Skip to main content

நாபாவின் 'மண்டையன் குழு'

ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழ விடுதலைக்காக போராட உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள், காலப்போக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிறளுக்கேற்ப செயற்பட ஆரம்பித்த வரலாறு யாவரும் அறிந்ததே. அதில் விடுதலை இயக்கங்களாக ஆரம்பித்து, பின்னர் இந்திய/இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறிய இயக்கங்களில் பிரதானமான இயக்கங்கள் PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் தான்.

ஒட்டுக்குழுக்களாக மாறிய பின் இந்த இயக்கங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களுக்குள் பல வன்முறை குழுக்களாக அவர்கள் பிரிந்து செயற்பட்டார்கள். இந்த குழுக்கள் இந்திய/இலங்கை ராணுவங்களுடன் இணைந்து செயற்பட்டன.

அப்படிப்பட்ட குழுக்களில் ஒரு குழு தான் EPRLF பதம்நாபாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கிய "மண்டையன் குழு".
இந்திய அமைதி காக்கும் படையின் வருகையின் பின்னர் மீண்டும் செயல்பட ஆரம்பித்த EPRLF, தமிழ் மக்கள் மீது ஒரு வெறுப்புடனும் வன்மத்துடனும் தான் செயற்பட்டு வந்தது. மக்களுக்கு எதிரான அவர்களின் கொடூர தாக்குதல்களே இதற்கு சிறந்த சாட்சியாக இருந்தது. (இதை பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில் விரைவில் பேசுவோம்.)

'மண்டையன் குழு' என்ற குழு 1988-89 பகுதியில் பத்மநாபா மற்றும், இந்திய ராணுவத்தின் கட்டளைகளின் பெயரில் படுகொலைகளை நிகழ்த்த உருவாக்கப்பட்ட ஒரு "ரகசிய" குழு.

'மண்டையில் போடுதல்' என்ற சொற்பதத்தை தழுவி மண்டையன் குழு என்ற அந்த குழு அழைக்கப்பட்டது.. பிற்காலத்தில் "மண்டை சரியில்லாத" கூட்டம் என்று மக்களால் அவர்கள் அழைக்கப்பட்டது வரலாறு.

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக மண்டையன் குழுவால், புலிகள் இயக்க ஆதரவாளர்கள் சிலர் வெட்டி கொல்லப்பட்டார்கள். அந்த கொடுஞ்செயல் ஊடாக தான் இந்த குழு அதன் வருகையை ஈழத்துக்கு அறிவித்து கொண்டது.

இந்த குழுவில் உள்ளவர்கள் பத்மநாபாவிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் தங்கள் வீர சாகசங்களை Reylonds Pen, மற்றும் சோடா பொத்தில்கள் ஊடாக தான் வெளிப்படுத்துவார்கள். அப்பாவி மக்களை இவர்கள் கொலை செய்யும் விதம் கொடூரமானது. இவர்களை sadist psycho killers என்று கூட அழைக்கலாம்.


Reynolds Penஅ மக்களின் காதுகளில் சொருகி விட்டு, காதை பொத்தி சாத்தி, கொலை செய்வது இவர்களின் ஒரு Style. பேனையை கையில் ஏந்த, கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் மத்தியில், எழுதும் பேனாவை வைத்து எப்படி கொலை செய்யலாம் என்று சிந்தித்த அறிஞர்கள் தான் இந்த நாபாவின் தோழர்கள்.,

ஈழத்தில் 'தோழர்கள்' என்ற சொல்லை, மக்கள் மத்தியில் ஒரு வெறுக்கத்தக்க சொல்லாக மாற்றிய பெருமையும் இந்த கூட்டத்திற்கே சேரும்.


ஒரு முறை, ஒரு இளைஞனின் உடலுக்குள்(பின் வழி ஊடாக) ஒரு Soda போத்தில ஏத்தி கொலை செய்து வீசிய சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மண்டையன் குழுவின் தலைமை செயலகமாக அசோகா Hotel இருந்தது. அந்த Hotelஇன் Septic tankஇல் இருந்து கூட நிறைய மண்டை ஓடுகள் எடுக்கப்பட்டன

பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் பேராசிரியர்
ராஜினி திராணகமவின் படுகொலை செய்ததும் மண்டையன் குழுவை சேர்ந்த கார்த்திக்கும், தோமசும் தான்.

விடுதலை புலிகளை போர்க்களத்தில் எதிர்கொள்ள முடியாது, கடைசியில் இந்திய உளவுத்துறையின் கூலிப்படையாக மாறிய EPRLF, எந்த மக்களுக்காக போராடுகிறோம் என்று ஆரம்பித்தார்களோ, கடைசியில் அந்த மக்களையே கொன்று குவிக்கும் ஒரு கொலைக்கார கூட்டமாக மாறினார்கள்..  

-Mr. பழுவேட்டரையர்
7/3/2022

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...