Skip to main content

சீன Colonyயாகும் கொழும்பு துறைமுக நகரம்

இலங்கையில் சீனாவின் துறைமுக நகர திட்டத்துக்கு ஒரு தனி கொடி, அரசியலமைப்பு மட்டும் தான் இல்லை, மற்றப்படி அது ஒரு சீன colony மாதிரி தான் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வாகிக்க இருக்கும் பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் சட்டத்துக்கு எதிராக சிங்கள தேசத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது.

துறைமுக நகரத்தின் பொருளாதார ஆணைக்குழு சார்ந்த சட்டமூலம் இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் விதமான பல அம்சங்களை கொண்டுள்ளதாக இருக்கிறது.

அந்த சட்டத்தின் படி
▪️அந்த ஆணைக்குழுவை நிர்வாகிப்பவர்கள் இலங்கை குடிமக்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையாம். வெளிநாட்டவரும் அதில் இடம்பெறலாமாம்.

▪️இலங்கையர்கள் யாரும் இலங்கை currencyஐ வைத்து அந்த நகரத்தில் முதலீடு செய்ய முடியாதாம், இலங்கை வைப்பகத்தில் உள்ள வெளிநாட்டு currencyஐ பயன்படுத்தி கூட இலங்கையர்கள் முதலீடு செய்ய முடியாதாம்.

▪️அந்த நகரத்தின் சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அந்த நகரத்தை மேற்பார்வை செய்யும் ஆணையமே தீர்த்து வைக்குமாம்.

▪️துறைமுக நகரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தில் சம்பளம் வழங்கப்பட்டால், அதற்கு அவர்கள் இலங்கைக்கு வரி கட்ட தேவை இல்லையாம்.

▪️துறைமுகத்தை மேற்பாவை செய்யும் ஆணையம் இலங்கை மாகாண சபைகளுக்கும் municipal councilகளுக்கும் கட்டுப்படாதாம்.

▪️துறைமுக நகரம் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஏதாவது இலங்கையின் நீதித்துறை முன் வந்தால், அந்த வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமாம்.

இப்படி பல சர்ச்சைக்குரிய அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த சட்டமூலம், ஒரு அபிவிருத்தி திட்டம் மாதிரி தெரியவில்லை. இது சீன காலனியின் முதல் prototype தலைநகரம் மாதிரி தான் தெரிகிறது.

-Mr.பழுவேட்டரையர்
19/4/21

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற