Skip to main content

உடைகிறதா ராஜபக்ச குடும்பம்?

சீனாவின் கொழும்பு Port City Project/கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் தொடர்பாக சிங்கள பேரினவாத இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத ராஜபக்ச அரசுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்துவிட்டது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின்படி, சீனா தற்போது கொழும்பில் ஒரு கரையோர நகரத்தை கட்டமைத்து வருகிறது. 
இந்த நகரம் இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்படாமல், ஒரு தனி நாடு போல் இயங்க கூடும் என்ற அச்சம் தற்போது சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து அந்த திட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகளும் சிங்கள தேசத்தில் வலுத்து வருகிறது. தற்போது பல சிங்கள பேரினவாத இயக்கங்கள் சீனாவின் Port City Projectக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக
சிங்கள தேச ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இலங்கையில் சீன projectஐ எதிர்க்கும் பௌத்த துறவிகளையும், தனது கட்சியினரையும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறார்.

ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சியில் அமர முக்கிய காரணமாக இருந்த
Muruttutuwe Ananda Thero எனும் பௌத்த துறவியும் தற்போது ராஜபக்சவுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளார். அவரும் விஜயதாச எனும் ராஜபக்ச கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரும் சமீபத்தில் கோத்தாபய ராஜபக்சவால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்துள்ளதாக ஊடகங்கள் முன் முறையிட்டுள்ளனர்.
அவர்களின் ஊடக சந்திப்பின் பின்னர் பிரச்சனை பெரிய அளவில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

வெளிப்படையாகவே
சீனாவுக்கு ஆதரவாக அடியாள் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச.

இந்நிலையில் ராஜபக்ச குடும்பத்துக்குள் இரண்டு அணிகள்(மகிந்த அணி, கோத்தாபய அணி) உருவாகிவிட்டது என்று சில ஊடகங்கள் எழுத ஆரம்பித்திருக்கிறது. மகிந்தவுக்கும் கோத்தாபயவுக்கும் இடையே விரிசல்கள் உள்ளது போல் ஊடகங்கள் சித்தரித்தாலும், உண்மையில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவாளர்கள் தான் இரு அணிகளாக பிரிந்திருக்கிறார்கள்.

ராஜபக்ஸ சகோதரர்கள் இதுவரை காலமும் தாக்கு பிடிக்க காரணம் மகிந்த ராஜபக்சவின் balancing act தான். மகிந்த கோத்தாபய எனும் இரு சகோதரர்களும் தங்கள் good cop bad cop விளையாட்டை, பிரதமர், ஜனாதிபதி எனும் பதிவுகள் ஊடாகவும் விளையாடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள்.

ராஜபக்ச குடும்பம் தற்போது வலுவிழந்து வருகிறது. அரசியலில் செயல்பட முடியாத அளவுக்கு மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசமாகும் போது, ராஜபக்ச குடும்பமும், கட்சியும் உடையும்..அதை சிங்கள பேரினவாதமே நிகழ்த்தி காட்டும் என்று நினைக்கிறேன்.

-Mr. பழுவேட்டரையர்
18/4/21

Comments

  1. வாழ்க்கை ஒரு வட்டம்! ❤️🔥

    ReplyDelete
  2. இலங்கை அரசு இந்திய வுடன் சேர்ந்து தேசிய இனத்தை படுகொலை செய்தற்கு கிடைத்த பலன்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக