Skip to main content

ஈழ மலையக உறவு

ஈழத்தில் சாதியத்தின் நிலை, தீண்டாமையின் நிலை எப்படி இருக்கிறது. போருக்கு முன் சூழல் எப்படி, போருக்கு பின் சூழல் எப்படி என்றெல்லாம் நிறைய விவாதங்கள் நடப்பதை காண கூடியதாக இருக்கிறது. 

இங்கே எல்லா விவாதங்களும் அவற்றை தொடுப்பவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு மற்றும் கருத்து நிலை சார்ந்த பற்றின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படுகிறதே தவிர, இதில் எங்கும் வரலாறு சரியான முறையில் பதியப்படுவதும்  இல்லை, பேசப்படுவதும் இல்லை. 

ஈழத்தில் உள்ள சாதிய கட்டமைப்புகள்,
மலையகத்தில் ஒரு வடிவத்திலும்,
தமிழீழத்தில் இன்னொரு வடிவத்திலும்,
சிங்களவர்கள் மத்தியில் இன்னொரு வடிவத்திலும் இருக்கிறது.

இந்த மூன்று மக்கள் கூட்டம் மத்தியிலும் உள்ள சாதி கட்டமைப்புகள் கூட ஒரே வடிவத்தில் இல்லை. சாதிய படிநிலைகளில் வித்தியாசம் உண்டு, சாதிய அடையாளங்களில் வித்தியாசங்கள் உண்டு, இவ்வாறாக நிலத்தின் அடிப்படையில் கட்டமைப்புகள் மாறுகின்றன. ஊருக்கு ஊர் கூட சில நேரங்களில் கட்டமைப்புகள் மாறுகிறது. 

வழக்கமா ஈழத்தில் உள்ள சாதியம் பற்றி பேசுபவர்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் சாதியம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க கடுமையாக முயற்சிக்கிறார்கள். இதன் பின்னால் இருக்கும் அரசியலை நாம் ஆராய வேண்டிய தேவை இருக்கிறது. 

தற்போதைய சூழலில் சாதிய கட்டமைப்புகள் சிங்கள தேசத்திலும் மலையகத்திலும் கூட தான்  வலுவாக இருக்கிறது. ஆனால் அதை பற்றிய உரையாடல்கள் இங்கு பெரும்பாலும் நடப்பதில்லை. தமிழர்களின் தாயக நிலமான தமிழீழத்திலும் சாதி எனும் கொடிய நோய் இருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் சிங்கள தேசத்தில் இருப்பது போன்று தமிழீழத்தில் சாதியம், இயல்பாக்கப்பட்ட ஒரு தேசிய குணாதிசயமாக இல்லை. மலையகத்தில் இன்றுவரை எம்மவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று பக்கம் பக்கமாக எழுதும் ஒரு கூட்டம், திட்டமிட்டே, தொழிற்சங்கங்களின் சாதியவாதத்தை மூடி மறைக்கின்றனர். 

அதனால் நேர்மையாக ஈழத்தில் சாதியத்தின் இன்றைய நிலை பற்றி நாம் அறிய வேண்டும் என்றால். எல்லா பக்கங்களையும் புரட்ட வேண்டிய தேவை இருக்கிறது. 

வரலாற்றில் எல்லா பக்கங்களையும் புரட்ட வேண்டிய தேவை இருக்கிறது.. 

எல்லாருடைய நோக்கங்களையம் நாம் ஆராய வேண்டிய தேவை இருக்கிறது. 

குறிப்பாக ஈழத்தில் தலித்திய கருத்தியலை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கும் கூட்டத்தின் நோக்கங்கள் உற்பட அனைத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இலக்கிய வட்டம், வாசகர் வட்டம் என்று குறுகிய வட்டங்கள் செய்யும் மூளை சலவைகளை, ஆதாரமற்ற சோடிப்புகளை பற்றியும் பேச வேண்டிய ஒரு தேவை இருக்கிறது.


இங்கே ஈழத்தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் இடையில் ஏதோ சண்டை இருப்பது போலவும், அதற்கு பின்னால் சாதிய கண்ணோட்டம் ஒன்று இருப்பது போலவும் ஒரு போலி பிம்பத்தை கட்டமைக்கவும் நிறையே பேர் பாடுபடுவதை காண கூடியதாக இருக்கு. 

மலையகத் தமிழர்களாகட்டும், ஈழத்தமிழர்களாகட்டும். கால காலமாக ஈழத்தில், தமிழர்கள், தமிழர்களாக இருக்கும் ஒரே காரணத்துக்காகவே சிங்கள பேரினவாத அரசால் ஒடுக்கபப்டுகிறார்கள், அழித்தொழிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த ஒடுக்குமுறையின் மீது கவனம் செலுத்தாமல், இல்லாத சண்டைகளை இருப்பது போல காட்ட முனையும் கூட்டத்தின் நோக்கம் அறிய வேண்டிய தேவை இருக்கிறது தானே ..

ஈழத்தின் அரசியல் வரலாற்றில், மலையகத் தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது ஈழத்தமிழர்கள் மட்டும் தான். மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்கான குரல்களும், போராட்டங்களும், சிங்கள மக்கள் மத்தியிலா எழுகிறது ? இல்லை முஸ்லீம் மக்கள் மத்தியில் இருந்தா எழுகிறது.? மலையகத்தில் தமிழர்கள் போராடினால், அவர்களுக்கான போராட்டம் தமிழீழத்திலும் நடக்கிறது. குடியுரிமை போராட்டம் தொடங்கி  அடிப்படை சமபள உரிமை போராட்டம் வரையில் அந்த ஒற்றுமை தொடர்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 

இன்று ஈழத்தமிழர்களின் முதன்மை கட்சியாக, ஈழத்தமிழர்களின் ஆதரவை பெற்ற பெரும் கட்சியாக இருக்கும் இலங்கை  தமிழரசு கட்சி, மலையக உறவுகளின் உரிமைக்காக குரல் கொடுத்து தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான். 


அந்தளவுக்கு பின்னி பிணைந்திருக்கிறது ஈழ மலையக உறவு.  

ஆனால் இதையெல்லாம் பற்றி ஆராயாமல், பேசாமல், வசதியாக இவ்வாறான வரலாற்று உறவுகளை  எல்லாம் இருட்டடிப்பு செய்து, இல்லா சிக்கல்களை உருவாக்க முயற்சிக்கும் கூட்டத்தின் உண்மையான நோக்கங்களை, அம்பலப்படுத்தி கொண்டே தான் நாம் நிறைய அரசியல் பேச வேண்டி இருக்கு. ஒவ்வொன்றாக இனி கதைக்க ஆரம்பிப்போம். ! 

தொடரும் ..

-Mr.பழுவேட்டரையர் 
23/05/2023

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற