Skip to main content

நாபாவின் 'மண்டையன் குழு'

ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழ விடுதலைக்காக போராட உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள், காலப்போக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிறளுக்கேற்ப செயற்பட ஆரம்பித்த வரலாறு யாவரும் அறிந்ததே. அதில் விடுதலை இயக்கங்களாக ஆரம்பித்து, பின்னர் இந்திய/இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறிய இயக்கங்களில் பிரதானமான இயக்கங்கள் PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் தான்.

ஒட்டுக்குழுக்களாக மாறிய பின் இந்த இயக்கங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களுக்குள் பல வன்முறை குழுக்களாக அவர்கள் பிரிந்து செயற்பட்டார்கள். இந்த குழுக்கள் இந்திய/இலங்கை ராணுவங்களுடன் இணைந்து செயற்பட்டன.

அப்படிப்பட்ட குழுக்களில் ஒரு குழு தான் EPRLF பதம்நாபாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கிய "மண்டையன் குழு".
இந்திய அமைதி காக்கும் படையின் வருகையின் பின்னர் மீண்டும் செயல்பட ஆரம்பித்த EPRLF, தமிழ் மக்கள் மீது ஒரு வெறுப்புடனும் வன்மத்துடனும் தான் செயற்பட்டு வந்தது. மக்களுக்கு எதிரான அவர்களின் கொடூர தாக்குதல்களே இதற்கு சிறந்த சாட்சியாக இருந்தது. (இதை பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில் விரைவில் பேசுவோம்.)

'மண்டையன் குழு' என்ற குழு 1988-89 பகுதியில் பத்மநாபா மற்றும், இந்திய ராணுவத்தின் கட்டளைகளின் பெயரில் படுகொலைகளை நிகழ்த்த உருவாக்கப்பட்ட ஒரு "ரகசிய" குழு.

'மண்டையில் போடுதல்' என்ற சொற்பதத்தை தழுவி மண்டையன் குழு என்ற அந்த குழு அழைக்கப்பட்டது.. பிற்காலத்தில் "மண்டை சரியில்லாத" கூட்டம் என்று மக்களால் அவர்கள் அழைக்கப்பட்டது வரலாறு.

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக மண்டையன் குழுவால், புலிகள் இயக்க ஆதரவாளர்கள் சிலர் வெட்டி கொல்லப்பட்டார்கள். அந்த கொடுஞ்செயல் ஊடாக தான் இந்த குழு அதன் வருகையை ஈழத்துக்கு அறிவித்து கொண்டது.

இந்த குழுவில் உள்ளவர்கள் பத்மநாபாவிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் தங்கள் வீர சாகசங்களை Reylonds Pen, மற்றும் சோடா பொத்தில்கள் ஊடாக தான் வெளிப்படுத்துவார்கள். அப்பாவி மக்களை இவர்கள் கொலை செய்யும் விதம் கொடூரமானது. இவர்களை sadist psycho killers என்று கூட அழைக்கலாம்.


Reynolds Penஅ மக்களின் காதுகளில் சொருகி விட்டு, காதை பொத்தி சாத்தி, கொலை செய்வது இவர்களின் ஒரு Style. பேனையை கையில் ஏந்த, கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் மத்தியில், எழுதும் பேனாவை வைத்து எப்படி கொலை செய்யலாம் என்று சிந்தித்த அறிஞர்கள் தான் இந்த நாபாவின் தோழர்கள்.,

ஈழத்தில் 'தோழர்கள்' என்ற சொல்லை, மக்கள் மத்தியில் ஒரு வெறுக்கத்தக்க சொல்லாக மாற்றிய பெருமையும் இந்த கூட்டத்திற்கே சேரும்.


ஒரு முறை, ஒரு இளைஞனின் உடலுக்குள்(பின் வழி ஊடாக) ஒரு Soda போத்தில ஏத்தி கொலை செய்து வீசிய சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மண்டையன் குழுவின் தலைமை செயலகமாக அசோகா Hotel இருந்தது. அந்த Hotelஇன் Septic tankஇல் இருந்து கூட நிறைய மண்டை ஓடுகள் எடுக்கப்பட்டன

பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் பேராசிரியர்
ராஜினி திராணகமவின் படுகொலை செய்ததும் மண்டையன் குழுவை சேர்ந்த கார்த்திக்கும், தோமசும் தான்.

விடுதலை புலிகளை போர்க்களத்தில் எதிர்கொள்ள முடியாது, கடைசியில் இந்திய உளவுத்துறையின் கூலிப்படையாக மாறிய EPRLF, எந்த மக்களுக்காக போராடுகிறோம் என்று ஆரம்பித்தார்களோ, கடைசியில் அந்த மக்களையே கொன்று குவிக்கும் ஒரு கொலைக்கார கூட்டமாக மாறினார்கள்..  

-Mr. பழுவேட்டரையர்
7/3/2022

Comments

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக