Skip to main content

சீன Colonyயாகும் கொழும்பு துறைமுக நகரம்

இலங்கையில் சீனாவின் துறைமுக நகர திட்டத்துக்கு ஒரு தனி கொடி, அரசியலமைப்பு மட்டும் தான் இல்லை, மற்றப்படி அது ஒரு சீன colony மாதிரி தான் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வாகிக்க இருக்கும் பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் சட்டத்துக்கு எதிராக சிங்கள தேசத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது.

துறைமுக நகரத்தின் பொருளாதார ஆணைக்குழு சார்ந்த சட்டமூலம் இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் விதமான பல அம்சங்களை கொண்டுள்ளதாக இருக்கிறது.

அந்த சட்டத்தின் படி
▪️அந்த ஆணைக்குழுவை நிர்வாகிப்பவர்கள் இலங்கை குடிமக்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையாம். வெளிநாட்டவரும் அதில் இடம்பெறலாமாம்.

▪️இலங்கையர்கள் யாரும் இலங்கை currencyஐ வைத்து அந்த நகரத்தில் முதலீடு செய்ய முடியாதாம், இலங்கை வைப்பகத்தில் உள்ள வெளிநாட்டு currencyஐ பயன்படுத்தி கூட இலங்கையர்கள் முதலீடு செய்ய முடியாதாம்.

▪️அந்த நகரத்தின் சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அந்த நகரத்தை மேற்பார்வை செய்யும் ஆணையமே தீர்த்து வைக்குமாம்.

▪️துறைமுக நகரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தில் சம்பளம் வழங்கப்பட்டால், அதற்கு அவர்கள் இலங்கைக்கு வரி கட்ட தேவை இல்லையாம்.

▪️துறைமுகத்தை மேற்பாவை செய்யும் ஆணையம் இலங்கை மாகாண சபைகளுக்கும் municipal councilகளுக்கும் கட்டுப்படாதாம்.

▪️துறைமுக நகரம் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஏதாவது இலங்கையின் நீதித்துறை முன் வந்தால், அந்த வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமாம்.

இப்படி பல சர்ச்சைக்குரிய அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த சட்டமூலம், ஒரு அபிவிருத்தி திட்டம் மாதிரி தெரியவில்லை. இது சீன காலனியின் முதல் prototype தலைநகரம் மாதிரி தான் தெரிகிறது.

-Mr.பழுவேட்டரையர்
19/4/21

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...