Skip to main content

சஜித் பிரேமதாசா எனும் மகாதத்தி

முன்னொரு காலத்தில் தமிழ் மொழி உரிமைக்காக,
தனி சிங்கள சட்டத்துக்கு எதிராக போராடிய ஈழத்தமிழர்களின் மிக முக்கியமான ஒரு அற வழி போராட்டத்தின் களமாக இருந்த கொழும்பின் பிரபல கடற்கரை ஓரமான காலி முகத்திடல், கடந்த சில மாதங்களாக சிங்கள தேசத்தின் inconvenienced group of peopleஇன் தற்காலிக குடியிருப்பாக மாறி இருக்கிறது.

அந்த குடியிருப்பின் இருப்பால் சிங்கள அரசியல்வாதிகளின், குறிப்பாக ஆளும் கட்சியின் இருப்புகள், இருக்கைகள், இருக்கையை பற்றிக்கொண்ட அவர்கள் உடல் தசைகள் எல்லாம் தீ பிடித்து எரிந்தது.

சிங்கள தேசத்தில் நடந்த இந்த திடீர் கிளர்ச்சி, ராஜபக்ச குடும்பத்தையே சிவப்பு துண்ட காணோம், போட்டிருந்த ஜட்டிய காணோம் என்று ஓட வைத்திருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான இந்த கிளர்ச்சி, இந்த அசாதாரண சூழல் வேறொரு நாட்டில் நடந்திருந்தால், அது அந்த நாட்டின் எதிர்கட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். ஆனால் சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவோ கொஞ்சம் வித்தியாசமானவர்.
அவர் தனக்கு வாய்ப்பு வடிவில் எத்தனை வடை வந்தாலும், அதை கசக்கி, பிழிந்து தூக்கி வீசிவிட்டு வடை போச்சே என்று பின்னர் வருந்தும் பக்குவமுடைய ஒரு மகாதத்தி அரசியல்வாதி.

இப்படி அவர் சேகரித்து வைத்திருக்கும் அந்த மெய்கீர்த்திக்கு எந்த சேதாரமும் வராத வண்ணம், சஜித் திறம்பட செயல்பட்டு தன் கட்சிய சட்டப்படிக்கு, கவுத்து வைத்திருக்கிறார்.

ராஜபக்ச குடும்பம் ஓடி ஒளிந்திருந்து கொண்டிருந்த வேளையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து, அல்லது குறைந்த பட்சம் ராஜபக்ச கட்சியையாவது சுக்கு நூறாக உடைத்து சரி ஒரு தாக்கத்தை சஜித் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அதை எதையுமே அவர் செய்ததாக தெரியவில்லை.

அவர் பயன்படுத்தியிருக்க வேண்டிய வாய்ப்பை எல்லாம், கௌரவமாக நரி என்று அழைக்கப்படும் ரணில் பயன்படுத்தி கொண்டு, அவர் வீட்டு கூரைய பிச்சு கொண்டு வந்து விழுந்த பிரதமர் பதிவியை பயன்படுத்தி,  அதிபராகிவிட்டார்.

சஜித்தோ அவரது வலிமையை இரட்டிப்பாக அதிகரிக்க ஏதுவாக இருந்த சூழலை கெடுத்து கொண்டது மட்டுமல்லாமல், தன் கூடாரத்தில் இருந்த முக்கிய உறுப்பினர்களையும் ரணிலுக்கு பழி கொடுத்து விட்டு தெருவோர பிள்ளையார் போல குந்தி கொண்டிருக்கிறார்.

சிங்கள ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் நம்மில் யார் பெரிய இனவாதி என்ற போட்டி அடிக்கடி நடப்பது போல, நம்மில் யார் பெரிய மடையன் என்ற போட்டியும் இப்படி ஐக்கிய தேசிய கட்சிக்குள் அடிக்கடி நடக்கும். அந்த போட்டியிலும் ரணில் தோற்க தான் செய்கிறார்..என்ன செய்ய😂

இப்படி ஒன்றுக்கும் உதவாத சிங்கள தேசத்தின் தெரு ஒர பிள்ளையார் சஜித்துக்கு தான் தேங்காய் உடைப்பேன் என்று சொல்லிக்கொண்டு, சஜித்தின் கூடாரத்தை போய் சேர்ந்த்திருக்கிறது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு Sir இன் படை.

Sir இன் படையை பற்றியும், குறுக்கே உருண்டு வந்த டல்லஸ் அழக பெரும எனும் "யாருயா நீ" அரசியல்வாதி பற்றியும், இந்த மூவரும் குப்புற விழுந்த கதை பற்றியும் அடுத்த பகுதியில் பேசுகிறேன்.

-Mr. பழுவேட்டரையர்
24/7/2022

Comments

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக