும், அதற்கு பின்னால் சாதிய கண்ணோட்டம் ஒன்று இருப்பது போலவும் ஒரு போலி பிம்பத்தை கட்டமைக்கவும் நிறையே பேர் பாடுபடுவதை காண கூடியதாக இருக்கு. 

மலையகத் தமிழர்களாகட்டும், ஈழத்தமிழர்களாகட்டும். கால காலமாக ஈழத்தில், தமிழர்கள், தமிழர்களாக இருக்கும் ஒரே காரணத்துக்காகவே சிங்கள பேரினவாத அரசால் ஒடுக்கபப்டுகிறார்கள், அழித்தொழிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த ஒடுக்குமுறையின் மீது கவனம் செலுத்தாமல், இல்லாத சண்டைகளை இருப்பது போல காட்ட முனையும் கூட்டத்தின் நோக்கம் அறிய வேண்டிய தேவை இருக்கிறது தானே ..

ஈழத்தின் அரசியல் வரலாற்றில், மலையகத் தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது ஈழத்தமிழர்கள் மட்டும் தான். மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்கான குரல்களும், போராட்டங்களும், சிங்கள மக்கள் மத்தியிலா எழுகிறது ? இல்லை முஸ்லீம் மக்கள் மத்தியில் இருந்தா எழுகிறது.? மலையகத்தில் தமிழர்கள் போராடினால், அவர்களுக்கான போராட்டம் தமிழீழத்திலும் நடக்கிறது. குடியுரிமை போராட்டம் தொடங்கி  அடிப்படை சமபள உரிமை போராட்டம் வரையில் அந்த ஒற்றுமை தொடர்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 

இன்று ஈழத்தமிழர்களின் முதன்மை கட்சியாக, ஈழத்தமிழர்களின் ஆதரவை பெற்ற பெரும் கட்சியாக இருக்கும் இலங்கை  தமிழரசு கட்சி, மலையக உறவுகளின் உரிமைக்காக குரல் கொடுத்து தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான். 


அந்தளவுக்கு பின்னி பிணைந்திருக்கிறது ஈழ மலையக உறவு.  

ஆனால் இதையெல்லாம் பற்றி ஆராயாமல், பேசாமல், வசதியாக இவ்வாறான வரலாற்று உறவுகளை  எல்லாம் இருட்டடிப்பு செய்து, இல்லா சிக்கல்களை உருவாக்க முயற்சிக்கும் கூட்டத்தின் உண்மையான நோக்கங்களை, அம்பலப்படுத்தி கொண்டே தான் நாம் நிறைய அரசியல் பேச வேண்டி இருக்கு. ஒவ்வொன்றாக இனி கதைக்க ஆரம்பிப்போம். ! 

தொடரும் ..

-Mr.பழுவேட்டரையர் 
23/05/2023

Comments

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக