Skip to main content

சஜித் பிரேமதாசா எனும் மகாதத்தி

முன்னொரு காலத்தில் தமிழ் மொழி உரிமைக்காக,
தனி சிங்கள சட்டத்துக்கு எதிராக போராடிய ஈழத்தமிழர்களின் மிக முக்கியமான ஒரு அற வழி போராட்டத்தின் களமாக இருந்த கொழும்பின் பிரபல கடற்கரை ஓரமான காலி முகத்திடல், கடந்த சில மாதங்களாக சிங்கள தேசத்தின் inconvenienced group of peopleஇன் தற்காலிக குடியிருப்பாக மாறி இருக்கிறது.

அந்த குடியிருப்பின் இருப்பால் சிங்கள அரசியல்வாதிகளின், குறிப்பாக ஆளும் கட்சியின் இருப்புகள், இருக்கைகள், இருக்கையை பற்றிக்கொண்ட அவர்கள் உடல் தசைகள் எல்லாம் தீ பிடித்து எரிந்தது.

சிங்கள தேசத்தில் நடந்த இந்த திடீர் கிளர்ச்சி, ராஜபக்ச குடும்பத்தையே சிவப்பு துண்ட காணோம், போட்டிருந்த ஜட்டிய காணோம் என்று ஓட வைத்திருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான இந்த கிளர்ச்சி, இந்த அசாதாரண சூழல் வேறொரு நாட்டில் நடந்திருந்தால், அது அந்த நாட்டின் எதிர்கட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். ஆனால் சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவோ கொஞ்சம் வித்தியாசமானவர்.
அவர் தனக்கு வாய்ப்பு வடிவில் எத்தனை வடை வந்தாலும், அதை கசக்கி, பிழிந்து தூக்கி வீசிவிட்டு வடை போச்சே என்று பின்னர் வருந்தும் பக்குவமுடைய ஒரு மகாதத்தி அரசியல்வாதி.

இப்படி அவர் சேகரித்து வைத்திருக்கும் அந்த மெய்கீர்த்திக்கு எந்த சேதாரமும் வராத வண்ணம், சஜித் திறம்பட செயல்பட்டு தன் கட்சிய சட்டப்படிக்கு, கவுத்து வைத்திருக்கிறார்.

ராஜபக்ச குடும்பம் ஓடி ஒளிந்திருந்து கொண்டிருந்த வேளையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து, அல்லது குறைந்த பட்சம் ராஜபக்ச கட்சியையாவது சுக்கு நூறாக உடைத்து சரி ஒரு தாக்கத்தை சஜித் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அதை எதையுமே அவர் செய்ததாக தெரியவில்லை.

அவர் பயன்படுத்தியிருக்க வேண்டிய வாய்ப்பை எல்லாம், கௌரவமாக நரி என்று அழைக்கப்படும் ரணில் பயன்படுத்தி கொண்டு, அவர் வீட்டு கூரைய பிச்சு கொண்டு வந்து விழுந்த பிரதமர் பதிவியை பயன்படுத்தி,  அதிபராகிவிட்டார்.

சஜித்தோ அவரது வலிமையை இரட்டிப்பாக அதிகரிக்க ஏதுவாக இருந்த சூழலை கெடுத்து கொண்டது மட்டுமல்லாமல், தன் கூடாரத்தில் இருந்த முக்கிய உறுப்பினர்களையும் ரணிலுக்கு பழி கொடுத்து விட்டு தெருவோர பிள்ளையார் போல குந்தி கொண்டிருக்கிறார்.

சிங்கள ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் நம்மில் யார் பெரிய இனவாதி என்ற போட்டி அடிக்கடி நடப்பது போல, நம்மில் யார் பெரிய மடையன் என்ற போட்டியும் இப்படி ஐக்கிய தேசிய கட்சிக்குள் அடிக்கடி நடக்கும். அந்த போட்டியிலும் ரணில் தோற்க தான் செய்கிறார்..என்ன செய்ய😂

இப்படி ஒன்றுக்கும் உதவாத சிங்கள தேசத்தின் தெரு ஒர பிள்ளையார் சஜித்துக்கு தான் தேங்காய் உடைப்பேன் என்று சொல்லிக்கொண்டு, சஜித்தின் கூடாரத்தை போய் சேர்ந்த்திருக்கிறது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு Sir இன் படை.

Sir இன் படையை பற்றியும், குறுக்கே உருண்டு வந்த டல்லஸ் அழக பெரும எனும் "யாருயா நீ" அரசியல்வாதி பற்றியும், இந்த மூவரும் குப்புற விழுந்த கதை பற்றியும் அடுத்த பகுதியில் பேசுகிறேன்.

-Mr. பழுவேட்டரையர்
24/7/2022

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...