Skip to main content

சண்டையிட முன் சிந்தியுங்கள்

நமக்கெதிரான அவதூறுகள் பரப்பப்படுவது,
நமது எதிர்வினையை எதிர்பார்த்து தான்.
நமது எதிர்வினை
▪️நம் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை மெய்பிக்க உதவ கூடாது.
நமது எதிர்வினை
▪️அவதூறுகளுக்கு வலு சேர்க்க கூடாது.
என்பதில் கவனம் தேவை.

நாம் எங்கே களமாட வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். 
முகலாய மன்னன் Aurangzeb சிறந்த போர் வீரன். அவன் தனது முகலாய பேரரசை விரிவாக்க எல்லைகள் கடந்து போரிட்டான், எல்லா சண்டைகளிலும் கலந்து கொண்டான், இறுதியாக அவன் எல்லையை விரிவாக்க நடத்திய சண்டைகளும், போர்களும், தான் முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு ஒரு விதத்தில் காரணமானது.
என்ன தான் போர்களில் அவன் வென்றாலும், அவனால் தன் பேரரசின் நீட்சியை உறுதி செய்ய முடியவில்லை. He lost focus on important things.
அதனால் நாம் எங்கே, எப்போது யாரோடு சண்டையிடுகிறோம் என்பது முக்கியம்.
எங்கள் ஒவ்வொரு சண்டையும், எங்களது வலிமையை அதிகரிக்க உதவ வேண்டும், எங்களது முன்னேற்றத்துக்கு அது வழிவகுக்க வேண்டும்.
எங்களது கவனத்தை எதிரியிடம் சிதறடிக்கும் சண்டைகளை நாம் தவிர்க்க வேண்டும்.
அனுமானின் வாலை கொளுத்தி பயனில்லை, ராமன் கடல கடக்க முன்னமே அவன் தலைக்கு நாம் குறி வைக்க வேண்டும்.
எங்களது நோக்கம் அனுமான்களையும் தூதுவர்களையும் வீழ்த்துவது அல்ல.
ஊடகங்கள் அனுமானின் வேலையை செய்தால்,
நீங்களும் படைகளை அவர்களுக்கு எதிராக குவிக்க கூடாது, அது முட்டாள்த்தனம்.
உங்களது சண்டை அதுவா?
ஊடகங்களை வீழ்த்தவா நீங்கள் வந்தீர்கள்?
நிராயுதபாணியாக வரும் தூதுவர்களின் தலையை வெட்டுவதா வீரம்?
தூதுவனின் சொற்களில் தொனிக்கும் கொட்டத்தை அடக்க வேண்டும் என்றால்,
அவனை ஏவிவிட்டவர்கள் கோட்டையை வீழ்த்த வேண்டும்.
அது தான் வீரர்களுக்கு, தமிழர்களுக்கு அழகு!
அதை நோக்கி செல்லுங்கள்
சண்டைகளை கவனமாக தேர்ந்தெடுங்கள்.

-Mr. பழுவேட்டரையர்.
13/4/21

Comments

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற